Published : 27 May 2025 06:15 AM
Last Updated : 27 May 2025 06:15 AM
சென்னை: சென்னை எழும்பூர் - விழுப்புரம் மார்க்கத்தில் காட்டங்குளத்தூர் யார்டில் பொறியியல் பணி நடக்கவுள்ளதால், மின்சார ரயில் சேவையில் இன்று மாற்றம் செய்யப்பட உள்ளது.
சென்னை கடற்கரை - செங்கல்பட்டுக்கு இன்று (மே 27) காலை 10.56, முற்பகல் 11.40, நண்பகல் 12.28 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள், கூடுவாஞ்சேரி - செங்கல்பட்டு இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளன. சென்னை கடற்கரை - செங்கல்பட்டுக்கு இன்று நண்பகல் 12.40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், தாம்பரம் -செங்கல்பட்டு இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது.
செங்கல்பட்டு - சென்னை கடற்கரைக்கு இன்று நண்பகல் 12.00, மதியம் 1.10, 1.45 ஆகிய நேரங்களில் புறப்பட வேண்டிய மின்சார ரயில்கள், செங்கல்பட்டு - கூடுவாஞ்சேரி இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது.
செங்கல்பட்டு - சென்னை கடற்கரைக்கு இன்று பிற்பகல் 2.20 மணிக்கு இயக்க வேண்டிய மின்சார ரயில், செங்கல்பட்டு - தாம்பரம் இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது. இத்தகவல் சென்னை ரயில்வே கோட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT