Last Updated : 16 May, 2025 09:43 AM

3  

Published : 16 May 2025 09:43 AM
Last Updated : 16 May 2025 09:43 AM

கனிம வளத்துறை வேண்டாம் என்று துரைமுருகனே சொன்னாரா? - வேலூர் திமுகவில் வட்டமடிக்கும் விவாதம்

இவரை எல்லாம் ஸ்டாலின் அத்தனை எளிதில் கைவைக்க மாட்டார் என நினைத்துக் கொண்டிருந்த துரைமுருகனின் வேலூர் மாவட்ட திமுகவினர், அவரது இலாகா மாற்றத்தால் சற்றே ஷேக் ஆகித்தான் கிடக்கிறார்கள்.

கருணாநிதி முதல்​வ​ராக இருந்த போது மூத்த அமைச்​சர் துரை​முரு​கன் தனித்த செல்​வாக்​குடன் வலம் வந்​தார். தனது அணுகு​முறை​களால் அடிக்​கடி அதிருப்​தி​களுக்கு ஆளா​னாலும் கருணாநிதி அவரை கடிந்து கொண்​ட​தில்​லை. காரணம், நெருக்​கடி​யான நேரங்​களில் கட்​சிக்​காக துரை​முரு​கன் தந்​திருக்​கும் பங்​களிப்பு அப்​படி. ஆனால், கருணாநி​தி​யின் மறைவுக்​குப் பிறகு கட்​சிக்​குள் துரை​முரு​க​னுக்​கான இருப்பு சரி​யத் தொடங்​கியது. அதைத் தெரிந்து கொண்டு பல நேரங்​களில் அவரும் வெளிப்​படை​யாகவே புலம்​ப​வும் ஆரம்​பித்​தார். “இன்​பநிதி அமைச்​சர​வை​யிலும் இந்த அவை​யில் இருப்​பேன்” என்று சொன்​னதெல்​லாம் அதன் வெளிப்​பாடு தான்.

துரை​முரு​கன் மீது தனக்கு சங்​கடங்​கள் இருந்​தா​லும் அவர் மீது எந்த நடவடிக்​கை​யும் எடுக்க முடி​யாத நிலை​யில் இருந்​தார் ஸ்டா​லின். பேசக்​கூ​டாத வார்த்​தைகளைப் பேசி​ய​தால் பொன்​முடியை அமைச்​சர் பதவியி​லிருந்​தும் கட்​சிப் பதவியி​லிருந்​தும் அடுத்​தடுத்து தூக்​கிய ஸ்டா​லின், அதே​போன்று ஒரு சர்ச்​சை​யில் சிக்​கிய துரை​முரு​கனை கண்​டும் காணா​மல் விட்​டிருந்​தார். தான் பேசிய வார்த்​தைகளுக்​காக வலிய வந்து வருத்​தம் தெரி​வித்​தார் துரை​முரு​கன். இந்த நிலை​யில், யாரும் எதிர்​பா​ராத வித​மாக, துரை​முரு​க​னிடம் இருந்த கனிமவளத் துறையை ரகுபதி வசம் ஒப்​படைத்த ஸ்டா​லின், ரகுபதி வசமிருந்த சட்​டத் துறையை துரை​முரு​கன் வசம் ஒப்​படைத்​திருக்​கி​றார்.

திமுக ஆட்​சி​யில் பெரும்​பாலும் பொதுப்​பணித்​துறைக்கே அமைச்​ச​ராக இருந்​திருக்​கி​றார் துரை​முரு​கன். ஆனால், இந்த முறை பொதுப்​பணித்​துறையை தனி​யாக பிரித்து எ.வ.வேலு​விடம் தந்த ஸ்டா​லின், துரை​முரு​க​னுக்கு நீர்​வளத் துறையை​யும் கனிம வளத்​துறையை​யும் தந்​தார். ஏற்​புடையதோ இல்​லையோ இந்த மாற்​றத்தை குறைசொல்​லாமல் ஏற்​றுக் கொண்​டார் துரை​முரு​கன். ‘வளம் தரும்’ பொதுப்​பணித் துறை இல்லை என்​றாலும் கனிமவளத் துறை கைவசமிருக்​கிறதே என்று துரை​முரு​க​னின் விசு​வாசிகளும் கொண்​டாட்​டத்​தில் தான் இருந்​தார்​கள்.

இந்​நிலை​யில், இப்​போது திடீரென நடந்​திருக்​கும் இந்த இலாகா மாற்​றம் குறித்து திமுக தரப்​பில் எழுந்த விவாதங்​கள் இன்​னும் ஓய்ந்​த​பாடில்​லை. கடந்த 4 ஆண்​டு​களில் மணல் விற்​பனை​யில் பல கோடி ரூபாய் அளவுக்கு முறை​கேடு நடத்​திருப்​ப​தாக கூறி சில மாதங்​களுக்கு முன்பு கட்​டு​மான நிறு​வனங்​கள், மணல் குவாரி​களில் வரு​மான வரித்​துறை​யினர் திடீர் ரெய்​டு​களை நடத்​தினர். காட்​பாடி, சென்​னை​யில் உள்ள துரை​முரு​க​னுக்​குச் சொந்​த​மான வீடு​களி​லும் ரெய்டு நடத்​தப்​பட்​டது. தமி​ழ​கத்​தில் இருந்து கனிமங்​கள் அண்டை மாநிலங்​களுக்கு கடத்​தப்​படு​வ​தாக எழுந்த குற்​றச்​சாட்​டின் அடிப்​படை​யில் அமலாக்​கத்​துறை​யும் விசா​ரணை நடத்தி வரு​கிறது.

இது குறித்து சட்​டமன்​றத்​தில் அதி​முக-​வினர் எழுப்​பிய கேள்விக்கு துரை​முரு​கன் அளித்த பதில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லினுக்கே திருப்தி அளிக்​க​வில்​லை. மேலும், கட்​டு​மான பொருட்​களின் திடீர் விலை ஏற்​றத்​தால் கட்​டு​மான நிறு​வனங்​கள் அரசுக்கு கடும் எதிர்ப்பை தெரி​வித்து வந்​தன. அரசு ஒப்​பந்​த​தா​ரர்​கள் கூட கட்​டு​மான வேலை​களைத் தொடர முடி​யாமல் கடும் நெருக்​கடிக்கு ஆளாகினர். இதையெல்​லாம் துரை​முரு​கன் திறம்​படக் கையாள தவறி​விட்​ட​தாக கட்​சித் தலைமை அதிருப்தி அடைந்​த​தாகச் சொல்​கி​றார்​கள். மணல் அதிபர்​களுக்கு அனுசரணை​யாக நடந்​ததுடன், மணல் குவாரி​கள் தொடர்​பான ‘கணக்கு வழக்​கு’களை தரு​வ​தி​லும் துரை​முரு​கன் சுணக்​கம் காட்​டிய​தாகச் சொல்​லப்​படு​கிறது. இதையெல்​லாம் சீர்​தூக்​கிப் பார்த்​துத்​தான் அவரிட​மிருந்த கனிமவளத்​துறையை பறித்​திருப்​ப​தாகச் சொல்​கி​றார்​கள்.

இதுகுறித்து திமுக-வின் காட்​பாடி பகு​திச் செய​லா​ளர் வன்​னிய​ராஜா​விடம் கேட்​டதற்​கு, “இலாகா மாற்​றம் என்​பது முதல்​வர் எடுக்​கும் முடிவு. எந்​தத் துறைக்கு யார் சிறப்​பாக செயல்​படு​வார்​கள் என்​பதை மனதில் வைத்​துத் தான் முதல்​வர் ஒரு சில முடிவு​களை எடுக்​கி​றார். அதன்​படி சட்ட ரீதி​யாக சந்​திக்க வேண்​டிய பல விஷ​யங்​கள் திமுக-வுக்கு இருப்​ப​தால் துரை​முரு​க​னுக்கு சட்​டத்​துறை ஒதுக்​கப்​பட்​டுள்​ளது. மேலும், ‘கனிமவளத் துறை எனக்கு வேண்​டாம். கட்​சிக்​காரர்​களை​யும் திருப்​திப்​படுத்த வேண்​டும், அரசை​யும் திருப்​திப்​படுத்த வேண்​டும் என்​றால் என்​னிடம் கனிமவளத் துறை இருக்​கக்​கூ​டாது’ என 6 மாதங்​களுக்கு முன்பே முதல்​வரிடம் துரை​முரு​கன் சொல்​லி​விட்​டார்.

வன்னியராஜா​

துரை​முரு​கன் சட்​டம் படித்​தவர் என்​ப​தால் சட்ட நுணுக்​கங்​களை அறிந்​தவர். எந்​தப் பிரச்​சினை​யாக இருந்​தா​லும் அதை சட்​டரீ​தி​யாக அவரால் அணுக முடி​யும் என்​ப​தால் அவருக்கு சட்​டத் துறை வழங்​கப்​பட்​டுள்​ளது. இதில், எங்​களுக்கு எந்த ஒரு வருத்​த​மும் இல்​லை. அமைச்​சர் பதவியை பறித்​தால் தான் நாங்​கள் வருத்​தப்பட வேண்​டும். எந்​தத் துறை​யாக இருந்​தால் என்​ன... அமைச்​சர் அமைச்​சர் தானே?” என்​றார் கூலாக.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x