Published : 27 May 2025 12:47 AM
Last Updated : 27 May 2025 12:47 AM

ரயில்களில் 2-ம் வகுப்பு பெட்டி காத்திருப்பு பட்டியல் பயணிகளுக்கு ஏசி பெட்​டிகளின் காலி இடங்களை ஒதுக்கீடு செய்ய முடிவு

சென்னை: ரயி​லில் இரண்​டாம் வகுப்பு தூங்​கும் வசதி (ஸ்​லீப்​பர் பெட்​டிகளில்) பெட்​டிகளில் டிக்​கெட் கிடைக்​காமல் காத்​திருப்​போர் பட்​டியலில் உள்ள பயணி​களுக்கு ஏசி வகுப்பு பெட்​டிகளில் காலி​யாக உள்ள இடங்​கள் கூடு​தல் கட்​ட​ணம் இன்றி ஒதுக்​கும் வசதியை மேலும் 2 நிலைகள் வரை விரி​வாக்​கம் செய்​யப்​பட​வுள்​ளது.

இதன் மூல​மாக, 2-ம் வகுப்பு தூங்​கும் வசதி பெட்​டிகளில் காத்​திருப்​போர் பட்​டியலில் உள்ள பயணி​களுக்கு 3-ம் வகுப்பு ஏசி அல்​லது 2 -ம் வகுப்பு ஏசி பெட்​டிகளில் காலி​யாக உள்ள இடங்​கள் கூடு​தல் கட்​ட​ணம் இன்றி ஒதுக்​கப்பட உள்​ளது.

பயணி​களின் காத்​திருப்​போர் பட்​டியலை குறைக்க, கூடு​தல் பெட்​டிகள் சேர்ப்​பது உட்பட பல நடவடிக்​கைகளை ரயில்வே நிர்​வாகம் எடுத்து வரு​கிறது. இது த​விர, ஒரு ரயி​லில் 2-ம் வகுப்பு தூங்​கும் வசதி பெட்​டிகளில் காத்​திருப்​போர் பட்​டியலில் உள்​ளவர்​களுக்கு 3-ம் வகுப்பு ஏசி பெட்​டிகளில் காலி​யிடங்​கள் இருந்​தால், அதில் ஒதுக்​கீடு செய்​யும் முறை​யும் இருக்​கிறது. இந்த முறை கடந்த 2006-ல் அறி​முகப்​படுத்​தப்​பட்​டது. இது காத்​திருப்​புப் பட்​டியலில் உள்ள பயணி​களை மேம்​படுத்​து​வதற்​கான திட்​டம் என்று அழைக்​கப்​படு​கிறது.

கூடுதல் கட்டணம் இல்லை: இந்​நிலை​யில், இத்​திட்​டத்தை விரி​வாக்​கம் செய்ய ரயில்வே வாரி​யம் முடிவு செய்​துள்​ளது. அதாவது, ரயி​லில் இரண்​டாம் வகுப்பு தூங்​கும் வசதி பெட்​டி​யில் காத்​திருக்​கும் பயணி​களுக்கு 3-ம் வகுப்பு ஏசி பெட்​டி, 2-ம் வகுப்பு ஏசி பெட்​டிகளில் காலி இடங்​கள் இருந்​தால், அவற்​றில் கூடு​தல் கட்​ட​ணம் இன்றி வழங்க முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது.

அதே​போல் 3-ம் வகுப்பு எக்​னாமிக் பெட்​டி​யில் காத்​திருப்​போர் பட்​டியல் உள்ள பயணி​களுக்கு 3-ம் வகுப்பு ஏசி, 2-ம் வகுப்பு ஏசி பெட்​டிகளில் காலி இடங்​கள் இருந்​தால் ஒதுக்​கப்​படும். இது​போல, 3-ம் வகுப்பு ஏசி பெட்​டிகளில் காத்​திருப்​போர் பட்​டியலில் உள்​ளவர்​களுக்கு 2-ம் வகுப்பு அல்​லது முதல் வகுப்பு குளிர்​சாதன பெட்​டிகளில் காலி இடங்​கள் இருந்​தால் கூடு​தல் கட்​ட​ணமின்றி இருக்​கைகள் ஒதுக்​கீடு செய்​யப்​படும். இது த​விர, ரயி​லில் இரண்​டாம் வகுப்பு முன்​ப​திவு இருக்கை பெட்​டி​யிலும் இந்த முறை நடை​முறைப்​படுத்​தப்​படும்.

இது​போல, இரண்​டாம் வகுப்பு ஏசி பெட்​டி​யில் காத்​திருப்​போர் பட்​டியலில் உள்ள பயணி​களுக்கு முதல்​வகுப்பு ஏசி​யில் காலி இடமிருந்​தால் ஒதுக்​கீடு செய்​ய​வும் முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது. இத்​தகவல் ரயில்வே வாரிய சுற்​றறிக்​கை​யில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. மேலும் இந்த சுற்​றறிக்கை அனைத்து ரயில்வே மண்​டலங்​களுக்​கும் அனுப்​பப்​பட்​டுள்​ளது.

இதுகுறித்​து, ஓய்​வு​பெற்ற மூத்த ரயில்வே தொழிற்​சங்க தலை​வர் மனோகரன் கூறும்​போது, “காத்​திருப்​போர் பயணி​களை மேம்​படுத்​துவதற்​கான திட்​டம் விரிவுப்​படுத்​தப்பட உள்​ளது வரவேற்​கதக்​கது. இதன்​மூல​மாக, ரயில்​வேக்​கும் கணிச​மான வரு​மானம் கிடைக்​கும். அதிக பயணி​களும் பயனடை​வார்​கள்” என்​றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x