Published : 24 May 2025 11:40 AM
Last Updated : 24 May 2025 11:40 AM
சென்னை: சென்னை சென்ட்ரல்-கூடூர் வழித் தடத்தில் உள்ள கவரைப்பேட்டை-பொன்னேரி இடையே பராமரிப்பு பணி காரணமாக, சூளூர்பேட்டை வழித் தடத்தில் இன்றும் (24-ம்), நாளை மறுநாளும் (26-ம் தேதி) புறநகர் மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுகின்றன.
இதன்படி, சென்னை சென்ட்ரல்-சூளூர்பேட்டை இடையே காலை 5.40, 10.15, 10.30, நண்பகல் 12.10, சென்னை சென்ட்ரல்-கும்மிடிப்பூண்டி இடையே காலை 10.30, 11.35, மதியம் 1.40, ஆவடி-சென்னை சென்ட்ரல் இடையே காலை 4.25, சென்னை கடற்கரை-கும்மிடிப்பூண்டி இடையே நண்பகல் 12.40, மதியம் 2.40 மற்றும் சூளூர்பேட்டை-நெல்லூர் இடையே காலை 8.10, நெல்லூர்-சூளூர்பேட்டை இடையே காலை 10.20,
கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மதியம் 1, 2.30, 3.15, 3.45, 4.30 சூளூர்பேட்டை-சென்னை சென்ட்ரல் இடையே நண்பகல் 12.35, மதியம் 1.15, பிற்பகல் 3.10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் இன்றும், நாளை மறுதினமும் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
செங்கல்பட்டு-கும்மிடிப்பூண்டி இடையே காலை 9.55, கும்மிடிப்பூண்டி-தாம்பரம் இடையே பிற்பகல் 3 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் சேவை நாளையும், நாளை மறுதினமும் சென்னை கடற்கரை-கும்மிடிப்பூண்டி இடையே ரத்து செய்யப்படுகிறது.
எனினும், பயணிகளின் வசதிக்காக நாளையும், நாளை மறுதினமும் சில சிறப்ப ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன.
இதன்படி, சென்னை சென்ட்ரல்-பொன்னேரி இடையே காலை 10.30, சென்னை சென்ட்ரல்-மீஞ்சூர் இடையே காலை 11.35, மதியம் 1.40, சென்னை கடற்கரை-எண்ணூர் இடையே நண்பகல் 12.40, சென்னை கடற்கரை-பொன்னேரி இடையே மதியம் 2.40, பொன்னேரி-சென்னை சென்ட்ரல் இடையே மதியம் 1.18, மீஞ்சூர்-சென்னை சென்ட்ரல் இடையே பிற்பகல் 3, மாலை 4.14 எண்ணூர்-சென்னை கடற்கரை இடையே பிற்பகல் 3.56, பொன்னேரி-சென்னை கடற்கரை இடையே மாலை 4.47 மணிக்கு சிறப்பு மின்சார ரயில் சேவை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT