Published : 02 Jun 2025 06:14 AM
Last Updated : 02 Jun 2025 06:14 AM
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் உள்ள சட்டைநாதர் கோயிலில் அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நடிகை கவுதமி நேற்று சுவாமி தரிசனம் செய்தார்.
பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியது: அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி குறித்து விமர்சிக்க ஆதவ் அர்ஜுனாவுக்கு தகுதி இல்லை. இத்தனை ஆண்டுகளாக அரசியலில் சாதித்து, படிப்படியாக கட்சியை ஒருங்கிணைத்து, 4 ஆண்டுகாலம் முதல்வராக சிறப்பாக செயல்பட்ட பழனிசாமி குறித்து ஆதவ் அர்ஜுனா பேசுவது கண்டிக்கத்தக்கது.
மீண்டும் தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைய பாடுபடுவேன். மக்களுக்கான நேர்மையான ஆட்சி நிச்சயம் அமையும் என்றார்.
அதிமுக கூட்டணியில் தவெக இணைய வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு, போகப்போக தெரியும். சரியான நேரத்தில் சரியான முடிவை பழனிசாமி அறிவிப்பார் என தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT