Last Updated : 05 May, 2025 09:09 AM

4  

Published : 05 May 2025 09:09 AM
Last Updated : 05 May 2025 09:09 AM

‘ஆட்சியில் பங்கு கேட்பதில் என்ன தவறு இருக்கிறது?’ - கச்சைகட்டும் காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கைக் குழு தலைவர்!

கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கு அதிகாரத்தில் பங்கு என்று விஜய் சொன்னாலும் சொன்னார் எல்லாக் கட்சிகளும் இப்போது இதை முக்கிய அஜென்டாவாக வைக்கத் தொடங்கிவிட்டன.

​தி​முக கூட்​ட​ணிக்​குள் சலசலப்பை உண்​டாக்க வேண்​டும் அங்​கிருக்​கும் கட்​சிகளுக்​கும் சபலத்தை உண்​டாக்க வேண்​டும் என்​ப​தற்​காகவே கட்​சி​யின் முதல் மாநாட்​டிலேயே போகிற போக்​கில் ‘அதி​காரத்​தில் பங்​கு’ என்று கொளுத்​திப் போட்​டார் விஜய். அது இப்​போது நன்​றாகவே பற்றி எரிய ஆரம்​பித்​திருக்​கிறது.

“2026-ல் தமி​ழ​கத்​தில் என்​டிஏ கூட்​டணி ஆட்சி அமை​யும்” என அமித் ஷா வெளி​யிட்ட அறி​விப்​பானது அதி​முக - பாஜக கூட்​ட​ணிக்​குள் ஆளுக்​கொரு வித​மாக புரிந்து கொள்​ளப்​பட்​டுள்​ளது. இருந்​தா​லும் இதை இப்​போது சர்ச்​சை​யாக்க வேண்​டாம் தேர்​தல் முடிவு​களுக்​குப் பிறகு பார்த்​துக் கொள்​ளலாம் என இரண்டு கட்​சிகளுமே அர்த்​தத்​துடன் அடக்கி வாசிக்​கின்​றன.

இந்த நிலை​யில், காங்​கிரஸ் கட்​சிக்​கும் அமைச்​ச​ராகும் ஆசை அடிமன​தில் இருக்​கிறது. ஆனால், திமுக என்ன நினைக்​குமோ என்ற அச்​சத்​தில் அதன் தலை​வர்​கள் அதை வெளிப்​படை​யாகச் சொல்​லத் தயங்​கு​கி​றார்​கள். ஆனால், நிர்​வாகி​கள் விடு​வ​தாக இல்​லை. ஏப்​ரல் 14-ம் தேதி செல்​வப்​பெருந்​தகை​யின் பிறந்த நாளுக்​காக கட்​சி​யின் மாநிலச் செய​லா​ளர் ஷெரிப், ‘ஆட்​சி​யில் பங்கு அதி​காரத்​தி​லும் பங்கு - 2026-ன் துணை முதல்​வரே’ என போஸ்​டர் அடித்து புரட்சி செய்​திருந்​தார். இதைப் பார்த்​து​விட்​டுப் பதறிப்​போன செல்​வப்​பெருந்​தகை ஷெரிப்​புக்கு விளக்​கம் கேட்டு நோட்​டீஸ் அனுப்பி இருக்​கி​றார்.

இதைத் தொடர்ந்து சென்​னை​யில் நடை​பெற்ற காங்​கிரஸ் மாவட்ட தலை​வர்​கள் கூட்​டத்​தில் இந்த விவ​காரம் சர்ச்​சை​யாகி இருக்​கிறது. கட்​சி​யினர் தவறு செய்​தால் நடவடிக்கை எடுக்க வேண்​டிய இடத்​தில் இருக்​கும் காங்​கிரஸ் ஒழுங்கு நடவடிக்​கைக் குழு தலை​வர் கே.ஆர்​.​ரா​ம​சாமியே, “அப்​படி போஸ்​டர் அடித்​த​தில் என்ன தவறு இருக்​கிறது?” என்று கேட்​டிருக்​கி​றார்.

இது குறித்து கே.ஆர்​.​ரா​ம​சாமி​யிடம் பேசினோம். “நாங்​கள் திமுக கூட்​ட​ணி​யில் இருக்​கி​றோம். கட்சி நிர்​வாகி​கள், தொண்​டர்​கள் அவர்​கள் விருப்​பத்​தைச் சொல்​கி​றோம். எங்​களுக்​கும் ஆட்​சி​யில் பங்கு வேண்​டும் என தெரி​விப்​ப​தில் தவறில்​லை. இதில் நாங்​கள் பின் வாங்​க​வில்​லை. காங்​கிரஸ் மாநில தலை​வரை, துணை முதல்​வர் என ஷெரிப் வெளிப்​படுத்​தி​யது அவரது விருப்​பம். இதற்கு நோட்​டீஸ் அனுப்​பத் தேவை​யில்லை என்​பது எனது கருத்​து. அதனால், நோட்​டீஸ் அனுப்​பியதை நாங்​கள் ஏற்​றுக் கொள்​ள​வில்​லை.

கட்​சி​யினரின் ஆர்​வத்தை இப்​படி ஆரம்​பத்​திலேயே கிள்ளி எறிந்​தால் கட்​சியை வளர்த்​தெடுக்க முடி​யாது. தொண்​டர்​களும் சோர்ந்து விடு​வார்​கள். ஆட்​சி​யில் பங்கு கேட்க காங்​கிரஸ் கட்​சிக்​கும் உரிமை இருப்​பது நியா​யம்​தானே?

ராம​நாத​புரம் உள்​ளிட்ட பல மாவட்​டங்​களில் மாவட்​டத் தலை​வர்​களை நியமிக்​காமல் இருப்​பது வருத்​த​மாகத் தான் உள்​ளது. மீண்​டும் நான் தேர்​தலில் நிற்க வேண்​டும் என்று சொன்​னால் கட்​சி​யில் எனக்கு சீட் கொடுத்​து​விடு​வார்​கள். ஆனால், நான் கட்​சியை வளர்க்க வேண்​டும் என நினைக்​கிறேன். அதற்​காகத் தொடர்ந்து பணி​யாற்​றிக் கொண்​டிருக்​கிறேன்” என்​று சொன்னார் அவர்.

ஒரு​வேளை, மறு​படி​யும் தேர்​தலில் போட்​டி​யிடும் திட்​டத்​தில் இருந்​தீருப்​பீர்​கள் என்​றால் ‘ஆட்​சி​யில் பங்​கு’ என்று கேட்​ப​தில் இருக்​கும் ஆபத்து உங்​களை​யும் மிரட்டி இருக்​குமோ என்​னவோ!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x