Published : 01 Jun 2025 12:50 PM
Last Updated : 01 Jun 2025 12:50 PM

கோடை விடுமுறை நிறைவு: உயர் நீதிமன்றத்தின் வழக்கமான பணிகள் நாளை தொடக்கம்

சென்னை: ஒரு மாத கோடை விடு முறைக்குப்பிறகு சென்னை உயர் நீதிமன் றம் தனது அன்றாடப் பணிகளை நாளை முதல் தொடங்குகிறது. சென்னை உயர் நீதி மன்றத்தில் நீதிபதியாக கர்நாடகாவில் இருந்து வந்துள்ள ஹேமந்த சந்தன் கவுடர் நாளை பொறுப்பேற்கவுள்ளார்.

சென்னை உயர் நீதி மன்றம் மற்றும் உயர் நீதி மன்ற மதுரை கிளைக்கு கடந்த மே 1-ம் தேதி முதல் ஜூன் 1-ம் தேதியான இன்று வரை கோடை விடுமுறை விடப்பட்ட நிலையில், நாளை (ஜூன் 2) முதல் உயர்நீதிமன்றம் தனது அன்றாடப் பணிகளை தொடங்கவுள்ளது. கோடை விடுமுறையில் அவசர வழக்குகளை விசாரிக்க பிரத்யேக அமர்வுகள் அமைக் கப்பட்டு வழக்குகள் விசாரிக்கப்பட்டன.

கர்நாடக நீதிபதி: இந்நிலையில் ஜூன் 2-ம் தேதியான நாளை முதல் உயர் நீதிமன்றம் தனது வழக்கமான பணிகளை மேற்கொள்ளவுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்துக்கு கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் இருந்து மாறுதலாகி வரும் நீதிபதி ஹேமந்த் சந்தன் கவுடர் நாளை காலை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் முன்னிலையில் பொறுப் பேற்கவுள்ளார்.

ஹேமந்த சந்தன் கவுடர்

நீதிபதிகள் 60 ஆக உயர்வு: சென்னை உயர்நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் பணியிடங்கள் மொத்தம் 75 ஆக உள்ள நிலையில். தற்போது 59 நீதிபதிகள் பணியில் உள்ளனர். நீதிபதி ஹேமந்த் சந்தன் கவுடர் பதவி யேற்றால் இந்த எண் ணிக்கை 60 ஆக உயரும். தவிர இந்த மாதத்தில் மேலும் 2 நீதிபதிகள் பணி ஓய்வு பெறவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x