Last Updated : 02 Jun, 2025 07:48 AM

5  

Published : 02 Jun 2025 07:48 AM
Last Updated : 02 Jun 2025 07:48 AM

திமுகவுக்கு வேண்டப்பட்டவர் ஆகிவிட்டாரா வேலுமணி?

அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிசாமியைக் கூட குறைவாகத்தான் தான் விமர்சித்திருப்பார் ஸ்டாலின். அதைவிட பலமடங்கு அவர் வறுத்தெடுத்தது அப்போதைய உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியைத்தான்.

2021 பிப்​ர​வரி​யில் கோவைக்கு ‘உங்​கள் தொகு​தி​யில் ஸ்டா​லின்’ பிரச்​சார பயணம் வந்த ஸ்டா​லின், “ 'ஊழலாட்​சித் துறை' அமைச்​ச​ராக இருக்​கும் வேலுமணி முன்பு எப்​படி இருந்​தார்​... இப்​போது எப்​படி இருக்​கி​றார் என்​பதை நான் சொல்லி நீங்​கள் தெரிந்து கொள்ள வேண்​டியது இல்​லை. அவர் ஒரு ஊழல் சாம்​ராஜ்​யத்​தையே இந்த கோவை​யில் நிறுவி உள்​ளார். இதில் அவரது சகோ​தரர்​கள், பினாமிகள் நீங்​கலாக யாரும் உள்ளே நுழைய முடி​யாது. இவர்​களின் ஊழல்​களைக் கண்​டு​பிடிக்​கும் பத்​திரி​கை​யாளர்​கள் மிரட்​டப்​படு​கி​றார்​கள்.

திமுக​-வின் மாவட்​டச் செய​லா​ளர்​களும் நிர்​வாகி​களும் கைது செய்​யப்​படு​கி​றார்​கள்; மிரட்​டப்​படு​கி​றார்​கள். அந்​தளவுக்கு கோவையையே குத்​தகைக்கு எடுத்​து​விட்​டது போல் அராஜகம் செய்து கொண்டு இருக்​கி​றார். உங்​கள் அராஜகம் முடிவுக்கு வரும் நாள் நெருங்​கு​கிறது வேலுமணி. திமுக ஆட்​சிக்கு வந்​ததும் உங்​கள் மீது நிச்​ச​யம் ஊழல் வழக்​குப் பாயும்” என்று ஆவேசம் குறை​யாமல் பேசி​னார்.

ஸ்டா​லின் இப்​படிப் பேசி​யதை அதி​முக-வுக்​குள்​ளும் சிலர் அப்​போது ரசித்​தனர். அதே​போல் திமுக ஆட்சி அமைந்​ததும் வேலுமணிக்கு வேட்டு நிச்​ச​யம் என அவரால் பாதிப்​புக்கு உள்​ளாகி இருந்த திமுக-​வினர் உள்​ளிட்ட பலரும் பெரிதும் எதிர்​பார்த்​தனர். ஆனால், அப்​படி​யெல்​லாம் எந்த அரசி​யல் அதிசய​மும் நடந்​து​விட​வில்​லை.

ஸ்டா​லின் சொன்​னது போல வேலுமணி மீது ஊழல் வழக்​கைப் பதிவு செய்த லஞ்ச ஒழிப்​புத் துறை​யினர், 2021 ஆகஸ்ட் மாதமே கோவை​யில் உள்ள வேலுமணி​யின் வீடு உள்​ளிட்ட அவர் சம்​பந்​தப்​பட்ட 60 இடங்​களில் அதிரடி சோதனை​களை நடத்தி ஆவணங்​களை அள்​ளினர். சென்னை மற்​றும் கோவை மாநக​ராட்​சிகளில் நடை​பெற்ற டெண்​டர்​களில் 811 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்​திருப்​ப​தாக அறப்​போர் இயக்​க​மும், திமுக அமைப்​புச் செய​லா​ளர் ஆர்​.எஸ்​.​பார​தி​யும் அளித்த புகார்​களின் அடிப்​படை​யில் இந்த நடவடிக்​கையை எடுத்​தது லஞ்ச ஒழிப்​புத் துறை.

லஞ்ச ஒழிப்​புத் துறை​யினர் ரெய்​டுக்கு வரப்​போகும் விஷ​யம் எப்​படியோ(!?) முன்​கூட்​டியே லீக் ஆனதால் ரெய்டு தொடங்​கிய சற்று நேரத்​தில் வேலுமணி​யின் ஆதர​வாளர்​கள் கோவை​யில் அவரது வீட்டு வாசலில் குவிந்​தனர். அவர்​களுக்​கெல்​லாம் ரோஸ் மில்க், டீ, இரண்டு வேளை உணவு உள்​ளிட்​ட​வற்றை வழங்கி அந்த இடத்​தையே பிக்​னிக் ஸ்பாட் ஆக்கி ரெய்டு நடவடிக்​கை​யையே கேலிக்​கூத்​தாக்​கியது வேலுமணி தரப்​பு.

ஆனால், இந்த ரெய்​டுக்​குப் பிறகு வேலுமணி மீது அரசு தரப்​பிலிருந்து எவ்​வித நடவடிக்கையும் எடுத்ததாக தெரிய​வில்​லை. இதோ, நான்கு ஆண்​டு​கள் கடந்​து​விட்​டது. வேலுமணி முன்பை விட இன்னும் கெத்தாகவே சுற்றிவருகிறார். அண்​மைக் கால​மாக லஞ்ச ஒழிப்​புத் துறை​யினர் பதிவு செய்​யும் வழக்​கு​களின் அடிப்​படை​யில் அமலாக்​கத்​துறை​யும் தனி​யாக வழக்​குப் பதிவு செய்து விசா​ரணை நடத்தி ரெய்​டு​களை​யும் அரங்​கேற்றி வரு​கிறது.

ஆனால், இதெல்​லாம் பாஜக-வை எதிர்க்​கும் திமுக உள்​ளிட்ட கட்சி பிர​முகர்​களுக்கு மட்​டும் தான் போலிருக்​கிறது என்று கேட்​கும் கோவை திமுக-​வினர், “அமலாக்​கத்​துறை உண்​மை​யிலேயே நேர்​மை​யாகச் செயல்​படு​கிறது என்​றால் இந்​நேரம் வேலுமணி வீட்​டிலும் ரெய்டு நடத்தி அவரை​யும் விசா​ரணை வளை​யத்​துக்​குள் கொண்டு வந்​திருக்க வேண்​டும். இத்​தனைக்​கும், மத்​திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்​டத்​திலேயே ஊழல் செய்​திருப்​ப​தாக வேலுமணிக்கு எதி​ராக புகார் கூறப்பட்டது.

அப்​படி இருந்​தும் அவருக்கு எதி​ராக எந்த நடவடிக்​கை​யை​யும் எடுக்​க​வில்லை அமலாக்​கத்​ துறை. ஏனென்​றால், அதி​முக தலை​மையைப் போலவே பாஜக தலை​மைக்கும் விசு​வாச​மாக இருப்​பவர் வேலுமணி. இன்​னும் சொல்​லப் போனால், மீண்​டும் அதி​முக - பாஜக கூட்​டணி உரு​வாக பால​மாக இருந்​தவர். இத்​தனை ‘மெரிட்’ இருக்​கை​யில் அவரை எப்​படித் தொடு​வார்​கள்?” என்று கேள்வி எழுப்​பு​கி​றார்​கள்.

கட்சி சாரா பொதுநல​வா​தி​களோ, “கோவை மாவட்​டத்​தில் திமுக-வுக்கு ஓட்டு வாங்​கு​வதற்கு ஒரு இலக்காக வேலுமணி அப்​போது தேவைப்​பட்​டார். ஆனால், வேலுமணிக்கு எதி​ராக ஸ்டா​லின் அத்​தனை தீவிர​மாக பிரச்​சா​ரம் செய்​தும் கோவை மாவட்​டத்​தில் உள்ள 10 தொகு​தி​களி​லும் அதி​முக தான் வெற்​றி​பெற்​றது. அந்த ஆதங்​கத்​தில் தானோ என்​னவோ வேலுமணியை குறிவைப்பதை விட்​டு​விட்டு அடுத்த வேலையை பார்க்க ஆரம்​பித்​து​விட்​டது திமுக.

இந்​தத் தேர்​தலுக்கு பிரச்​சா​ரத்​துக்கு வரும் போது, வேலுமணி மீது நடவடிக்கை என்​னா​யிற்று என்று கோவை மக்​கள் கேட்​டால் ஸ்டா​லின் அதற்கு என்ன பதில் வைத்​திருக்​கி​றார் என்று தெரிய​வில்​லை” என்​கி​றார்​கள். கோவை​யில் திமுக-​வின் வெற்​றிக்கே சவாலாக இருக்​கும் வேலுமணி இப்​போது திமுக-வுக்கு வேண்​டப்​பட்​ட​வ​ராகி​விட்​டா​ரா?” என்​றும் சிலர் சந்​தேகக் கேள்வி எழுப்​பு​கி​றார்​கள்.

வேலுமணி மீது சட்ட நடவடிக்​கை​ எடுப்பதற்கு திமுக தயங்குகிறதா என கோவை வடக்கு மாவட்ட திமுக செய​லா​ளர் தொண்​டா​முத்​தூர் ரவி​யிடம் கேட்​டதற்​கு, “வேலுமணி மீதான ஊழல் குற்​றச்​சாட்​டு​கள் தொடர்​பாக தமிழக அரசு உரிய ஆதா​ரங்​களு​டன் நீதி​மன்​றத்​தில் தண்​டனை பெற்று தர தீவிர நடவடிக்​கை​களை எடுத்து வரு​கிறது. அதேசம​யம், அவர் இப்​போது எம்​எல்​ஏ-​வாக இருப்​ப​தால் அவர் மீது நடவடிக்கை எடுக்க ஆளுநர் அனுமதி அளிக்க வேண்​டும். ஆனால் ஆளுநர் அதற்​கான அனு​ம​தியை தரா​மல் தாம​திப்​ப​தால் தடங்​கலாகி நிற்​கிறது” என்​றார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x