Published : 18 May 2025 01:05 AM
Last Updated : 18 May 2025 01:05 AM
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோடை வெப்பம் தகித்து வந்த நிலையில், நேற்று திடீரென பெய்த சாரல் மழை காரணமாக மாநகரம் முழுவதும் குளிர்ச்சியான சூழல் நிலவியது.
மே 4ம் தேதி முதல் கத்திரி வெயிலும் தொடங்கியது. இதனால் சென்னை நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு மேல் பதிவானது.
இந்நிலையில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக சென்னை, புறநகர் பகுதிகளில் நேற்று காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. பிற்பகலில் ஆங்காங்கே லேசான சாரல் மழை பெய்தது.
இதன் தாக்கத்தால் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகபட்ச வெப்ப நிலை நேற்று மாலை நிலவரப்படி 89 டிகிரி ஃபாரன் ஹீட்டாக குறைந்து, மாநகரம் முழுவதும் குளிர்ச்சியான சூழல் நிலவியது. கோடை வெயிலால் அவதிப்பட்ட மக்களுக்கு இது சற்று ஆறுதலைத் தந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT