Last Updated : 24 May, 2025 10:34 AM

 

Published : 24 May 2025 10:34 AM
Last Updated : 24 May 2025 10:34 AM

கோடையை கொண்டாட ஆதரவாளர்களுக்கு குளுகுளு ஆஃபர்! - போட்டி போட்டு குஷிப்படுத்தும் வேலூர் திமுக நிர்வாகிகள்

வேலூர் திமுக-வில், கதிர் ஆனந்த் எம்பி, வேலூர் மத்திய மாவட்டச் செயலாளரும் அணைக்கட்டு தொகுதி எம்எல்ஏ-வுமான ஏ.பி.நந்தகுமார், வேலூர் மாநகரச் செயலாளரும் எம்எல்ஏ-வுமான கார்த்திகேயன் என ஆளுக்கொரு பக்கமாக முக்கோண அரசியல் நடத்துபவர்கள். இவர்கள் மூவரும் தங்களது ஆதரவாளர்களை சந்தோசப்படுத்த தங்கள் செலவில் அவர்களை இன்பச்சுற்றுலா இட்டுச் செல்வது தான் இப்போது வேலூர் திமுக-வில் குளுகுளு பேச்சாக இருக்கிறது.

இந்த ஆண்டு மட்​டுமல்​ல... கடந்த சில ஆண்​டு​களாகவே இந்த மூவ​ரும் மாவட்ட திமுக-​வினரை கோடை தவறாமல் குளுகுளு சுற்​றுலா அழைத்​துச் செல்​வதை வழக்​க​மாக வைத்​திருக்​கி​றார்​கள். கழகத்​தினருக்கு இந்த பேக்​கேஜ் சிஸ்​டத்தை முதன்​முதலில் அறி​முகம் செய்து வைத்​தவர் மத்​திய மாவட்​டச் செய​லா​ளர் நந்​தகு​மார் தான். அவரைப் பார்த்து மற்​றவர்​களும் தங்​களது விசு​வாசிகளை குஷிப்​படுத்த இதை அமல்​படுத்த ஆரம்​பித்​து​விட்​டார்​கள்.

கடந்த ஆண்டு மக்​கள​வைத் தேர்​தல் முடிந்த கையோடு, தேர்​தலில் பம்​பர​மாய் சுழன்று பணி​யாற்​றிய உடன்​பிறப்​பு​களை லிஸ்ட் எடுத்த நந்​தகு​மார், அவர்​களை இரண்டு பஸ்​களில் நிரப்பி ஊட்​டிக்கு அழைத்​துச் சென்று மகிழ்​வித்​தார். அப்​போது நந்​தகு​மார் ஊட்​டி​யில் ஆடிய பாரம்​பரிய கலா​சார நடன​மும் சினிமா பாட்​டுக்கு அவர் போட்ட குத்​தாட்​ட​மும் சமூகவலை​தளங்​களில் செம வைரலானது. அப்​போது அவர் போட்ட ‘ஆட்​டங்​களுக்​கு’ தலை​மையி​லிருந்து எப்​படி ‘பா​ராட்​டு’ வந்​ததோ தெரிய​வில்​லை. இந்த முறை அவர் சகாக்​களு​டன் இன்​பச் சுற்​றுலா​வில் உடன் செல்​ல​வில்​லை.

கதிர் ஆனந்த், ஏ.பி.நந்தகுமார், கார்த்திகேயன்

இம்​முறை நந்​தகு​மார் ‘ஸ்​பான்​சரில்’ வேலூர் மாவட்ட ஊராட்​சிக் குழுத் தலை​வர் மு.​பாபு தலை​மை​யில் கவுன்​சிலர்​கள் 13 பேர் உட்பட ஒரு பெரும் பட்​டாளமே 5 நாள் பயண​மாக குலு மணாலிக்​குச் சென்று திரும்பி இருக்​கிறது. இதே​போல், மாவட்​டத்​துக்கு நாங்​கள் ஒன்​றும் சளைத்​தவர்​கள் அல்ல என்​பது போல் வேலூர் மாநகரச் செய​லா​ளர் கார்த்​தி​கேய​னும் தனது விசு​வாசிகளுக்கு ஊட்டி ட்ரிப் ஆஃபரை அள்​ளிக் கொடுத்​திருக்​கி​றார்.

கார்த்​தி​கேய​னின் ஆதர​வாள​ரான வேலூர் மேயர் சுஜாதா தலை​மை​யில் மாமன்ற உறுப்​பினர்​கள் உள்​ளிட்ட திமுக நிர்​வாகி​கள் சிலர் ஊட்​டிக்​குச் சென்று கோடை​யின் குளு​மையை அனுப​வித்​து​விட்டு திரும்பி இருக்​கி​றார்​கள். இந்​தப் பயணத்​தில் ஒப்​பந்​த​தா​ரர்​கள் சிலரும் இருந்​த​தாகச் சொல்​கி​றார்​கள்.

மாநக​ராட்​சி​யில் மேற்​கொள்​ளப்​பட்டு வரும் வளர்ச்​சிப் பணி​கள் மற்​றும் மாமன்ற உறுப்​பினர்​களின் செயல்​பாடு​கள் குறித்து விளக்​கவே(?) இந்​தப் பயணம் என வெளி​யில் சொல்​கி​றார்​கள். இவர்​களைத் தொடர்ந்து அடுத்​த​தாக கதிர் ஆனந்த் எம்​பி-​யின் ஆதர​வாளர்​களும் கோடைச் சுற்​றுலா செல்ல ஆயத்​த​மாகி வரு​வ​தாகச் சொல்​கி​றார்​கள். தலை​மை​யின் சிக்​னல் கிடைத்​ததும் அவர்​கள் ஏற்​காடு செல்​வ​தாக ஒரு செய்தி காற்​றில் கசிகிறது.

திமுக ஆட்​சி​யின் நான்​காண்டு சாதனை​களை விளக்கி பொதுக்​கூட்​டங்​களை நடத்த கழகத்​தினருக்கு உத்​தர​விட்​டுள்​ளது திமுக தலை​மை. அந்​தக் கூட்​டங்​களுக்கு நடுவே வேலூர் உடன்​பிறப்​பு​கள் புத்​துணர்ச்​சிப் பயணங்​களை திட்​ட​மிட்டு வரு​கி​றார்​கள். இதுகுறித்து நம்​மிடம் பேசிய வேலூர் திமுக நிர்​வாகி​கள் சிலர், “இதை இன்​பச்​சுற்​றுலான்னு எல்​லாம் சொல்ல முடி​யாது. வருசா வருசம் கோடை சீசன்ல ஏதாவது ஒரு சுற்​றுலாதலத்​துக்கு குடும்​பத்​தோட போயிட்டு வரு​வோம். அப்​படித்​தான் இந்த வருச​மும் போய்ட்டு வந்​தோம். மாமன்ற உறுப்​பினர்​கள் அலு​வல் ரீதி​யாக போயிட்டு வந்​தாங்க. மத்​த​படி ஸ்பெஷலா சொல்​றதுக்கு எது​வும் இல்​லைங்க” என்​ற​னர்.

ஆதர​வாளர்​களை தங்​கள் பக்​கமே தக்க வைக்​க​வும், அவர்​கள் எந்​தச் சூழலிலும் தங்​களின் கைமீறிப் போகாமல் இருக்​க​வுமே ஆண்டு தோறும் வேலூர் திமுக முக்​கிய நிர்​வாகி​கள் இந்த டூர் பிளானை செயல்​படுத்தி வரு​வ​தாக பொறாமை​யுடன் சொல்​கி​றார்​கள் குளுகுளு பயணத்​தில் பங்​கெடுக்​காத உடன்​பிறப்​புகள்​!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x