Published : 31 May 2025 06:30 AM
Last Updated : 31 May 2025 06:30 AM

பழனிசாமியுடன் சுதீஷ் திடீர் சந்திப்பு

சென்னை: ​மாநிலங்​கள​வைத் தேர்​தலில் இடம் ஒதுக்​கீடு தொடர்​பாக அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமியை, தேமு​திக பொருளாளர் சுதீஷ் நேற்று சந்​தித்து பேசி​னார். கடந்த மக்​கள​வைத் தேர்​தலில் அதி​முக கூட்​ட​ணி​யில் இணைந்து தேமு​திக போட்​டி​யிட்​டது. அந்த கூட்​ட​ணி​யில் 5 இடங்​கள் தேமு​தி​க​வுக்கு வழங்​கப்​பட்​டன. ஒரு மாநிலங்​களவை இடமும் தங்​களுக்கு ஒதுக்​கப்​பட்​ட​தாக தேமு​திக தரப்​பில் கூறப்​பட்​டது. ஆனால், அதி​முக அதற்கு மறுப்பு தெரி​வித்​தது.

தற்​போது உறுதி அளித்​த​படி தங்​களுக்கு ஓரிடத்தை அதி​முக வழங்க வேண்​டும் என தேமு​திக பொதுச்​செய​லா​ளர் பிரேமலதா சமீபத்​தில் தெரி​வித்​திருந்​தார். இந்​நிலை​யில், அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமியை சென்​னை​யில் உள்ள அவரது இல்​லத்​தில் தேமு​திக பொருளாளர் எல்​.கே.சு​திஷ் நேற்று சந்​தித்​துப் பேசி​னார்.

அப்​போது சட்​டப்​பேரவை தேர்​தலில் அதி​முக கூட்​ட​ணி​யில் இணைந்து போட்​டி​யிட விரும்​புவ​தாக​வும், தற்​போது மாநிலங்​களவை தேர்​தலில் தங்​களுக்கு ஓரிடம் வழங்க வேண்​டும் எனவும் சுதிஷ் தரப்​பில் கேட்​ட​தாக கூறப்​படு​கிறது. அதற்கு கட்சி நிர்​வாகி​களு​டன் ஆலோ​சித்து பதில் அளிப்​ப​தாக அதி​முக தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​ட​தாக​ தகவல்​கள்​ தெரிவிக்கின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x