Published : 31 May 2025 04:32 AM
Last Updated : 31 May 2025 04:32 AM

இதுவரை ஊழல் செய்யாதவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்: மாணவர்களுக்கு விஜய் அறிவுரை

தமிழகம், புதுவையில் 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு பொது தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தவெக சார்பில் மாமல்லபுரம் அருகே நேற்று பாராட்டு விழா நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்துகொண்டு மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கினார். | படம்: எம்.முத்துகணேஷ் |

மாமல்லபுரம்: உறு​தி​யாக இருந்​தால் நிச்​ச​யம் சாதிக்க முடி​யும் என்று பள்ளி மாணவர்​களுக்கு தமிழக வெற்​றிக் கழக தலை​வர் விஜய் அறி​வுரை வழங்​கி​யுள்​ளார். தமிழகம் மற்​றும் புதுச்​சேரி​யில் 10, பிளஸ் 2 வகுப்​பு​களில் தொகுதி வாரி​யாக சிறந்த மதிப்​பெண்​கள் பெற்ற மாணவ, மாணவி​களுக்​கு, தமிழக வெற்​றிக் கழகம் சார்​பில் கல்வி விருது வழங்​கும் விழா, மாமல்​லபுரம் அருகே தனி​யார் சொகுசு விடு​தி​யில் நேற்று நடை​பெற்​றது.

நிகழ்ச்​சி​யில் விஜய் பேசி​ய​தாவது: கல்​வி​யில் சாதிக்க முடி​யாதது எது​வும் இல்​லை. நீட் தேர்வு மட்​டும் உலகம் அல்ல. நீட்டை தாண்​டிய இந்த உலகம் ரொம்ப பெரியது. அதில், நீங்​கள் சாதிக்க வேண்​டியது நிறைய உள்​ளது. அதனால், உங்​களின் மனநிலையை மிக​வும் தைரிய​மாக வைத்​துக் கொள்ள வேண்​டும். ஜனநாயகம் என்ற ஒன்று இருந்​த​தால்​தான், இந்த உலகம் சுதந்​திர​மாக இருக்க முடி​யும்.

பணம் கொடுத்து வாக்கு வாங்கி வெற்றி பெற்று விடலாம் என நினைப்​பவர்​களின் செயலை ஊக்​கப்​படுத்த வேண்​டாம். பணம் வாங்​காதீர்​கள், உங்​களின் பெற்​றோரை​யும் வாங்க வேண்​டாம் எனக் கூறுங்​கள். அதைப் பின்​பற்​றுங்​கள். ஆனால், அடுத்த ஆண்டு பாருங்​கள் வண்​டி, வண்​டி​யாக கொண்டு வந்து கொட்​டு​வார்​கள். அத்​தனை​யும் உங்​களிட​மிருந்து கொள்​ளை​யடிக்​கப்​பட்ட பணம்​தான். நல்​ல​வர்​கள், நம்​பிக்​கை​யானவர்​கள், இது​வரை ஊழல் செய்​யாதவர்​களை தேர்ந்​தெடுக்க வேண்​டும்.

குழந்​தைகளுக்கு பெற்​றோர் மிக​வும் அழுத்​தம் கொடுக்க வேண்​டாம். அவர்​களுக்கு பிடித்த துறை​களில் சாதித்து காட்​டு​வார்​கள். அதே​போல், சாதி, மதத்தை வைத்து பிரி​வினை வளர்க்​கும் சிந்​தனை பக்​கம் செல்​லாதீர்​கள். விவ​சா​யிகள், தொழிலா​ளர்​கள் சாதி, மதம் பார்த்து பொருட்​களை உற்​பத்தி செய்​ய​வில்​லை. அவற்றை போதை பொருட்​களைப்​போல ஒதுக்​கு​வது​தான் நல்​லது. உறு​தி​யாக இருந்​தால் நிச்​ச​யம் சாதிக்க முடி​யும். இவ்​வாறு அவர் பேசி​னார்.

பின்​னர், பிளஸ் 2 வகுப்​பில் தமிழக அளவில் 599 மதிப்​பெண் பெற்று முதலிடம் பிடித்த மாணவி ஓவியா அஞ்​சலி மற்​றும் 10-ம் வகுப்​பில் 499 மதிப்​பெண் பெற்று முதலிடம் பிடித்த சோபியா ஆகியோ​ருக்கு வைரத்​தோடு மற்​றும் பாராட்டு சான்​றினை விஜய் வழங்கினார்.

பின்​னர், 88 தொகு​தி​களில் சிறந்த மதிப்​பெண்​கள் பெற்ற 676 மாணவ, மாணவி​களுக்கு சான்​றிதழ். காசோலைகளை வழங்கி பாராட்​டி​னார்.இந்​நிகழ்ச்​சி​யில், அக்​கட்​சி​யின் பொதுச்​செய​லா​ளர் புஸ்ஸி ஆனந்த், தேர்​தல் பிரிவு மேலாண்மை பொதுச் செய​லா​ளர் ஆதவ் அர்​ஜூனா மற்​றும்​ மாணவ, மாணவி​கள்​, பெற்​றோர்​ உட்​பட பலர்​ கலந்​து கொண்​டனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x