Last Updated : 19 May, 2025 12:41 PM

 

Published : 19 May 2025 12:41 PM
Last Updated : 19 May 2025 12:41 PM

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கன மழை: மேட்டூர் நீர்மட்டம் 108.82 அடியாக உயர்வு

சேலம்: காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் மேட்டூர் அணைக்கு இன்று (மே/19) நீர்வரத்து வினாடிக்கு 6,233 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 108.82 அடியாக உயர்ந்துள்ளது.

கோடை காலம் நீடிக்கும் நிலையில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. சில நாட்களுக்கு முன்னர் வரை, மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 3,000 கன அடிக்கு மேல் இருந்தது. இது நேற்று 4,764 கன அடியாக அதிகரித்தது. இந்நிலையில் நேற்று மேட்டூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கனமழை கொட்டியது.

மேட்டூரில் மட்டும் 55.4 மில்லி மீட்டர் மழை பெய்தது. இதனிடையே நேற்றும் காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் மட்டுமல்லாது மேட்டூர் சுற்று வட்டாரத்திலும் கனமழை பெய்தது. குறிப்பாக மேட்டூரில் ஒரே நாளில் நேற்று 100.6 மில்லி மீட்டர் மழை கொட்டியது. தொடர் மழையின் காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இன்று 6,233 கன அடியாக அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 108.52 அடியில் இருந்து, இன்று (மே.19) 108.82 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 76.32 டிஎம்சியிலிருந்து, இன்று 76.74 டி.எம்.சி யாக உயர்ந்துள்ளது. அணையிலிருந்து காவிரியில் வினாடிக்கு 1,000 கன அடி வீதம் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் அடுத்தடுத்த நாட்களாக தொடரும் மழையால், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x