Last Updated : 14 May, 2025 08:22 AM

 

Published : 14 May 2025 08:22 AM
Last Updated : 14 May 2025 08:22 AM

கட்சிக்குள் மீண்டும் காந்திச்செல்வன்… விட்ட இடத்தைப் பிடிக்க நினைக்கிறாரா?

அரசியலில், விட்ட இடத்தை பிடிக்க நினைப்பவர்களும் அப்படி பிடிக்க நினைப்பவர்களை ஆரம்ப நிலையிலேயே ஓரங்கட்ட நினைப்பவர்களுமே இன்றைக்கு நிறைந்திருக்கிறார்கள். அதுதான் அரசியலுக்கான எழுதப்படாத இலக்கணமும் கூட. நாமக்கல் மாவட்ட திமுக-விலும் இரண்டு பேர் அந்த இலக்கணத்தை இப்போது எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

பத்து ஆண்​டு​களுக்கு முன்​பு, ஒன்​று​பட்ட நாமக்​கல் மாவட்ட திமுக செய​லா​ள​ராக முன்​னாள் மத்​திய இணை​யமைச்​சர் செ.​காந்​திச்​செல்​வன் தான் இருந்​தார். ஸ்டா​லினின் தீவிர விசு​வாசி​யான இவர் மீது அதிருப்தி ஏற்​பட்​ட​தாலோ என்​னவோ 10 ஆண்​டு​களுக்கு முன்பு மாவட்​டச் செய​லா​ளர் பொறுப்​பில் இருந்து நீக்​கப்​பட்​டார். அதன்​பிறகு நாமக்​கல் மாவட்ட திமுக கிழக்​கு, மேற்கு என இரண்​டாக பிரிக்​கப்​பட்டு கிழக்கு மாவட்ட பொறுப்​பாள​ராக காந்​திச்​செல்​வன் அறிவிக்​கப்​பட்​டார்.

என்ன நடந்​ததோ தெரிய​வில்லை மிகச் சீக்​கிரமே அப்​பொறுப்​பில் இருந்​தும் காந்​திச்​செல்​வன் நீக்​கப்​பட்டு அவரது ஆதர​வாள​ரான கிழக்கு மாவட்ட துணைச் செய​லா​ளர் பார்​.இளங்​கோவன் கிழக்கு மாவட்ட பொறுப்​பாள​ராக அறிவிக்​கப்​பட்​டார். அவரும் நீண்ட நாள் தாக்​குப்​பிடிக்​க​வில்​லை. அவரை​யும் நீக்​கி​விட்​டு, கிழக்கு மாவட்ட இளைஞரணி செய​லா​ள​ராக இருந்த கே.ஆர்​.என்​.​ராஜேஸ்​கு​மாரை கிழக்கு மாவட்ட பொறுப்​பாள​ராக அறி​வித்​தது தலை​மை. பிற்​பாடு அவரே கிழக்கு மாவட்​டச் செய​லா​ள​ராக​வும் ஆனார். உதயநி​தி​யின் விசு​வாசி​யாக தன்னை அடை​யாளப்​படுத்​திக் கொண்ட ராஜேஸ்​கு​மாரிடம் மாநிலங்​களவை உறுப்​பினர், மாவட்ட மத்​திய கூட்​டுறவு வங்கி தலை​வர் பதவி​களும் வரிசைகட்டி வந்து நின்​றன.

இதையெல்​லாம் தக்​க​வைத்​துக் கொள்ள அரசி​யல் சாணக்​கி​யத்​தனத்​துடன் சில பல காய்​நகர்த்​தல்​களை ராஜேஸ்​கு​மார் மேற்​கொண்​டார். அதிலொன்​றாக, காந்​திச்​செல்​வனின் விசு​வாசிகளுக்கு பாரபட்​சமில்​லாமல் கட்​சிப் பதவி​களை வாரி வழங்​கிய​வர், உள்​ளாட்சி தேர்​தலிலும் அவர்​களுக்கு தாராள​மாக வாய்ப்​பளித்து அவர்​களை தனது விசு​வாசிகளாக மெல்ல மெல்ல மாற்​றிக் கொண்​டார். காந்​திச்​செல்​வனை தனிமர​மாக்க வேண்​டும் என்​ப​தற்​காகவே ராஜேஸ்​கு​மார் இதையெல்​லாம் கணக்​குப் போட்டு கச்​சித​மாக செய்து முடித்​த​தாகச் சொல்​வார்​கள்.

தனக்​கெ​தி​ராக இப்​படி எல்​லாம் ‘வேலை​கள்’ நடப்​பதை உள்​வாங்​கிய காந்​திச்​செல்​வன், சரிக்​குச் சரி​யாக நின்று போராட விரும்​பாமல் கட்சி நிகழ்ச்​சிகளில் கலந்து கொள்​வதை பெரும்​பாலும் தவிர்க்க ஆரம்​பித்​தார். எதிரணி​யும் அவருக்கு முறைப்​படி அழைப்​பு​கள் அனுப்​பக்​கூட பல நேரங்​களில் வாகாக மறந்​து​போனது.

இந்​தச் சூழலில் சட்​டப் பேரவை தேர்​தலுக்​காக 2 தொகு​திக்கு ஒரு மாவட்​டச் செய​லா​ளர் என நாமக்​கல் மாவட்​டத்தை கட்சி ரீதி​யாக மூன்​றாக பிரிக்க தலைமை திட்​ட​மிடு​வ​தாக செய்​தி​கள் அடிபடு​கிறது. அப்​படி பிரித்​தால் புதிய மாவட்​டத்​துக்கு காந்​திச்​செல்​வன் மீண்​டும் செய​லா​ள​ராக்​கப்​படலாம் என்​றும், இதை மனதில் வைத்து அவர் தனக்​கான ஆதரவு வட்​டத்​தைப் புதுப்​பித்து வரு​வ​தாக​வும் சொல்​கி​றார்​கள்.

நீண்ட இடைவெளிக்​குப் பிறகு அண்மையில் முரசொலி​யில் காந்​திச்​செல்​வன் முழுபக்க விளம்​பரம் கொடுத்​திருந்​தது இந்​தச் செய்​தி​களுக்கு வலு சேர்ப்​ப​தாக​வும் இருந்​தது. காந்​திச்​செல்​வன் மீண்​டும் கட்​சிக்​குள் ஆதவு திரட்​டுவதை அறிந்த ராஜேஸ்​கு​மார், மாவட்ட திமுக அலு​வல​கத்​தில் நடந்த கூட்​டம் ஒன்​றில், “நான் பனங்​காட்டு நரி. இந்த சலசலப்​புக்கு எல்​லாம் அச்​ச​மாட்​டேன்” என்ற தொனி​யில் பேசி​யதும் பரபரப்​பான பேச்​சானது.

இதனிடையே ஏப்​ரல் 30-ம் தேதி காந்​திச்​செல்​வனின் மகன் கவுதமின் திரு​மணம் நாமக்​கல்​லில் நடந்​தது. திமுக முக்​கிய நிர்​வாகி​கள் பலரும் இந்​தத் திரு​மணத்​தில் கலந்​து​கொண்​டனர். பகை வருமோ எனப் பயந்து நாமக்​கல் கிழக்கு மாவட்ட திமுக-​வினர் பலரும் போவதா வேண்​டாமா என யோசித்​துக் கொண்​டிருந்த நிலை​யில், முதல் நாள் வரவேற்பு நிகழ்ச்​சி​யிலும் திரு​மணத்​தன்​றும் ராஜேஸ்​கு​மார் திருமண நிகழ்​வு​களில் கலந்து கொண்​டார். கிழக்கு மாவட்ட திமுக சார்​பில் பத்​திரிகை விளம்​பர​மும் படபடத்​தது.

இந்​தத் திரு​மணத்​தில் கலந்து கொண்ட திமுக நிர்​வாகி​களுக்கு நன்றி தெரி​வித்து முகநூலில் பதிவு ஒன்றை போட்​டிருந்த ராஜேஸ்​கு​மார், காந்​திச்​செல்​வனுக்கு சால்வை அணிவிக்​கும் போட்​டோவை​யும் அதனுடன் இணைத்​திருந்​தார். இதைப் பார்த்​து​விட்​டு, நாமெல்​லாம் போறதா வேண்​டா​மான்னு நினைச்​சுக்​கிட்டு இருக்​கை​யில இவரு ஓவரா சீன் போட்​டிருக்​கி​றாரே என கிழக்கு மாவட்ட திமுக-​வினர் தங்​களுக்​குள் குமைந்​திருக்​கி​றார்​கள்.

இதனிடையே, ராஜேஸ்​கு​மாரின் பதிவை விமர்ச்​சிக்​கும் வித​மாக நாமக்​கல் துணை மேயர் செ.பூபதி முகநூலில் கருத்து ஒன்றை பதி​விட்​டிருந்​தார். இதற்கு எங்​கிருந்து எப்​படி ரியாக் ஷன் வந்​ததோ தெரிய​வில்​லை. உடனே அந்​தப் பதிவை நீக்​கி​விட்டு ராஜேஸ்​கு​மாருக்கு ஜே போடும் வித​மாக புதி​தாக இன்​னொரு பதிவை போட்டு எஸ்​கேப் ஆனார் பூப​தி.

ஆனால், அதற்​குள்​ளாக திமுக-​வினர் இந்த இரண்டு பதிவு​களை​யும் ஸ்க்​ரீன் ஷாட் எடுத்து வைத்​து​விட்​டனர். அந்​தப் பதிவு​களை நாம் பூப​திக்கு வாட்ஸ் அப்​பில் அனுப்பி வைத்​தோம். உடனே போனில் பேசிய பூப​தி, “நான் தான் முதலில் போட்ட கருத்தை டெலிட் செய்​து​விட்​டேனே... அதையெல்​லாம் எதற்​காக ஸ்க்​ரீன் ஷாட் எடுத்து வைத்​திருக்​கிறீர்​கள்?” என்று சிடுசிடுத்​தார்.

அனைத்​தை​யும் தலைமை பார்த்​துக் கொள்​ளும் என்று மாவட்​டச் செய​லா​ளர்​களுக்கு அண்​மை​யில் அறி​வுறுத்தி இருக்​கும் திமுக தலை​வர் ஸ்டா​லின், நாமக்​கல் திமுக-​வில் நடப்​பதை எல்​லாம் அறி​யாமலா இருப்​பார்​?

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x