Last Updated : 03 May, 2025 09:43 AM

17  

Published : 03 May 2025 09:43 AM
Last Updated : 03 May 2025 09:43 AM

அண்ணாமலை மாற்றத்தால் அப்செட் ஆன கோவை தொழில் துறையினர்!

2024 மக்களவைத் தேர்தலில் பாஜக தரப்பில் வெற்றி வேட்பாளராக பார்க்கப்பட்டவர் கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட அண்ணாமலை. எப்படியும் ஜெயித்தாக வேண்டும் என்பதற்காக, கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் சரியாகப் பயன்படுத்திய அண்ணாமலை, கோவை தொழில்துறையினருக்கும் வாக்குறுதிகளை ஏராளமாக வாரி வழங்கி இருந்தார்.

மத்திய அரசில் செல்வாக்கான நபராக இருப்பதால் இவர் வெற்றிபெற்றால் நமக்கான பிரச்சினைகள் தீரும் என்ற நம்பிக்கையில், கோவை தொழிலதிபர்கள் சிலர், மாநிலத்தை ஆளும் திமுக-வின் பொல்லாப்பு வருமே என்றெல்லாம் கவலைப்படாமல் அண்ணாமலைக்கு ஆதரவாக நின்றார்கள். சிலர் ஆளும் கட்சியின் நெருக்கடிகளையும் சமாளித்து அண்ணாமலைக்காக வாக்குச் சேகரித்தார்கள்; பலர் நிதியுதவியும் தந்தார்கள். ஆனாலும், தேர்தல் முடிவுகள் இவர்களின் எதிர்பார்ப்புக்கு நேர்மாறாக அமைந்து போனது.

​காலை உணவு திட்டம், பெண்களுக்கு இலவச பேருந்துப் பயணம், மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட திமுக அரசின் சாதனை திட்டங்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளி​விட்டு அண்ணாமலை என்ற மனிதருக்காக கோவை மக்கள் சுமார் நாலரை லட்சம் வாக்குகளை வாரி வழங்கி​னார்கள். அதிமுக கூட்டணி இருந்​திருந்தால் அண்ணாமலை ஜெயித்தே இருப்​பார். கோவை மாவட்ட வளர்ச்​சிக்கு அண்ணாமலை அளித்​திருந்த வாக்குறு​திகள் அப்படி. அதை நம்பித்தான் தொழில்​துறை​யினரும் அவருக்கு ஆதரவாக களத்தில் நின்றார்கள்.

தேர்தலில் தோற்றாலும் தனது செல்வாக்கை தக்கவைக்க அண்ணாமலை கோவையின் வளர்ச்சித் திட்டங்​களுக்காக மத்திய அரசிடம் பேசுவார் என்ற அடுத்​தகட்ட நம்பிக்​கையும் கோவை மக்களுக்கு இருந்தது. ஆனால், அவர்கள் எதிர்​பார்த்த எதுவுமே நடக்க​வில்லை. போதாதுக்கு, அண்ணாமலை பாஜக தலைவர் பதவியி​லிருந்தும் தூக்கப்​பட்​டிருப்​பதால் மேற்கொண்டும் துவண்டு கிடக்​கி​றார்கள் கோவை மக்கள்.

தேர்தலில் தோற்றாலும், “கோவையின் தொழில் வளர்ச்சி, விமான நிலைய விரிவாக்கம் போன்ற நடவடிக்​கை​களுக்கு மத்திய அரசிடம் தேவையான உதவிகளை நிச்சயம் கேட்டுப் பெற்றுத் தருவேன்” என உறுதி​யளித்தார் அண்ணாமலை. ஆனால், “அண்ணாமலை சொன்னதெல்லாம் வெறும் வாக்குறு​தி​யாகவே இருக்​கிறது; எதுவுமே வேலைக்கு ஆகவில்லை” என்று ஆதங்கத்தைக் கொட்டு​கி​றார்கள் அவருக்கு பின்னால் நின்ற கோவை தொழில்​துறை​யினர்.

அதிமுக-வுக்கு எதிரான கருத்​துகளை அண்ணாமலை பேசிய விதம் அந்தக் கட்சியை நேசிக்கும் பெரும்​பகுதி கோவை மக்களை அண்ணாமலை மீது அதிருப்தி கொள்ளச் செய்தது. இருந்​தாலும் திமுக-வுக்கு தக்க பதிலடி கொடுக்​கிறார் என்பதற்காக அவரைத் தூக்கிப் பிடித்​தார்கள். பஞ்சு மீதான 11 சதவீத இறக்குமதி வரியை ரத்து செய்தல், பாலியஸ்டர், விஸ்கோஸ் உள்ளிட்ட செயற்கை இழைகள் மீதான இறக்குமதி வரியை ரத்து செய்தல், ஜிஎஸ்டி பிரச்​சினைகளை சரிசெய்தல், கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிகளை விரைவுபடுத்​துதல், துபாய், கோலாலம்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு கோவையி​லிருந்து விமான சேவைகளைத் தொடங்​குதல் - இதெல்லாம் அண்ணாமலை கோவை மக்களுக்கு அளித்த வாக்குறு​திகள்.

இவை எதுவுமே செயல்​வடிவத்​துக்கு வரவில்லை என்பதுதான் கோவை தொழில்​துறை​யினருக்கு அண்ணாமலை மீதிருக்கும் ஆதங்கம்.
முற்றாக நம்பிக்கை இழந்து​விட்​டாலும், “அண்ணா​மலைக்கு தேசிய அளவில் முக்கி​யத்​துவம் அளிக்​கப்​படும்” என உள்துறை அமைச்சர் அமித் ஷா சொல்லி இருப்பதை நம்பி, இன்னமும் கோவை தொழில் துறையினர் சிலர், ‘அண்ணா​மலையால் அது முடியும்’ என்ற நம்பிக்​கையில் காத்திருக்​கி​றார்கள். அந்த நம்பிக்கையை அண்ணாமலை இனியாவது காப்பாற்​றுகிறாரா என்று பார்க்​கலாம்​!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x