Published : 21 May 2025 09:08 AM
Last Updated : 21 May 2025 09:08 AM

விழுப்புரத்துக்குள் நுழைய எ.வ.வேலுக்கு கேட் போட்ட பொன்முடி: 8-வது மண்டல பொறுப்பாளராக எம்.ஆர்.கே வந்த பின்னணி

2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி ஏழு மண்டலப் பொறுப்பாளர்களை அண்மையில் அறிவித்தது திமுக தலைமை. இதில் விழுப்புரத்தை உள்ளடக்கிய வடக்கு மண்டலத்தின் பொறுப்பாளராக அமைச்சர் எ.வ.வேலு நியமிக்கப்பட்டார். இதில் எழுந்த புகைச்சலை அடக்க, எட்டாவது மண்டலப் பொறுப்பாளராக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

1989-ல் திக இறக்​கும​தி​யாக திடீர் வேட்​பாள​ராக பேராசிரியர் பொன்​முடியை விழுப்​புரத்​தில் களமிறக்​கியது திமுக தலை​மை. அந்​தத் தேர்​தலில் வென்ற அவருக்கு அமைச்​சர​வை​யிலும் முக்​கிய இடமளித்​தார் கருணாநி​தி. அது முதலே பொன்​முடிக்கு பொற்​காலம் தான். குறுகிய காலத்​தில் தன்னை திமுக தலை​மைக்கு நெருக்​க​மாக்​கிக் கொண்ட பொன்​முடி, சீக்​கிரமே ஒன்​று​பட்ட விழுப்​புரம் மாவட்​டச் செய​லா​ளர் அளவுக்கு கட்​சிக்​குள் தனது செல்​வாக்கை உயர்த்​திக் கொண்​டார். இப்​படி​யெல்​லாம் திமுக-வுக்​குள் தன்னை வளர்த்​துக் கொண்ட பொன்​முடி, தற்​போது எந்​தப் பதவி​யும் இல்​லாமல் எம்​எல்ஏ என்ற ஒற்றை அடை​யாளத்​துடன் மட்​டும் நிற்​கி​றார்.

பேச்​சில் கில்​லாடி, பேரவை நாயகன் என்​றெல்​லாம் பெயரெடுத்த பொன்​முடி, இப்​போது, பேசக்​கூ​டாததை பேசி அதி​காரத்தை இழந்து நிற்​கி​றார். இது குறித்து நம்​மிடம் பேசிய விழுப்​புரம் திமுக-​வினர், “அமைச்​சர் பதவியை​யும், துணைப் பொதுச்​செய​லா​ளர் பதவியை​யும் இழந்​திருக்​கும் பொன்​முடி, விழுப்​புரம் மாவட்ட திமுக-​வில் தன்னை மீறி யாரும் தடம்​ப​தித்து விடக்​கூ​டாது என்​ப​தில் கவன​மாக இருக்​கி​றார்.

இந்த நிலை​யில், அவருக்கு பிடிக்​காத அமைச்​சர் எ.வ.வேலுவை வடக்கு மண்டல தேர்​தல் பொறுப்​பாள​ராக தலைமை அறி​வித்​தது. ஏற்​கென​வே, விழுப்​புரத்​தில் இருந்து பிரிக்​கப்​பட்ட கள்​ளக்​குறிச்சி மாவட்ட பொறுப்பு அமைச்​ச​ராக பொன்​முடியை தவிர்த்​து​விட்டு வேலுவை நியமித்​ததையே பொன்​முடி தரப்​பின​ரால் பொறுத்​துக்​கொள்ள முடிய​வில்​லை. இந்த நிலை​யில், விழுப்​புரம் மாவட்​டத்தை உள்​ளடக்​கிய வடக்கு மண்​டலத்​துக்கு வேலுவை தேர்​தல் பொறுப்​பாள​ராக போட்​டது பொன்​முடி விசு​வாசிகளை பொறுமை கடக்க வைத்​து​விட்​டது.

இதற்​கிடை​யில் வேலு​வின் வரு​கையை கொண்​டாடிய பொன்​முடிக்கு பிடிக்​காத விழுப்​புரம் மாவட்ட எம்​எல்​ஏ-க்​களும் கட்சி நிர்​வாகி​களும் வேலுவை சந்​தித்து வாழ்த்​துத் தெரி​வித்​தனர். விழுப்​புரம் எம்​எல்​ஏ-​வான லட்​சுமணன், செஞ்சி எம்​எல்​ஏ-​வான முன்​னாள் அமைச்​சர் மஸ்​தான் ஆகி​யோர் சுவர் விளம்​பரங்​கள், மற்​றும் போஸ்​டர்​களில் எ.வ.வேலு​வின் பெயரை​யும் படத்​தை​யும் பெரி​தாகப் போட்​டதுடன் பொன்​முடி​யின் படத்​தையோ பெயரையோ போடா​மல் இருட்​டடிப்பு செய்​தார்​கள்.

இதையெல்​லாம் பார்த்​து​விட்டு உஷா​ரான பொன்​முடி தரப்​பினர், கள்​ளக்​குறிச்சி மாவட்​டத்​தைப் போல​வே, விழுப்​புரத்​தை​யும் எ.வ.வேலு தனது கைக்​குள் கொண்​டு​போய் விடு​வாரோ என அச்​சப்​பட்​டார்​கள். வேலு நியமனம் தொடர்​பாக முதல்​வர் மற்​றும் துணை முதல்​வரிடம் தனது ஆதங்​கத்தை பொன்​முடி வெளிப்​படுத்​தி​ய​தாக​வும் சொல்​கி​றார்​கள். இதையடுத்​தே, கடலூர் கிழக்​கு, விழுப்​புரம், காஞ்​சிபுரம் தெற்கு மாவட்​டங்​களுக்​கான தேர்​தல் பொறுப்​பாள​ராக அமைச்​சர் எம்​.ஆர்​.கே.பன்​னீர்​செல்​வத்தை நியமித்​திருக்​கிறது தலை​மை” என்​ற​னர்.

மண்​டலப் பொறுப்​பாளர்​களில் வன்​னியர் சமூகத்​திக்கு பிர​தி​நி​தித்​து​வம் இல்லை என்ற குறையைப் போக்​கவே எம்​ஆர்​கே-யை மண்​டலப் பொறுப்​பாள​ராக நியமித்​திருப்​ப​தாக​வும் சொல்​லப்​படு​கிறது. ஒரு காலத்​தில் எதிரும் புதிரு​மாக இருந்த எம்ஆர்​கே-​யும் பொன்​முடி​யும் அதி​முக வரவு​களான லட்​சுமணன் உள்​ளிட்​ட​வர்​களின் குடைச்​சலை சமாளிக்க தற்​போது கைகோத்​திருப்​ப​தாக​வும் சொல்​கி​றார்​கள்.

இதனிடையே, தேர்​தல் பொறுப்​பாள​ராக எம்​ஆர்கே நியமிக்​கப்​பட்​டதை வரவேற்று சுவர் விளம்​பரங்​களை தீட்​டிய பொன்​முடி ஆதர​வாளர்​கள், அவற்​றில் பொன்​முடி​யின் பெயரை​யும் பெரி​தாகப் போட்டு எதிர்த்​தரப்​புக்கு எரிச்​சலூட்டி இருக்​கி​றார்​கள். ஆக, தேர்​தல் வெற்​றிக்​காக அறிவிக்​கப்​பட்ட மண்​டலப் பொறுப்​பாளர்​கள் நியமனத்​தால் விழுப்​புரம் திமுக-வுக்​குள் கோஷ்டி கானம் இன்​னும் சத்​த​மாகக் கேட்க ஆரம்​பித்​திருக்​கிறது. இது எங்கு போய் முடியுமோ!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x