Last Updated : 24 May, 2025 09:18 AM

 

Published : 24 May 2025 09:18 AM
Last Updated : 24 May 2025 09:18 AM

முன்பு சந்தனக்கட்டை... இப்போது போலி மது..! - அமைச்சர் தேனீ ஜெயக்குமாரை துரத்தும் எதிர்க்கட்சிகள்

புதுச்சேரியில், என்.ஆர்.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வேளாண் துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமாரை எதிர்க்கட்சிகள் விடாது துரத்திக் கொண்டிருக்கின்றன. அவர் சம்பந்தப்பட்ட இடங்களில் சந்தனக் கட்டைகளும், போலி மது பாட்டில்களும் சிக்கியதே துரத்தலுக்கான துருப்புச் சீட்டு!

உள​வாய்க்​காலில் அமைச்​சர் தரப்​புக்​குச் சொந்​த​மான தேனீ பண்ணை என்ற இடம் உள்​ளது. இங்கு செயல்​பட்டு வந்த தனி​யார் நிறு​வனத்​தில் கடந்த ஆண்டு 6 டன் சந்​தனக் கட்​டைகளை சேலம் வனத்​துறை​யினர் பறி​முதல் செய்​தனர். இவை சந்தன எண்​ணெய் எடுப்​ப​தற்​காக கடத்​திவரப்​பட்​ட​தாக அப்​போது சொல்​லப்​பட்​டது. அதேசம​யம், “இதற்​கும் எனக்​கும் எந்த சம்​பந்​த​மும் இல்​லை. எனது இடத்தை வாடகைக்கு எடுத்​திருந்​தவர்​கள் இந்​தக் காரி​யத்​தைச் செய்​திருக்​கி​றார்​கள்” என அப்​போது தேனீ ஜெயக்​கு​மார் தன்​னிலை விளக்​கம் கொடுத்​தார். இருந்​த​போதும் அப்​போது இந்த விவ​காரத்தை அமைச்​சருக்கு எதி​ராக ஊதிப் பெரி​தாக்கி ஓய்ந்தன எதிர்க்​கட்​சிகள்.

இந்​நிலை​யில், அண்​மை​யில் புதுச்​சேரி எல்​லை​யில் உள்ள தமி​ழ​கத்​தின் விழுப்​புரம் பூத்​துறை​யில் தமிழக நுண்​ணறி​வுப் பிரிவு போலீ​ஸார் நடத்​திய வாகன சோதனை​யில் லாரி​யில் கடத்தி வரப்​பட்ட போலி மது​பாட்​டில்​கள் பறி​முதல் செய்​யப்​பட்​டன. புதுச்​சேரி சாரா​யத்​தைக் கொண்டு போலி​யாக இந்த மது பாட்​டில்​கள் தயா​ரிக்​கப்​பட்​ட​தாக விசா​ரணை​யில் தெரிய​வந்​தது.

இதன் ரிஷிமூலத்தை போலீ​ஸார் துரு​விய போது, இந்த ‘கலக்​கல்’ நடந்த இடம் ஏற்​கெனவே சந்தன கட்​டைகள் பறி​முதல் செய்​யப்​பட்ட தேனீ ஜெயக்​கு​மாருக்கு சொந்​த​மான அதே இடம் தான் எனத் தெரிய​வந்​தது. அங்கு நடத்​தப்​பட்ட தொடர் சோதனை​யில், டாஸ்​மாக் ஸ்டிக்​கர்​கள், காலி பாட்​டிகள் உள்​ளிட்​டவை சிக்​கின. இதையடுத்து இந்த விவ​காரத்தை சிபிஐ வந்து விசா​ரிக்க வேண்​டும் என்ற ரேஞ்​சுக்கு காங்​கிரஸ் உள்​ளிட்ட எதிர்க்​கட்​சிகள் மீண்​டும் ஜெயக்​கு​மாருக்கு எதி​ராக குடைச்​சல் கொடுக்க ஆரம்​பித்​து​விட்​டன.

இதுபற்றி பேசிய முன்​னாள் முதல்​வர் நாராயண​சாமி, “புதுச்​சேரி கலால்​துறை குறட்​டை​விட்​டுத் தூங்​கு​கிறது. போலி மது​பானம் புதுச்​சேரி​யில் தயா​ரிக்​கப்​பட்டு தமி​ழ​கத்​துக்கு கொண்​டு​செல்​லும்​போது தமிழக போலீ​ஸார் பிடித்​துள்​ளனர். போலி மது தயா​ரிக்​கப்​பட்ட இடம் அமைச்​சர் குடும்​பத்​துக்​குச் சொந்​த​மானது. ஏற்​கெனவே சந்​தனக்​கட்டை பிடிபட்ட வழக்​கும் தற்​போது போலி மது​பான வழக்​கும் உள்​ள​தால் பாரபட்​சமில்​லாத விசா​ரணை நடக்க அமைச்​சர் தேனீ ஜெயக்​கு​மார் தனது பதவியை ராஜி​னாமா செய்​ய​வேண்​டும். கலால் துறையை வைத்​துள்ள முதல்​வர் ரங்​க​சாமி​யும் இதற்கு பொறுப்​பேற்று ராஜி​னாமா செய்ய வேண்​டும்” என்​றார்.

இந்த விஷ​யத்​தில் பிர​தான எதிர்க்​கட்​சி​யான திமுக வாய்​மூடி மவும​னாக இருப்​பது ஏன் எனவும் சிலர் கேள்வி எழுப்​பி​னார்​கள். இது தொடர்​பாக நம்​மிடம் பேசிய எதிர்க்​கட்​சித் தலை​வர் சிவா, “ஏற்​கெனவே சந்​தனக் கட்டை கடத்​தல் விவ​காரத்​தில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்​தது. தற்​போது அதே இடத்​தில் போலி மது​பானங்​கள் தயா​ரித்து பெரிய தவறு நடந்​துள்​ளது.

புதுச்​சேரி கலால் துறை​யும், போலீ​ஸாரும் இது தொடர்​பாக என்ன நடவடிக்கை எடுத்​தார்​கள் என தெரிவிக்க வேண்​டும். அமைச்​சர் தேனீ ஜெயக்​கு​மாரும் இதையெல்​லாம் வேடிக்கை பார்த்​துக் கொண்​டிருக்​கும் முதல்​வர் ரங்​க​சாமி​யும் இதற்கு பதில் சொல்ல வேண்​டும். இந்த விவ​காரத்​தில் அமைச்​சர் மீது என்ன நடவடிக்கை எடுக்​கப்​பட்​டது என்​ப​தை​யும் முதல்​வர் தெளிவுபடுத்த வேண்​டும்” என்​றார்.

அமைச்​சர் தேனீ ஜெயக்​கு​மாரோ, “எனது மகளுக்​குச் சொந்​த​மான அந்த இடத்​தில் 8 நிறு​வனங்​கள் செயல்​படு​கிறது. அங்​குள்ள ஒரு குடோனை அதே ஊரைச் சேர்ந்​தவர்​கள் ஒரு மாதத்​துக்கு முன்பு தான் வாடகைக்கு எடுத்​தனர். அட்​வான்ஸ் கூட முழு​மை​யாக தரவில்​லை. அவர்​கள் தான் அங்கே போலி மது தயா​ரித்​த​தாக தமிழக போலீ​ஸாரிடம் சொல்லி இருக்​கி​றார்​கள்.

இந்த விவ​காரத்​தில் 9 பேரைக் கைது செய்​திருக்​கிறது போலீஸ். உள்​ளூர்​காரர்​கள் என நம்​பித்​தான் வாடகைக்கு இடத்​தைக் கொடுத்​தோம். அவர்​கள் தப்பு செய்​திருக்​கி​றார்​கள் என்​றதும் நாங்​கள் தான் அவர்​களை போலீ​ஸில் பிடித்​துக் கொடுத்​தோம். ஆனால், இதற்கு முன்பு சந்​தனக்​கட்டை விவ​காரத்​தில் எங்​களை இழுத்​துப் பேசி​யது போல் இந்த விவ​காரத்​தி​லும் எங்​களை தேவை​யில்​லாமல் சம்​பந்​தப்​படுத்தி அரசி​ய​லாக்​கு​கி​றார்​கள்.

நாங்​கள் குடோனை மட்​டும் தான் வாடகைக்​குக் கொடுத்​தோம். அதை வாடகைக்கு எடுத்​து​வர்​கள் செய்த தவறுக்​கும் எங்​களுக்​கும் எந்த சம்​பந்​த​மும் இல்​லை. இருந்​த​போதும் எனது பெயருக்கு களங்​கம் உண்​டாக்க வேண்​டும் என்​ப​தற்​காக இப்​படிச் செய்​கி​றார்​கள். இப்​போது மட்​டுமல்​ல... 1997-ல் நான் அமைச்​ச​ராக இருந்த போதும் நான் விடு​தலைப் புலிகள் ஆதர​வாளர் என்​றும் புலிகளை இங்கு தங்க வைத்​த​தாக​வும் சக அமைச்​சர் ஒரு​வரே என் மீது புகார் தந்​தார்.

அதே​போல் எங்​கள் வீட்​டில் ஹாம்​கார்டு ஒரு​வரை கொலை செய்து விட்​ட​தாக முன்​னாள் அமைச்​சர் ஒரு​வர் புகார் தந்​தார். அது தொடர்​பாக நானே உயர் நீதி​மன்​றத்​தில் வழக்​குப் போட்டு அதில் எனக்கு சம்​பந்​தமில்லை என்று நிருபித்​தேன். இப்​போது, எஃப்​ஐஆரில் எனது பெயரோ, எனது குடும்​பத்​தினர் பெயரோ இல்​லாத நிலை​யிலும் எங்​களை வம்​புக்கு இழுக்​கி​றார்​கள். அதனால் இப்​போதும் என மகள் தரப்​பில் இந்த விவ​காரத்​தில் உண்​மைக் குற்​ற​வாளி​களை சட்​டத்​தின் முன் நிறுத்​தக் கோரி உயர் நீதி​மன்​றத்​தில் வழக்​குத் தொடர​விருக்​கிறார்​கள்” என்​றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x