Last Updated : 29 Apr, 2025 08:14 AM

 

Published : 29 Apr 2025 08:14 AM
Last Updated : 29 Apr 2025 08:14 AM

மறுவரையறையில் மறுபடியும் மலருமா புதுக்கோட்டை மக்களவைத் தொகுதி? - குரலெழுப்பும் மாவட்ட மக்கள்

திருநாவுக்கரசர், எம்.எம்.அப்துல்லா, எஸ்.விஸ்வநாதன்

மக்களவைத் தொகுதிகளை மறுவரையறை செய்வதன் மூலம் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கான தொகுதிகளின் விகிதாச்சார எண்ணிக்கையை மத்திய அரசு குறைக்கப் பார்ப்பதாக குமுறுகிறார் முதல்வர் ஸ்டாலின். இதைத் தடுப்பதற்காக மாநில முதல்வர்களை ஒருங்கிணைத்து முதல்கட்ட ஆலோசனைக் கூட்டத்தையும் நடத்தி இருக்கிறார்.

இந்த நிலையில், ஏற்கெனவே தொகுதி மறு சீரமைப்பின் போது காணாமல் செய்யப்பட்ட புதுக்கோட்டை மக்களவைத் தொகுதி மீண்டும் உருவாக்கப்படுமா என்ற கேள்வி புதுக்கோட்டை மாவட்ட மக்கள் மத்தியில் தற்போது மேலோங்கி வருகிறது. மன்​னர்​கள் அரண்​மனை கட்டி ஆட்சி செய்த இடம் என்ற வரலாற்​றுப் பாரம்​பரி​யம் புதுக்​கோட்​டைக்கு உண்​டு.

அந்த வகை​யில், 2004 மக்​கள​வைத் தேர்​தல் வரைக்​கும் புதுக்​கோட்டை மக்​கள​வைத் தொகுதி தனி​யாக இருந்​தது. ஆனால், அதற்கு அடுத்து வந்த தொகுதி மறு சீரமைப்​பில் புதுக்​கோட்டை தொகு​தி​யில் இருந்த அறந்​தாங்கி சட்​டமன்​றத் தொகுதி ராம​நாத​புரம் மக்​கள​வைத் தொகு​தி​யுட​னும், பட்​டுக்​கோட்​டை, பேராவூரணி தொகு​தி​கள் தஞ்​சாவூர் மக்​கள​வைத் தொகு​தி​யுட​னும், புதுக்​கோட்​டை, கந்​தர்​வக்​கோட்டை தொகு​தி​கள் திருச்சி மக்​கள​வைத் தொகு​தி​யுட​னும், ஆலங்​குடி தொகுதி சிவகங்கை மக்​கள​வைத் தொகு​தி​யுட​னும், விராலிமலை தொகுதி கரூர் மக்​கள​வைத் தொகு​தி​யுட​னும் சேர்க்​கப்​பட்டு புதுக்​கோட்டை மக்​கள​வைத் தொகுதி நீக்​கப்​பட்​டது.

இதைக் கண்​டித்து அப்​போதே புதுக்​கோட்டை மக்​கள் பலகட்ட போராட்​டங்​களை நடத்​தி​னார்​கள். அந்த சமயத்​தில் மத்​தி​யில் திமுக கூட்​டணி ஆட்சி தான் இருந்​தது. புதுக்​கோட்டை தொகு​தி​யின் எம்​பி-​யாக​வும் மத்​திய அமைச்​ச​ராக​வும் இப்​போதைய தமிழக சட்​டத்​துறை அமைச்​சர் ரகுபதி தான் இருந்​தார். ஆனாலும் இந்த விஷ​யத்​தில் திமுக-வோ ரகுப​தியோ பெரி​தாக அலட்​டிக்​கொள்​ள​வில்லை என்ற குற்​றச்​சாட்​டு உண்​டு. தொகுதி மறு சீரமைப்​பில் முதலில் மயி​லாடு​துறை மக்​கள​வைத் தொகு​தி​தான் நீக்​கப்​படு​வ​தாக இருந்​தது.

ஆனால், அப்​போது மயி​லாடு​துறை எம்​பி-​யாக இருந்த மணிசங்​கர் ஐய்​யர் முன்​னேற்​பா​டாக காய் நகர்த்தி பேசவேண்​டிய இடத்​தில் பேசி தனது தொகு​தி​யைக் காப்​பாற்​றிக் கொண்​டார். புதுக்​கோட்​டைக்கு அப்​படி மெனக்​கிட யாரும் இல்​லாமல் போன​தால் தேர்​தல் ஆணைய வரைபடத்​தி​லிருந்து புதுக்​கோட்டை தொகுதி காணா​மல் போய்​விட்​டது என்ற கோபக் குரல்​களும் அந்த சமயத்​தில் கிளம்பி அடங்​கின.

தொகு​தியை இழந்த புதுக்​கோட்டை மாவட்​டத்து மக்​கள் தங்​களது எதிர்ப்​பைக் காட்​டும் வித​மாக, அடுத்து வந்த தேர்​தல்​களில் நோட்​டாவுக்கு வாக்​களிப்​பதை ஒரு இயக்​க​மாகவே நடத்​தி​னார்​கள். அதே​போல் இவர்​களிடம் வாக்​குக் கேட்டு வரும் அனைத்​துக் கட்சி வேட்​பாளர்​களும், அது தங்​களால் முடி​யுமா முடி​யாதா என்​றுகூட தெரி​யாமல், “புதுக்​கோட்டை மக்​கள​வைத் தொகு​தியை மீண்​டும் உரு​வாக்க முயற்​சிப்​போம்” என வாக்​குறு​தி​களை வாரி வாழங்​கு​வதை வழக்​க​மாக்​கிக் கொண்​டார்​கள்.

ஒரு​கட்​டத்​தில், நம்​பிக்கை இழந்​து​விட்ட புதுக்​கோட்டை மாவட்​டத்து மக்​களுக்​கு, ‘தொகுதி மறு வரையறை’ என்று கிளம்பி இருக்​கும் ஓர் ஒளிக் கீற்று மீண்​டும் நம்​பிக்கை விதையை விதைத்​திருக்​கிறது. அதனால், இந்த வரையறை​யின் போது மீண்​டும் புதுக்​கோட்டை தொகு​தியை உரு​வாக்க வேண்​டும் என்று குரலெழுப்ப ஆரம்​பித்​திருக்​கி​றார்​கள்.

இதுகுறித்து பேசிய சமூக ஆர்​வலரும், வாசகர் பேரவை செய​லா​ள​ரு​மான எஸ்​.​விஸ்​வ​நாதன், “எந்​தப் பிர​திபலனை​யும் எதிர்​பா​ரா​மல் புதுக்​கோட்டை சமஸ்​தானத்தை பிரிட்​டீஷார் இந்​தி​யா​வுடன் இணைத்​தனர். அத்​தகைய பாரம்​பரி​யத்​தை​யும், புதுக்​கோட்​டை​யின் பெரு​மை​யை​யும் மீட்​டெடுக்க வேண்​டியது மிக​வும் அவசி​ய​மானது. மக்​கள​வைத் தொகு​தி​கள் மறு​வரையறை செய்​யப்​படும் போது புதுக்​கோட்டை தொகுதி மீண்​டும் உரு​வாக்​கப்பட வேண்​டும். இது குறித்து மத்​திய அரசின் கவனத்தை ஈர்க்​கும் வகை​யில் அரசி​யல் கட்​சிகளைச் சாரா​மல் சமூக அமைப்​பு​களை உள்​ளடக்கி விரை​வில் விழிப்​புணர்வு பேரணி உள்​ளிட்ட இயக்​கங்​களை நடத்த உள்​ளோம்” என்​றார்.

புதுக்​கோட்​டையைச் சேர்ந்த திமுக மாநிலங்​களவை உறுப்​பினர் எம்​.எம்​.அப்​துல்​லா​விடம் இது குறித்து கேட்​டதற்​கு, “கடந்த முறை நடை​பெற்ற தொகுதி மறு​வரையறையைப் போன்று மீண்​டும் நடத்​தப்பட வேண்​டும். அப்​படி நடத்​தும் போது புதுக்​கோட்டை தொகுதி நிச்​ச​யம் உரு​வாகும். எப்​படி ஆயினும் புதுக்​கோட்டை தொகு​தியை போராடி​யா​வது நான் மீட்​டெடுப்​பேன்” என்​றார்.

புதுக்​கோட்டை தொகு​தி​யின் முன்​னாள் எம்​பி-​யான சு. திரு​நாவுக்​கரசரிடம் கேட்​டதற்​கு, “புதுக்​கோட்டை மக்​கள​வைத் தொகுதி நீக்​கப்​பட்​டது சட்​டத்​துக்​குப் புறம்​பானது. இதை எதிர்த்து உயர் நீதி​மன்​றத்​தி​லும் வழக்​குத் தொடரப்​பட்​டது. மீண்​டும் தொகுதி மறு​வரையறை குறித்து குழு அமைக்​கும் போது அந்​தக் குழுவை நேரில் சந்​தித்து புதுக்​கோட்டை தொகு​தியை மீண்​டும் உரு​வாக்க அனைத்து முயற்​சிகளும் மேற்​கொள்​ளப்​படும்” என்​றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x