Published : 02 May 2025 07:27 AM
Last Updated : 02 May 2025 07:27 AM

உலகில் எங்கிருந்தாலும் உங்களின் ஒரே வீடு இந்தியாதான்: அமெரிக்காவின் அரிசோனா பல்கலை.யில் அண்ணாமலை உரை 

அமெரிக்​கா​வின் அரிசோனா பல்​கலைக்​கழகத்​தின் இந்​திய கொள்கை மற்​றும் பொருளா​தார ஆய்வு கிளப் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் இந்​திய மாணவர்​களிடம் பாஜக மூத்த தலை​வர் அண்​ணா​மலை பேசி​ய​தாவது: அமெரிக்​கா​வின் அரிசோனா பல்​கைலைக்​கழகத்​தில் படிக்​கும் நீங்​கள் அதிர்​ஷ்ட​சாலிகள். இங்கு உலகளா​விய அறிவை உங்​களால் பெற முடி​யும். படிக்​கும் காலத்​தில் நாம் அடுத்த 30 அல்​லது 40 ஆண்​டு​களுக்​கான வாழ்க்​கைக்கு நம்மை தயார் செய்​வது முக்​கி​யம். இந்​தியா வளர்ச்சிப் பாதை​யில் சென்று கொண்​டிருக்​கிறது.

தொழில்​துறை வளர்ந்து கொண்​டிருக்​கிறது. ஸ்டார்ட் அப் தொழில் துறை​யில் நாம் உலகள​வில் இரண்​டாவது இடத்​தில் உள்​ளோம். அமெரிக்​கா, இங்​கிலாந்​து, ஆஸ்​திரேலியா என உலகம் முழு​வதும் இந்​திய மாணவர்​கள் அதி​கள​வில் உள்​ளனர். 2047-ம் ஆண்​டில், நாம் 34 டிரில்​லியன் டாலர் பொருளா​தா​ரத்தை எட்​ட​வுள்​ளோம்.

நீங்​கள் இங்கு நன்​றாக படி​யுங்​கள், உங்​களை முழு​வது​மாக தயார் படுத்​திக் கொள்​ளுங்​கள், நீங்​கள் படித்​துக் கொண்​டிருக்​கிற நாட்டை மதிக்க வேண்​டும். இந்த நாடு பலருக்கு வாய்ப்​பளிக்​கிறது. நீங்​கள் தாய்நாடு திரும்​பும்​போது இந்​தி​யா-அமெரிக்கா இடையே​யான கலாச்​சார தூது​வர்​களாக இருக்க வேண்​டும்.

இந்​தி​யா​வும், அமெரிக்கா​வும், உங்​களிடம் அதி​கம் எதிர்​பார்க்​கிறது. நீங்​கள் எங்​கிருந்​தா​லும், என்ன செய்​தா​லும், உங்​களின் ஒரே வீடு இந்​தி​யா​தான். அங்​கு​தான் உங்​களின் வேர் உள்​ளது. அதை நீங்​கள் எப்​போதும் நினை​வில் கொள்ள வேண்​டும். நாளைக்கு உங்​களுக்கு ஏதாவது பிரச்​சினை என்​றால், இந்​தியா உங்​களுக்கு முதலில் வந்து உதவும். நாம் இருக்​கும் நாட்டை மதிக்க வேண்​டும், அதே நேரத்​தில் நமது வேரை மறக்க கூடாது.

காஷ்மீரின் பஹல்​காமில் நடை​பெற்ற தீவிர​வாத தாக்​குதல் மிக சோக​மானது. மும்பை தீவிர​வாத தாக்​குதல் நடந்​த​போது, நமது உளவுத்​துறை வலு​வாக இல்​லை. ஆனால், தற்​போது உளவுத்​துறை​யின் ஒத்​துழைப்பு நன்​றாக உள்​ளது. எல்லை வழி​யாக நுழைந்து தாக்​கி​விட்டு தீவிர​வா​தி​கள் எளி​தில் தப்​பிச் சென்​றுள்​ளனர். காஷ்மீரைச் சேர்ந்த இளைஞர், மாணவர் விசா​வில் பாகிஸ்​தான் சென்று 7 ஆண்​டு​களாக நாடு திரும்​ப​வில்​லை.

அவரை பாது​காப்பு படை​யினர் சில காலம் மட்​டுமே கண்​காணிக்க முடிந்​தது. அவர் 6 தீவிர​வா​தி​களு​டன் வந்து தாக்​குதலை நடத்​தி​யுள்​ளார். இப்​பிரச்​சினைக்கு நமது பாது​காப்பு படைகளும், அரசி​யல் தலை​வர்​களும் தீர்வு காண்​பர். நமது பிரதமர் அவர்​களுக்கு சரி​யான பாடம் கற்​பிப்​பார்.

இது போன்ற தாக்​குதல், நாகரீக போராக இந்​தி​யா​வில் பல ஆயிரம் ஆண்​டு​களாக நடை​பெற்​றுள்​ளது. இந்​தி​யாவை ஆண்ட முகலாய மன்​னர்​கள் பலர் வா​ராணசி​யில் இந்து கோயில்​களை பலவற்றை தொடர்ந்து இடித்​துள்​ளனர். இப்​பிரச்​சினைக்​கு ஒரே நாளில்​ தீர்​வு ஏற்​பட​போவ​தில்​லை. இவ்​வாறு அண்​ணாமலை பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x