Last Updated : 27 May, 2025 09:09 AM

 

Published : 27 May 2025 09:09 AM
Last Updated : 27 May 2025 09:09 AM

கூண்டோடு ராஜினாமா..? - மாநகரச் செயலாளருக்கு எதிராக புதுக்கோட்டை திமுக அதிரடி!

தேர்தலுக்கு கட்சியினரை தயார்படுத்துவதற்காக மண்டல வாரியாக பொறுப்பாளர்களை மாய்ந்து மாய்ந்து அறிவித்துக் கொண்டிருக்கிறார் திமுக தலைவர் ஸ்டாலின். ஆனால், கட்சித் தலைமையால் மூன்று மாதங்களுக்கு முன்பு மாநகரச் செயலாளராக அறிவிக்கப்பட்ட ஒருவருடன் கீழ்மட்ட நிர்வாகிகள் ஒத்துழையாமை இயக்கம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். புதுக்கோட்டையில் தான் இந்தக் கூத்து.

புதுக்​கோட்டை மேயர் தில​கவ​தி​யின் கணவர் செந்​தில் தான் புதுகை மாநகர திமுக செய​லா​ள​ராக முன்பு இருந்​தார். உடல்​நலக் குறை​வால் கடந்த டிசம்​பரில் அவர் திடீரென உயி​ரிழந்​தார். மகனுக்கு திரு​மணம் நிச்​ச​யிக்​கப்​பட்​டிருந்த நிலை​யில் இந்​தச் சம்​பவம் நடந்​தது மாநகர திமுக-​வினரை நிலை​குலை​யச் செய்​தது.

இந்த நிலை​யில் இந்த சோகமெல்​லாம் மறைந்து அடுத்த சில வாரங்​களில் நடந்த செந்​தி​லின் மகன் கணேஷின் திருமண வரவேற்பு நிகழ்ச்​சி​யில் துணை முதல்​வர் உதயநிதி கலந்து கொண்​டார். அந்த சமயத்​தில் மாநகரச் செய​லா​ளர் பதவியை கணேஷூக்கே வழங்க வேண்​டும் என்ற கோரிக்கை எழுந்​தது. அதே​போல் இன்​னும் சிலரும் அந்​தப் பதவிக்​காக அமைச்​சர்​களின் சிபாரிசுகளு​டன் முட்டி மோதினர். இறு​தி​யில், லிஸ்ட்​டிலேயே இல்​லாத வே.​ராஜேஷ் என்​பவரை கடந்த மார்ச்​சில் மாநகர் பொறுப்​பாள​ராக தலைமை அறி​வித்​தது

இதை ஏற்​காத பெரும்​பாலான வட்​டச் செய​லா​ளர்​கள் உள்​ளிட்ட நிர்​வாகி​கள் ராஜேஷை மாற்​றக் கோரி போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். மாவட்ட அமைச்​சர்​களைச் சந்​தித்​தும் முறை​யிட்​டனர். அப்​படி​யும் எது​வும் நடக்​காத​தால் நேராக அறி​வால​யத்​துக்கே சென்று ஸ்டா​லினைச் சந்​தித்து முறை​யிட்​டு​விட்டு சென்​னை​யிலேயே டேரா போட்​டனர். ஆனால், வாரக் கணக்​கில் ஆகி​யும் தலை​மை​யும் மவுனம் சாதித்​த​தால் சத்​தமில்​லாமல் ஊருக்​குத் திரும்​பியது சங்கட கோஷ்டி.

இந்த நிலை​யில், அண்​மை​யில் மாவட்ட அலு​வல​கத்​தில் நடை​பெற்ற மாநகர நிர்​வாகி​கள் கூட்​டத்​தில் கலந்​து​கொண்​ட​வர்களில் சிலர், ராஜேஷை மாற்​றக் கோரி உள்​ளிருப்பு போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். அவர்​களை அமைச்​சர் ரகுப​தி​யும், புதுகை வடக்கு மாவட்​டச் செய​லா​ளர் கே.கே.செல்​லப்​பாண்​டிய​னும் சமா​தானம் செய்​தனர்.

வே.​ராஜேஷ்

இந்த விவ​காரம் தொடர்​பாக நம்​மிடம் பேசிய புதுக்​கோட்டை மாநகர திமுக-​வினர், “திமுக-​வின் என்​ஆர்ஐ நல அணி இணைச் செய​லா​ள​ரும் மாநிலங்​களவை எம்​பி-​யு​மான புதுக்​கோட்டை எம்​.எம்​.அப்​துல்​லா​வின் சிபாரிசில்தான் ராஜேஷ் மாநகர பொறுப்​பாள​ராக நியமிக்​கப்​பட்​டார். இதில் அமைச்​சர் அன்​பில் மகேஸின் கையும் இருப்​ப​தாகச் சொல்​கி​றார்​கள். புதுக்​கோட்டை மாவட்ட அரசி​யலில் தீவிரம் காட்​டும் அமைச்​சர் கே.என்​.நேரு​வையும் வடக்கு மாவட்​டச் செய​லா​ளர் செல்​லப்​பாண்​டிய​னை​யும் கலக்​காமல் இந்த நியமனம் நடந்​தது தான் பிரச்​சினையே” என்​ற​னர்.

தொடக்​கத்​தில் எதிர்ப்பு இருக்​கும் போகப் போக சரி​யாகி​விடும் என தலைமை நினைத்​தது. ஆனால், போகப் போக பிரச்​சினை பெரி​தாகிக் கொண்டே தான் போகிறதே தவிர அடங்​கு​வ​தாகத் தெரிய​வில்​லை. மே 21-ம் தேதி திமுக மண்ட பொறுப்​பாளர் அமைச்​சர் நேரு கலந்து கொண்ட ஆலோ​சனைக் கூட்​டம் புதுக்​கோட்​டை​யில் நடை​பெற்​றது. அப்​போதும் ராஜேஷை மாற்​றக் கோரி நிர்​வாகி​கள் சிலர் கோஷம் போட்​டனர்.

இதைக் கேட்டு சுளீர் ஆன நேரு, ‘‘ராஜேஷை தலைமை தான் நியமித்​துள்​ளது. கட்​சிக் கூட்​டத்​தில் இதெல்​லாம் வேண்​டாத வேலை. ஆலோ​சனை​களை மட்​டும் தெரி​வி​யுங்​கள்’’ என்று சொல்லி அமளியை அடக்​கி​னார். இதனிடையே, இந்த நிகழ்ச்​சிக்​காக அப்​துல்​லா​வின் படத்​துடன் ராஜேஷ் வைத்​திருந்த ஃப்ளெக்​ஸ்​களில் புதுக்​கோட்டை மேயர் தில​கவதி மற்​றும் எம்​எல்​ஏ-​வான முத்​து​ராஜா ஆகி​யோரின் படங்​கள் இல்​லை. இதைப் பார்த்​து​விட்டு கொதித்​துப் போன சிலர், அவற்றை கிழித்​தெறிந்​தனர். இன்​னும் சிலர், ராஜேஷை மாற்​றக் கோரி போஸ்​டர்​களை​யும் ஒட்டி இருந்​தார்​கள்.

இது குறித்து ராஜேஷிடம் பேசினோம். ‘‘சு​மார் 24 ஆண்​டு​களாக கட்​சி​யில் இருக்​கிறேன். 15 ஆண்​டு​களுக்​கும் மேலாக மாவட்ட மாண​வர் அணி, தொண்​டர் அணி​யில் இருந்​துள்​ளேன். எதிர்க்​கட்​சி​யாக இருந்த காலங்​களில் பல்​வேறு போராட்​டங்​களை​யும், கூட்​டங்​களை​யும் முன்​னின்று நடத்​தி​யுள்​ளேன். இதையெல்​லாம் அறிந்​து​தான் எனக்கு மாநகர் செய​லா​ளர் பொறுப்பை வழங்​கியது தலை​மை. பொறுப்​பேற்ற நாள் முதல் கட்​சிப் பணி​களில் தீவிரம் காட்டி வரு​கிறேன். மொத்​தம் உள்ள 42 வட்​டச் செய​லா​ளர்​களில் இரு​பதுக்​கும் மேற்​பட்​ட​வர்​கள் என்​பக்​கம் இருக்​கி​றார்​கள். எஞ்​சிய சிலர் தான் தேவை​யில்​லாமல் பிரச்​சினை செய்​கி​றார்​கள்’’ என்று சொன்​னார் அவர்.

உங்​கள் சிபாரிசில் தான் ராஜேஷுக்கு மாநகரச் செய​லா​ளர் பொறுப்பு வழங்​கப்​பட்​ட​தாமே என எம்​.எம்​.அப்​துல்லா எம்​பி-​யிடம் கேட்​டதற்​கு, ‘‘எனது பரிந்​துரை​யில் தான் ராஜேஷுக்கு பொறுப்பு வழங்​கப்​பட்​டது என்​ப​தற்​கெல்​லாம் கருத்​துச் சொல்ல முடி​யாது. எல்​லா​வற்​றை​யும் கட்சி தலைமை தான்​ முடி​வெடுக்​கிறது’’ என்​றதோடு முடித்​துக்​ கொண்​​டார்​ அவர்​. கடைசி​யாக கிடைத்​த தகவல்​படி, ​ராஜேஷ் விவ​காரத்​தில்​ பொறுமை​யிழந்​து போயிருக்​கும்​ வட்​டச்​ செய​லா​ளர்​கள்​ கூண்​டோடு ​ராஜி​னா​மா செய்​து​விடும்​ முடி​வில்​ இருப்​ப​தாகச்​ சொல்​கிறார்​கள்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x