Published : 29 May 2025 09:37 AM
Last Updated : 29 May 2025 09:37 AM

பாமக தலைவராக அன்புமணி... இளைஞர் சங்க தலைவராக சவுமியா! - சமாதான உடன்படிக்கைக்கு தயாராகிறதா தைலாபுரம்?

“50 தொகுதிகளில் படுத்துக் கொண்டே வெற்றி பெறும் வித்தையை தெரிந்து வைத்துள்ள மருத்துவர் அய்யா, மகனையும் கட்சியையும் தனது கட்டுக்குள் வைத்திருக்கும் வித்தையை படிக்க மறந்துவிட்டாரே” - பாமக-வில் தந்தைக்கும் மகனுக்கும் இடையே நடக்கும் அதிகார யுத்தத்தை அரசியல் வட்டாரத்தில் இப்படித்தான் பேசுகிறார்கள்.

பாமக பொதுக்​குழு​வில், தனது மகள் வழி பேரனை பாமக இளைஞர் சங்க தலை​வ​ராக ராம​தாஸ் அறி​வித்​த​தில் வெளிப்​படை​யாக வெடித்த அப்பா - பிள்​ளைக்​கான அதி​கார யுத்​தம் இருக்க இருக்க உக்​ர​மாகிக் கொண்டே தான் போகிறது. இந்த நிலை​யில், தனது அதி​காரத்தை நிலைநிறுத்​திக் காட்ட பாமக மற்​றும் வன்​னியர் சங்க நிர்​வாகி​களை அழைத்து ராம​தாஸ் நடத்​திய ஐந்து ஆலோ​சனைக் கூட்​டங்​களும் பிசுபிசுத்​துப் போய்​விட்​டன. கட்​சிக்​குள் இனி அன்​புமணி தான் எல்​லாமே என தெளி​வாக தெரிந்து போன​தால் பெரு​வாரி​யான நிர்​வாகி​கள் தோட்டத்து ஆலோ​சனைக் கூட்​டங்​களை தைரிய​மாகப் புறக்​கணித்து விட்​டனர். இதில் 3 எம்​எல்​ஏ-க்​களும் உள்​ளடக்​கம்.

தனது ஆலோ​சனை கூட்​டத்​துக்கு வரா​மல் புறக்​கணிப்​பவர்​களை தயவு பார்க்​காமல் பொறுப்​பிலிருந்து நீக்​கும் முடி​வில் தான் ராம​தாஸ் முதலில் இருந்​தா​ராம். ஆனால், சுமார் 80 சதவீதத்​துக்​கும் மேற்​பட்ட நிர்​வாகி​கள் புறக்​கணித்​த​தால், கட்சி நலன் கருதி யாரை​யும் கைவைக்க முடி​யாமல் பொறுமை காக்​கி​றா​ராம் மருத்​து​வர். அதேசம​யம், வெளிப்​படை​யாகப் பார்த்​தால் இது அதி​காரப் போட்​டி​யாக தெரிந்​தா​லும் உள்​ளுக்​குள் வேறு பல கணக்​கு​களும் ஓடிக்​கொண்​டிருப்​ப​தாகச் சொல்​கி​றார்​கள்.

இது தொடர்​பாக பாமக வட்​டாரத்​தில் நம்​மிடம் பேசி​ய​வர்​கள், “கட்​சிக்​கான வரவு செல​வு​கள், அறக்​கட்​டளை சொத்து உள்​ளிட்ட அனைத்​தை​யும் இப்​போது மருத்​து​வர் அய்யா தான் கவனித்து வரு​கி​றார். பாமக தலை​வ​ராக ஜி.கே.மணி இருந்த வரை இதில் எந்​தச் சிக்​கலும் ஏற்​பட​வில்​லை. பாமக தலை​வ​ராக அன்​புமணியை அறி​வித்த பிறகு தான் சிக்​கல் ஆரம்​ப​மானது. முன்​பு, ஒன்​மேன் ஆர்​மி​யாக அனைத்து முடிவு​களை​யும் தானே எடுத்து வந்த அய்​யா​வுக்​கு, மகன் தலை​வ​ராக வந்த பிறகு அப்​படி சுதந்​திர​மாக செயல்பட முடிய​வில்லை.

அய்யா எந்த முடிவை எடுத்​தா​லும் ஏன், எதற்கு என்ற கேள்வி அன்​புமணி தரப்​பிலிருந்து வந்து விழுந்​தது. இது பல நேரங்​களில் அய்​யா​வுக்கு பெருத்த சங்​கடங்​களை உண்​டாக்​கியது. இதனிடையே, மரு​மகள் சவுமியா அன்​புமணி​யும் கட்சி நடவடிக்​கை​களில் தலை​யிட ஆரம்​பித்​தார். இதை அய்யா சுத்​த​மாக விரும்​ப​வில்​லை. சவுமியா சொல்​லித்​தான் அன்​புமணி, பல விஷயங்களிலும் கேள்விகளை எழுப்புகி​றார் என்​பது அய்​யா​வின் புரிதல்.

இந்த நிலை​யில் தான் அய்​யா​வின் விருப்​பத்​துக்கு மாறாக 2024 மக்​கள​வைத் தேர்​தலில் பாஜக-வுடன் கூட்​டணி அமைத்​தார் அன்​புமணி. இதன் பின்​னணி​யில், தானோ, சவுமி​யாவோ மத்​திய அமைச்​சர் ஆகி​விட வேண்​டும் என்ற திட்​டம் அன்​புமணிக்கு பிர​தான​மாக இருந்​தது. ஆனால், எதிர்​பார்த்​தது எது​வும் நடக்​காது போன​தால், ‘இனி​யா​வது நான் சொல்​வதைக் கேளுங்​கள்’ என்று சொல்​லிப்​பார்த்​தார் அய்​யா. ஆனால், அவர் சொல் எடு​பட​வில்​லை. தேர்​தல் சமயத்​தில் நடந்த வரவு செலவு​கள் குறித்​தும் ‘கணக்கு வழக்​கு’ சர்ச்சை வெடித்​திருக்​கிறது. இதையெல்​லாம் பார்த்​து​விட்​டுத் தான் மகள் வழி பேரன் முகுந்​தனை பாமக இளைஞர் சங்க தலை​வ​ராக திடீரென அறி​வித்​தார் அய்​யா. இதற்கு அன்​புமணி பொது மேடை​யிலேயே எதிர்ப்​புக் கொடி தூக்​கி​னார்.

இந்த நிலையில், அதனால் மக்​கள​வைத் தேர்​தலைப் போல கூட்​டணி விஷ​யத்​தில் அன்​புமணி அவசரப்​பட்​டு​விடக்கூடாது என்​ப​தற்​காக, அதி​முக கூட்​ட​ணியை இறு​தி​செய்ய அமித் ஷா சென்​னைக்கு வந்த நாளில் அன்புமணியை பாமக செயல்​தலை​வராக்​கி, தலை​வர் பொறுப்பை தானே எடுத்​துக் கொண்​டார் அய்​யா. இதை​யும் அன்​புமணி துளி​யும் எதிர்​பார்க்​க​வில்​லை. அய்​யா​வின் இந்த நடவடிக்​கைக்​குப் பிறகு, அன்​புமணி​யும் தனது ஆதர​வாளர்​களை தக்​கவைக்​கும் வேலை​களில் தீவிர​மாக இறங்​கி, அதில் வெற்​றி​யும் கண்​டு​விட்​டார்.

பாமக மற்​றும் வன்​னியர் சங்க நிர்​வாகி​களில் பெரும்​பகு​தி​யினர் அன்​புமணி பக்​கமே நிற்​ப​தால் அய்​யா​வால் அடுத்​த கட்​டத்​துக்​குப் போக​முடிய​வில்​லை. இதனால் நாளுக்கு நாள் அன்​புமணி​யின் கை ஓங்​கிக் கொண்டே வரு​கிறது. இரு​வ​ருக்​கும் இடை​யில் ஜி.கே.மணி​தான் இப்​போது சமா​தான தூது சென்​றபடி இருக்​கி​றார். ஆனால், தூதராக ஜி.கே.மணி வரு​வதையே அன்​புமணி அவ்​வள​வாய் விரும்​பவில்லை என்​கி​றார்​கள். கட்​சிக்​குள் தனது செல்​வாக்​கைக் காட்ட அய்யா அதிரடி நடவடிக்​கை​களை எடுத்​தார். ஆனால், நடப்​பதை எல்​லாம் பார்த்​தால் அது அவரையே பூம​ராங் கணக்​காய் தாக்​கி​விடும் போலிருக்​கிறது” என்​றார்​கள்.

இதனிடையே, மீண்​டும் அன்​புமணியை கட்​சித் தலை​வ​ராக்​கு​வது, இளைஞர் சங்க தலை​வ​ராக சவுமி​யாவை நியமிப்​பது, வன்​னியர் சங்க தலை​வர் பொறுப்பை முகுந்​தனுக்கு தரு​வது என ஒரு சமா​தான உடன்​படிக்கை தைலாபுரம் தோட்​டத்​தில் பேசப்​பட்டு வரு​வ​தாக சொல்​லப்​படு​கிறது. இதற்கு மத்​தி​யில், “எனக்​கும் அன்​புமணிக்​கும் மனக்​கசப்பு இல்​லை. கசப்பு என்று எப்​போதும் நான் கூறியதும் இல்​லை; இனிப்​பான செய்​தி​யை​தான் கூறி வரு​கிறேன்.

இது தொடர்​பாக அடுத்த வியாழக்​கிழமை (மே 29-ம் தேதி) பேசலாம்” என செய்​தி​யாளர்​களுக்கு சேதி சொல்லி இருக்​கி​றார் ராமதாஸ். அதே​போல். தரு​மபுரி மாவட்​டம் கடத்​தூரில் 24-ம் தேதி நடை​பெற்ற கூட்​டத்​தில் பேசிய அன்​புமணி, “அப்​படி நான் என்ன தவறு செய்​தேன்? ஒரு மாத கால​மாக மன உளைச்​சலில் இருக்​கிறேன். எனக்கு தூக்​கமே வரவில்​லை” என குமுறி இருக்​கி​றார்.

தந்​தை​யின் கோபத்துக்கும் மகனின் குமுறலுக்​கும் தீர்வு கிடைக்​கிறதா என்று பொறுத்​திருந்து பார்​க்​கலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x