Published : 12 May 2025 05:12 AM
Last Updated : 12 May 2025 05:12 AM

தீவிர​வா​த முகாம்​களை அழித்த இந்திய ராணுவத்​துக்கு ரஜினி பாராட்டு: பிரதமருக்கு ஜி.கே.​வாசன் நன்றி

சென்னை: பாகிஸ்​தானில் தீவிர​வா​தி​கள் முகாம்​களை துவம்​சம் செய்த இந்​திய ராணுவத்​துக்கு மனமார்ந்த பாராட்​டு​கள் என்று நடிகர் ரஜினி​காந்த் தெரி​வித்​தார். தீவிர​வாதத்​துக்கு முற்​றுப்​புள்ளி வைக்க வேண்​டும் என்ற நோக்​கத்​தில் செயல்​பட்ட இந்​திய அரசுக்கு பாராட்​டு​கள் என்று தமிழ் மாநில காங்​கிரஸ் தலை​வர் ஜி.கே.​வாசன் தெரி​வித்​துள்​ளார்.

இந்​தியா - பாகிஸ்​தான் இடையே நடை​பெற்று வந்த தாக்​குதல் சம்​பவம், போர்​நிறுத்​தம் ஒப்​பந்​தத்தை தொடர்ந்து நேற்று முன்​தினம் முடிவுக்கு வந்​தது. இருப்​பினும் எல்​லைப்​பகு​தி​களில் பதற்​ற​மான சூழல் நில​வு​கிறது. இந்​திய எல்​லைப்​பகு​தி​களில் ராணுவத்​தினர் தீவிர கண்​காணிப்​பில் ஈடு​பட்டு வரு​கின்​றனர்.

இந்​நிலை​யில், இந்​திய ராணுவத்தை நடிகர் ரஜினி​காந்த் பாராட்​டி​யுள்​ளார். கேரளா​வுக்கு படப்​பிடிப்​புக்கு செல்​வதற்​காக சென்னை விமான நிலை​யத்​துக்கு நடிகர் ரஜினி​காந்த் நேற்று வந்​தார். பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறும்​போது, “பாகிஸ்​தானில் தீவிர​வா​தி​கள் முகாம்​களை இந்​திய ராணுவத்​தினர் துவம்​சம் செய்​துள்​ளனர்.

அவர்​களுக்கு எனது மனமார்ந்த பாராட்​டுக்​கள். இந்த போரை திறமை​யாக, வலிமை​யாக, வீரி​யத்​துடன் கையாண்ட பிரதமர் மோடி, உள்​துறை அமைச்​சர் அமித்​ஷா, பாது​காப்​புத்​துறை அமைச்​சர் ராஜ்​நாத்​சிங், ராணுவத்​தினர் உள்​ளிட்​டோருக்​கும் எனது வாழ்த்​துகள்” என்று தெரி​வித்​தார்.

இந்தியர்கள் ஒருமித்த கருத்து: இதேபோல், தமிழ் மாநில காங்​கிரஸ் தலை​வர் ஜி.கே.​வாசன் நேற்று வெளி​யிட்ட அறிக்​கையில் கூறியிருப்பதாவது: இந்​திய அரசும், பிரதமரும் இந்​திய நாட்டு மக்​களுக்கு நம்​பிக்கை கொடுக்​கும் வகை​யில், பாகிஸ்​தான் தீவிர​வாதத்தை ஒடுக்​கும் வித​மாக செயல்​பட்​டதற்​கும், இந்​தி​யா​வுக்கு வெற்​றி​யாக அமைந்​திருப்​ப​தற்​கும் நன்​றி.

இந்​திய அரசும், பிரதமரும் பாகிஸ்​தானுடைய தீவிர​வாதத்​துக்​கும், பயங்​கர​வாதத்​துக்​கும் முற்​றுப்​புள்ளி வைக்க வேண்​டும் என்ற நோக்​கத்​தில் நடவடிக்​கை​களில் ஈடு​பட்​டது பாராட்​டத்​தக்​கது. இந்​தி​யர்​கள் மத்​திய அரசுக்கு ஒருமித்த கருத்​தோடு துணை நிற்​பது கூடு​தல் பலம்.

குறிப்​பாக, பாகிஸ்​தானுடைய தாக்​குதலுக்கு எதிர்​வினை​யாக என்​னென்ன செயல்​பாடு​களில் ஈடுபட வேண்​டும் என்​ப​தற்​காக பிரதமர் தலை​மையி​லான மத்​திய அரசின் ராஜதந்​திர​மான முடிவு​களும், நமது முப்​படைகளின் தேசப்​பற்​றும் இந்​தி​யா​வின் பக்​கம் தர்​மத்​தை​யும், வெற்​றியை​யும் கொடுத்​திருக்​கிறது. எனவே, 140 கோடி இந்​தி​யர்​களுக்கு நம்​பிக்​கை​யும், பாது​காப்​பை​யும் கொடுத்​துக் கொண்​டிருக்​கின்ற இந்​திய அரசுக்​கு நன்​றி. இவ்​வாறு அதில்​ அவர்​ தெரி​வித்​துள்​ளார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x