Last Updated : 31 May, 2025 02:15 PM

 

Published : 31 May 2025 02:15 PM
Last Updated : 31 May 2025 02:15 PM

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு திண்டுக்கல்லில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை

திண்டுக்கல்: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு திண்டுக்கல் அடுத்த கோபால்பட்டி வாரச்சந்தையில் இன்று (மே 31) ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகேயுள்ள கோபால்பட்டியில் வாரந்தோறும் சனிக்கிழமை வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். தற்போது மாவட்டம் முழுவதும் கிராமப்புறங்களில் உள்ள கோயில்களில் வைகாசி திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவில் நேர்த்திக்கடன் செலுத்தவும், திருமணம், காதணி விழா உள்ளிட்ட விசேஷங்களில் அசைவ விருந்து அளிப்பதற்காகவும், ஜூன் 7-ம் தேதி பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இன்று (மே 31) வாரச்சந்தையில் வழக்கத்தை விட ஆடுகள் விற்பனை 2 மடங்கு கூடுதலாக விற்பனையாது.

ஆடுகள் வாங்கவும், விற்பனை செய்யவும் திண்டுக்கல், நத்தம், கோசுகுறிச்சி, அய்யலூர் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து காலை முதலே வியாபாரிகள், மக்கள் அதிகளவில் வந்திருந்தனர். எடைக்கு ஏற்றவாறு ஒரு ஆடு குறைந்தபட்சம் ரூ.5 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.20 ஆயிரம் வரை விற்பனையானது. இன்று (மே 31) ஒரு நாள் மட்டும் ரூ.1 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x