Published : 05 May 2025 03:55 AM
Last Updated : 05 May 2025 03:55 AM

4 விரைவு ரயில்களில் முன்பதிவில்லாத பெட்டிகள் அதிகரிப்பு

சென்னை: அதிகரித்து வரும் பயணிகளின் வசதிக்காக தெற்கு ரயில்வேயில் இயக்கப்படும் 4 விரைவு ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எழும்பூர் - தஞ்சாவூர் உழவன் விரைவு ரயிலில் (16865- 16866) இரு மார்க்கத்திலும் கூடுதலாக ஒரு முன்பதிவு இல்லாத பெட்டி இணைக்கப்படவுள்ளது. இதேபோல் சென்னை எழும்பூர் - கொல்லம் விரைவு ரயிலிலும் (16101- 16102) இரு மார்க்கத்திலும் கூடுதலாக ஒரு முன்பதிவில்லாத பெட்டி ஜூலை 1-ம் தேதி முதல் இணைக்கப்படுகிறது.

மேலும் நாகர்கோவில் - தெலங்கானா மாநிலம் காச்சிகுடா விரைவு ரயிலில் (16353- 16354) இரு மார்க்கத்திலும் கூடுதலாக ஒரு முன்பதிவு இல்லாத பெட்டி ஜூலை 5-ம் தேதி முதலும் சென்னை எழும்பூர் - கொல்லம் அனந்தபுரி விரைவு ரயிலில் (20635- 20636) இரு மார்க்கத்திலும் கூடுதலாக ஒரு முன்பதிவு இல்லாத பெட்டி ஜூலை 2-ம் தேதி முதல் இணைத்து இயக்கப்படும். இத்தகவல் தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x