Published : 01 Jun 2025 12:10 AM
Last Updated : 01 Jun 2025 12:10 AM

தமிழக அரசு பணியில் இருந்து ஒரே நாளில் 8,144 பேர் ஓய்வு: காலி பணியிடங்கள் அதிகரிப்பு

சென்னை: தமிழக அரசு பணி​யில் நேற்று ஒரே​நாளில் மட்​டும் 8,144 அரசு ஊழியர்​கள், ஆசிரியர்​கள் பணி​யில் இருந்து ஓய்​வு​பெற்றனர்.

தமிழக அரசின் பல்​வேறு துறை​களில் ஏறத்​தாழ 9 லட்​சத்து 50 ஆயிரம் ஊழியர்​கள் பல்​வேறு நிலைகளில் பணி​யாற்றி வரு​கின்​றனர். முன்பு தமிழக அரசு ஊழியர்​களின் ஓய்வு வயது 58 ஆக இருந்​தது.

கடந்த அதி​முக ஆட்​சிக்​காலத்​தில் ஓய்வு வயது 58-லிருந்து 60 ஆக உயர்த்​தப்​பட்​டது. அந்த வகை​யில் 60 வயதை எட்​டிய ஊழியர்​கள் பணி​யில் இருந்து ஓய்​வு​பெறு​வர். இந்​நிலை​யில், நேற்று (மே 31)ஒரே​நாளில் மாநிலம் முழு​வதும் 8,144 ஊழியர்​கள், அரசு பள்ளி ஆசிரியர்​கள் ஓய்​வு​பெற்​றனர். அவர்​களில் குரூப் அதி​காரி​கள் 424 பேர். குருப்​-பி அலு​வலர்​கள் 4,399 பேர். குருப்​-சி பணி​யாளர்​கள் 2,185 பேர். குருப்​-டிபணி​யாளர்​கள் 1,136 பேர். தலை​மைச் செயல​கத்​தில் மட்​டும் 30 அலுவலர்கள் நேற்று ஓய்வு பெற்​றனர்.

தமிழக அரசு பணி​யில் நேரடி குருப் ஏ பணி​யிடங்​கள் டிஎன்​பிஎஸ்சி குருப்-1 தேர்வு வாயி​லாக​வும், குருப்​-பி பணி​யிடங்​கள் ஒருங்​கிணைந்த குருப்​-2, மற்​றும் குருப்-2 தேர்வு மூல​மாக​வும், குருப்​-சி பணி​யிடங்​கள் ஒருங்​கிணைந்த குருப்-4 தேர்வு வாயி​லாக​வும் நிரப்​பப்​படு​கின்​றன. அதே​போல், அரசு கல்​லூரி உதவி பேராசிரியர், அரசு பள்ளி முதுகலை பட்​ட​தாரி ஆசிரியர், பட்​ட​தாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர், சிறப்​பாசிரியர், வட்​டார கல்வி அலு​வலர் பணி​யிடங்​கள் ஆசிரியர் தேர்வு வாரி​யத்​தின் மூல​மாக நிரப்​பப்​படு​கின்​றன.

அவுட்​-சோர்​சிங்: அந்த வகை​யில் ஓய்​வு​பெற்​றவர்​களால் ஏற்​படும் காலி​யிடங்​கள் பதவி​களின் நிலைக்​கேற்ப டிஎன்​பிஎஸ்​சி, டிஆர்பி மற்​றும் சீருடைப் பணி​யாளர் தேர்வு வாரி​யம், மருத்​துவ பணி​யாளர் தேர்வு வாரி​யம் ஆகியவை மூல​மாக நிரப்​பப்​படும். மாநில அரசின் பல்​வேறு துறை​களில் 4 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட காலி​யிடங்​கள் இருப்​ப​தாக​வும் அவற்றை உடனடி​யாகநிரப்ப வேண்​டும் என்​றும் அரசு ஊழியர் சங்​கங்​கள் தொடர்ந்து வலி​யுறுத்தி வரு​கின்​றன. குருப்​-டி காலிப் பணி​யிடங்​களை வெளி​முகமை (அவுட்​-சோர்​சிங்) முறை​யில் நிரப்​பப்​பட்டு வரு​வ​தாக​ அரசு ஊழியர் சங்கங்கள் தமிழக அரசு மீது குற்​றம்​சாட்டி வரு​கின்றன என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x