Published : 31 May 2025 06:28 AM
Last Updated : 31 May 2025 06:28 AM
மதுரை: அகில பாரத வித்யார்தி பரிஷத் (ஏபிவிபி) தென் தமிழக இணைச் செயலாளர் ஜெ.டி.விஜயராகவன் வெளியிட்டுள்ள அறிக்கை: பள்ளி மாணவர்களுக்கு அறிவுரை வழங்குவதாக கூறிக்கொண்டு, தனது அரசியல் செல்வாக்கை உயர்த்தும் நோக்கில் மாணவர்களிடம் தவறான கருத்துகளைத் தெரிவிக்கும் தவெக தலைவர் விஜய்யை ஏபிவிபி கண்டிக்கிறது.
அரசியல் சூழ்ச்சி தெரியாத பள்ளி மாணவர்களிடம் நீட் தேர்வு குறித்த எதிர்மறை எண்ணங்களை புகுத்தி, அரசியல் பேசி, மாணவர்களிடம் வன்முறையை தூண்டி வருகிறார் விஜய். பள்ளி மாணவர்களிடம் உண்மைக்குப் புறம்பான தகவல்களைத் தெரிவித்து, மாணவர்களை திசை திருப்புவதை விஜய் தவிர்க்க வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT