Last Updated : 25 May, 2025 09:00 AM

17  

Published : 25 May 2025 09:00 AM
Last Updated : 25 May 2025 09:00 AM

“பொது சமூகத்தில் இஸ்லாமியர்கள் மீது மோசமான பார்வையை விதைத்தவர் விஜய்!” - கே.நவாஸ்கனி நேர்காணல்

ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் தொடர்ந்து இராண்டாவது முறை எம்பி-யாக இருப்பவர் கே.நவாஸ்கனி. இவர் அண்மையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயூஎம்எல்) கட்சியின் தேசிய செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையொட்டி, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுக்கு அவர் அளித்த பிரத்யேக நேர்காணல் இது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியில் இணைந்த குறுகிய காலத்திலேயே அக்கட்சியின் தேசியச் செயலாளர் பதவி பெற்றுவிட்டீர்களே? கட்சியில் தகுதியான சீனியர்கள் யாரும் இல்லை என்பதுதான் காரணமா?

இந்​திய இஸ்​லாமியர்​களின் அரசி​யலின் தாய்​சபை​யாக ஐயூஎம்​எல் உள்​ளது. 2011-ல் கட்​சி​யில் இணைந்த நான் அதே ஆண்​டில் மாநில கவுரவ ஆலோ​சக​ரானேன். எனது சிறப்​பான செயல்​பாட்​டில் நம்​பிக்கை வைத்து 2019-ல் மக்​களவைக்கு போட்​டி​யிட வாய்ப்​பளித்​தார்​கள். இதில் சிறந்து விளங்​கிய​தால் கட்​சி​யின் மாநில துணை தலை​வ​ரானேன். இதி​லும் சிறப்​பாக பணி​யாற்​றிய​தால் மீண்​டும் 2024-ல் எம்பி ஆகும் வாய்ப்​புக் கிட்​டியது. அனைத்து பொறுப்​பு​களி​லும் எந்​த​வித சமரச​மும் இல்​லாமல் சிறப்​பாக செயல்​பட்​ட​தால் இப்​போது தேசிய செய​லா​ளர் பொறுப்பு வழங்​கப்​பட்​டுள்​ளது. என்னை நம்பி ஒப்​படைக்​கப்​படும் எந்த பணி​யை​யும் ஒரு பதவி​யாக பார்க்​காமல், அதை ஒரு பொறுப்​பாகத்​தான் பார்க்​கிறேன். மேலும், வளரும் தலை​முறைக்கு வாய்ப்​பளித்து வழி​காட்​டும் கட்சி ஐயூஎம்​எல். எங்​களு​டைய தலை​வர்​கள் எந்​தப் பொறுப்பை எந்த சமயத்​தில் யாருக்கு வழங்க வேண்​டும் என்​பதை நன்கு அறி​வார்​கள்​.

தேசிய அளவில் எம்பி-க்களும், எம்எல்ஏ-க்களும் நிறைந்திருந்த ஐயூஎம்எல் தற்போது கேரளம், தமிழகத்துக்குள் மட்டும் சுருங்கி விட்டதே? நீங்கள் செயலாளரான நிலையில் வடக்கிலும் ஐயூஎம்எல் மீட்டெடுக்கப்படுமா?

இன்று நமது நாடு இருக்கும் நிலையில் வட மாநிலங்களில் குறிப்பாக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேவை அதிகம் உள்ளது. கேரளம், தமிழ்நாட்டைப் போல் எங்கள் கட்சி வட மாநிலங்களிலும் வலிமையாக இருந்தால் மதவாத சக்திகள் மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்தி வெறுப்பு அரசியலை விதைக்க முடியாது. எனவே, அங்கும் கட்சியை வலிமைப்படுத்தி பிரதிநிதித்துவத்தை மீண்டும் ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.

2021-ல் தமிழகத்தில் 3 தொகுதிகளில் போட்டியிட்ட ஐயூஎம்எல் மூன்றிலும் தோற்றுப் போனது. இம்முறை அதே எண்ணிக்கை தானா... அதே தொகுதிகளில் தான் போட்டியா?

தேர்​தல் அரசி​யலில் வெற்றி தோல்வி​கள் என்​பது நிலை​யானதல்ல. கடந்த தேர்​தலின் தோல்விக்​கான காரணங்​களை தீவிர​மாக ஆய்வு செய்​துள்​ளோம். இதன்​படி, வெற்றி வாய்ப்பை பெறக்​கூடிய தொகு​தி​களை மட்​டும் தான் கேட்​டுப் பெற வேண்​டும் என்ற தெளி​வான முடிவோடு எங்​கள் தலைமை உள்​ளது. வெற்றி வாய்ப்பு உள்​ளவர்​களையே போட்​டி​யிட வைக்​க​வும் உறு​தி​யாக உள்​ளனர். இந்த முறை சரி​யான தொகு​தி​களை பெற்று வெற்றி பெற அனைத்து முயற்​சிகளை​யும் மேற்​கொள்​வோம்​.

1962 முதல் தொடர்ந்து மூன்று முறை கேரளாவின் மஞ்சேரியில் எம்பி-யாக உங்கள் கட்சியின் நிறுவனர் காயிதே மில்லத் எம்.முகம்மது இஸ்மாயில் இருந்தபோது, மஞ்சேரிக்கு உட்பட்ட சட்டப்பேரவை தொகுதிகளில் இந்துக்களுக்கு ஐயூஎம்எல் வாய்ப்பளித்து வெற்றி பெற்றது வரலாறு. அந்த நிலை மீண்டும் திரும்பும் வாய்ப்புள்ளதா?

தற்​போதும் கூட எங்​கள் கட்​சி​யில் இஸ்​லாமியர் அல்​லாதவர்​கள் உள்​ளாட்சி பிர​தி​நி​தி​களாக இருக்​கி​றார்​கள். தற்​போதைய தேசி​யப் பொதுக்குழு​வில் கூட தேசிய துணைச் செய​லா​ள​ராக கேரளா​வின் ஜெயந்தி ராஜனும், தமிழ்​நாட்​டின் மாநிலச் செய​லா​ள​ராக வழக்​கறிஞர் ஜீவகிரிதரனும் அமர்த்​தப்​படுள்​ளனர். தேர்​தலுக்​கான வேட்​பாளர்​களை அப்​போதைய காலச் சூழலுக்கு ஏற்​ற​வாறு தலை​வர்​கள் முடி​வெடுக்​கி​றார்​கள். ஆர்​வ​முள்ள பொருத்​த​மான​வர்​கள் கிடைத்​தால் மாற்று மதத்​தின​ராக இருந்​தா​லும் பொறுப்​பளிக்​கத் தயங்​கு​வ​தில்​லை.

இரண்டு முறை ராமநாதபுரத்தை வென்றுள்ள நீங்கள் தொகுதி மக்களுக்காக செய்து கொடுத்த தனிப்பட்ட சாதனையாக எதைச் சொல்வீர்கள்?

எனது தொகு​திக்​குட்​பட்ட சுமார் 4,200-க்​கும் மேற்​பட்ட மாண​வர்​களின் உயர் கல்விக்கு தனிப்​பட்ட முறை​யில் என்​னுடைய சொந்த நிதியி​லிருந்து உதவி இருக்​கிறேன். அதில் பெரும்​பான்​மை​யான​வர்​கள் இன்று தன்​னுடைய வாழ்க்​கைத் தரத்தை உயர்த்தி இருக்​கி​றார்​கள். ராம​நாத​புரத்​தில் விமான நிலை​யம் அமைக்க, நாடாளு​மன்​றத்​தி​லும், மத்​திய அமைச்​சரிடம் நேரிலும் சந்​தித்து வலி​யுறுத்​தி​யதன் பலனாக ராம​நாத​புரத்​தில் விமான நிலை​யம் அமைக்​கப்பட உள்​ளது. அதே​போல் 2019 முதல் மருத்​து​வக் கல்​லூரிக்​காக வலி​யுறுத்​தி​யதன் பலனாக தற்​போது ராம​நாத​புரத்​தில் மருத்​து​வக் கல்​லூரி சிறப்​பாக செயல்​படு​கிறது. ராம​நாத​புரம் மிள​காய் விவ​சா​யிகள் கோரிக்​கை​யான, குண்டு மிள​காய்க்கு புவி​சார் குறி​யீடு சான்​றும் மத்​திய அரசிடம் பேசி பெற்​றுத் தந்​துள்​ளேன். தமிழக மீன​வர்​களின் பிரச்​சினையை அதி​க​முறை நாடாளு​மன்​றத்​தில் எழுப்​பிய எம்பி நான் மட்​டுமே. இப்​பிரச்​சினையை தீர்க்க இலங்​கை​யின் அன்​றைய பிரதமர் ரணில் விக்​கிரமசிங்க, மீன்​வளத்​துறை அமைச்​சர் உள்​ளிட்​டோரை சந்​தித்​துள்​ளேன்​.

வக்பு திருத்தச் சட்டத்தை முஸ்லிம்கள் சிலரும் ஆதரிக்கிறார்களே?

வக்பு திருத்தச் சட்​டம் என்​பது அப்​பட்​ட​மாக இஸ்​லாமியர்​களின் இறை சொத்​து​களை கபளீகரம் செய்​யக்​கூடியது. இதை உணர்ந்​து​தான் இன்று நாடு முழு​வதும் இஸ்​லாமியர்​கள் போராடிக் கொண்​டிருக்​கி​றார்​கள். இஸ்​லாமியர்​கள் மட்​டுமல்ல இந்​திய அரசமைப்​புச் சட்​டத்​தின் மீது நம்​பிக்கை கொண்ட ஜனநாயக சக்​தி​கள் அனை​வ​ரும் இந்த சட்​டம் அரசமைப்​புச் சட்​டம் சிறு​பான்மை மக்​களுக்கு வழங்​கி​யிருக்​கும் உரிமை​களை பறிக்​கக் கூடியது என்​பதை உணர்ந்து போராடு​கி​றார்​கள். ஆனால், வக்பு திருத்த சட்​டத்தை முஸ்​லிம்​கள் சிலர் ஆதரிப்​பது போன்ற தோற்​றத்தை பாஜக அரசு ஏற்​படுத்த முயல்​கிறது. இந்த போலி​யான பிம்​பத்தை உணர்ந்த எந்த இஸ்​லாமியரும் வக்பு சட்​டத்தை ஆதரிக்க மாட்​டார்​கள்​.

அதிமுக - பாஜக கூட்டணி அமைந்தது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பொருந்தாத இக்கூட்டணி அமைக்க, உள்துறை அமைச்சர் ஒருவித நெருக்கடியை கொடுத்து அதிமுக-வை பணிய வைத்து மிரட்டியுள்ளார். இந்தக் கூட்டணியில் அதன் உறுப்பு கட்சிகளின் கீழ்மட்ட நிர்வாகிகளுக்கு கூட ஒத்த கருத்து இல்லாததால் தேர்தலில் பலன் கிடைக்குமா என்பதே கேள்விக்குறி. பாஜக-வுடன் யார் கூட்டணி வைத்தாலும் அது மூழ்கக் கூடிய கப்பல் தான்.

தவெக தலைவர் விஜய் முஸ்லிம்களுக்கு ஆதரவாகப் பேசி வருகிறார். ஆனால், தனது படங்களில் அவர் முஸ்லிம்களை தீவிரவாதிகளாகவே சித்தரித்து வந்திருப்பதாகச் சொல்லி முஸ்லிம்களில் சிலர் அவரை எதிர்க்கிறார்களே?

நடிகர் விஜய் அவர்​கள் கடந்த காலங்​களில் இஸ்​லாமியர்​களை தீவிர​வா​தி​களாக சித்​தரித்து தன்​னுடைய படங்​களில் காட்​சிகளை வைத்​ததை மக்கள் மறந்​து​விட​வில்​லை. இதனால், பொது சமூகத்​தில் இஸ்​லாமியர்​கள் மீது மோச​மான பார்வை விதைக்​கப்​பட்​டதை​யும், அதனால் ஏற்​பட்ட பாதிப்​பு​களை​யும் யாரும் மறந்து விட முடி​யாது. தற்​போது அரசி​யலுக்​காக என்ன வேண்​டு​மா​னாலும் பேசலாம், ஆனால், கடந்த காலங்​களை​யும் இஸ்​லாமிய சமூகம் நினை​வில் வைத்​திருக்​கும்​.

2026-ல் திமுக கூட்டணியில் தொடர்வதற்கு முஸ்லிம் லீக் கட்சி நிபந்தனைகள் ஏதும் விதிக்குமா?

​தி​முக-வுடன் இந்​திய யூனியன் முஸ்​லிம் லீக் கொண்​டிருப்​பது தேர்​தல் அரசி​யலுக்​கான கூட்​டணி மட்​டுமல்ல கொள்கை ரீதி​யான கூட்​ட​ணி. எங்​களுக்கு சிறப்​பான முக்​கி​யத்​து​வத்தை திமுக வழங்​கு​வ​தால் நிபந்​தனை​களுக்கு அவசி​யமில்​லை. சட்​டப்​பேரவை தேர்​தலில் எங்​களுக்​கான தொகு​தி​களை கேட்டுப் பெற்று அதில் கூட்​டணி கட்​சி​களின் ஒத்​துழைப்​போடு வெற்றி வாய்ப்பை உறுதி செய்​வோம்​.

பெஹல்காம் தாக்குதலுக்கு இந்தியா கொடுத்த பதிலடியை எப்படிப் பார்க்கிறீர்கள்?

நம்​முடைய இந்​திய ராணுவத்​தின் வீரத்​தை​யும் தியாகத்​தை​யும் அர்​பணிப்​பை​யும் உள்​ளபடியே பாராட்​டி​யாக வேண்​டும். இந்​தியா - சீனா போரின் போது எங்​களு​டைய கட்​சி​யின் நிறு​வனத் தலை​வர் கண்​ணி​யமிகு காயிதே மில்​லத் அவர்​கள் நாடாளு​மன்​றத்​தில் பேசிய போது இந்​திய - சீன போருக்​காக தன்​னுடைய சம்​பளத்​தில் ஒரு பகு​தியை பிடித்​துக் கொள்​ளு​மாறு சொன்னார். அது மட்​டுமல்ல, தன்​னுடைய ஒரே மகனை நாட்​டிற்​காக அர்​பணிக்​கத் தயா​ராக உள்​ள​தாக அன்​றைய பிரதமர் ஜவஹர்​லால் நேரு அவர்​களுக்கு கடித​மும் எழு​தி​னார். அவருடைய வீரமிக்க அந்த உரை ஐக்​கிய நாடு​கள் சபை​யில் ஒளிபரப்​பப்​பட்​டது என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

இதற்கு முன்பெல்லாம் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் குண்டு வெடிப்புகள் சர்வசாதாரணமாக நடக்கும். ஆனால், மோடி பிரதமரான நாள் முதல் குண்டு வெடிப்புகளே இல்லை என்ற நிலை வந்துவிட்டதே... காரணம் என்னவாக இருக்கும் என நினைக்கிறீர்கள்?

பயங்கரவாதத்தை ஒழித்திட வேண்டும் என்பதில் நாங்கள் எப்போதும் ஒத்த கருத்தோடு இருப்பவர்கள். ஆனால், நீங்கள் கூறுவது போல் கடந்த 10 ஆண்டுகளில் பயங்கரவாத தாக்குதல்கள் இல்லை என்பதை விட, அவை அரசியலுக்காக பயன்படுத்தப்பட்டது என்பதுதான் நிதர்சனமான உண்மை.

சர்வதேச அளவில் இந்தியாவுக்கு இப்போது மதிப்பும் மரியாதையும் கூடி இருக்கிறது. அதற்குக் காரணம் மோடி என்ற பிம்பமும் பாஜக ஆட்சியும் தான் என்று சொல்லப்படுவதை ஏற்கிறீர்களா?

​நாம் இன்று பார்க்​கின்​றோம் நம் நாட்​டின் போர் நிறுத்​தத்தை பற்றி அமெரிக்க அதிபர் தொடர்ந்து பேசி வரு​கி​றார். வர்த்​தகத்​தைக் காட்டி போரை நிறுத்​தினேன் என்​கி​றார். அமெரிக்​கா​விலிருந்து நாடு கடத்​தப்​பட்ட இந்​தி​யர்​களின் கை, கால்​களில் விலங்கு பூட்டி அனுப்​பப்​பட்​டது. நம்மை விட சிறிய நாடு​கள் எல்​லாம் அந்தச் செயலை கண்​டித்த போதும் இந்​தியா மவுனம் சாதித்​தது. இதனை கண்​டித்த விகடன் பத்​திரிகை இணை​ய
தளத்தை முடக்​கியது மத்திய அரசு.

திராவிட மாடல் ஆட்சியில் தமிழக மக்கள் சந்தோசமாக இருப்பதாக உங்களால் சான்றளிக்க முடியுமா?

நிச்​சய​மாக... அடித்​தட்டு மக்​கள் திரா​விட மாடல் நல்​லாட்​சி​யின் மூலம் பயனடைந்​திருக்​கி​றார்​கள. விடியல் பயணம், மாதந்​தோறும் மகளிர் உரிமைத்​தொகை போன்​றவை அடித்​தட்டு மக்​களின் வாழ்​வா​தா​ரத்​தில் நேரடி​யாக பங்​காற்றி இருக்​கிறது. கல்​வித்​துறை​யில் தமிழ்​நாட்டை இந்​திய அளவில் இரண்​டாம் இடத்​திற்கு உயர்த்​தி​யது. மக்​களை தேடி மருத்​து​வம், மாண​வர்​களுக்​கான காலை உணவு திட்​டம் தொழில்​துறை முதலீட்​டில் தமிழ்​நாட்டை முன்​மா​திரி மாநில​மாக உயர்த்​தி​யது போன்​றவை எல்​லாம் மகத்​தான சாதனை. நிச்​சய​மாக மக்​கள் மகிழ்ச்​சி​யாக உள்​ளார்​கள்​.

ஆட்சிக்கு எதிராக அதிருப்திகள் இல்லவே இல்லை என்கிறீர்களா?

பொதுவாக எந்த ஒரு கட்சியும் ஐந்து ஆண்டுகள் ஆட்சியில் இருந்தால் ஆட்சியின் முடிவில் மக்கள் மத்தியில் அதிருப்திகள் இருக்கக்கூடும். ஆனால், திராவிட மாடல் நல்லாட்சியில் அப்படிப்பட்ட அதிருப்தி இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. எதிர்க்கட்சிகள் ஆயிரம் விமர்சனங்களை வைக்கலாம் ஆனால், மக்கள் மத்தியில் ஆட்சி குறித்த நல்லெண்ணம் மிகுந்திருக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x