Last Updated : 24 Apr, 2025 09:43 AM

9  

Published : 24 Apr 2025 09:43 AM
Last Updated : 24 Apr 2025 09:43 AM

சட்டமன்றத்திலேயே சங்கடப் பேச்சு...- மீண்டும் எதிர்க்கட்சிகளுக்கு அவல் கொடுத்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்!

விரக்தி பேச்சின் மூலம் மீண்டும் விவாத அரங்கிற்குள் வந்திருக்கிறார் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்.

சட்​டப் பேர​வை​யில் அதி​முக உறுப்​பினர் வைத்த கோரிக்​கைக்​கு, “யா​ரிடம் நிதி, திறன், அதி​காரம் உள்​ளதோ அந்த அமைச்​சரிடம் கேளுங்​கள்” என விரக்​தி​யுடன் பதிலளித்​தார் அமைச்​சர் பழனிவேல் தியாக​ராஜன். இதுபற்றி பேர​வைக்கு வெளியே கருத்​துச் சொன்ன பாஜக எம்​எல்​ஏ-​வான வானதி சீனி​வாசன், “தி​முக அரசு மீது அமைச்​சர்​களும் அதிருப்​தி​யில் இருக்​கி​றார்​கள். அதன் வெளிப்​பாடு தான் அமைச்​சர் பழனிவேல் தியாக​ராஜனின் பேச்​சு” என்​றார்.

இதற்கு பதில் சொல்​லும் வித​மாக பி.டி.​ராஜன் நூல் வெளி​யீட்டு விழா​வில் பழனிவேல் தியாக​ராஜனை​யும் மேடை​யில் வைத்​துக்​கொண்டு பேசிய முதல்​வர் ஸ்டா​லின், “நம்​முடைய எதிரி​கள் வெறும் வாயையே மெல்​லக் கூடிய வினோத ஆற்​றலைப் பெற்​றவர்​கள். அவர்​களின் அவதூறுகளுக்கு உங்​களின் சொல் அவலாக ஆகி​விடக் கூடாது என்​பதை கட்சி தலை​வ​ராக மட்​டுமல்​ல... உங்​கள் மீது அக்​கறை கொண்​ட​வ​னாக​வும் அறி​வுரை வழங்க கடமைப்​பட்​டுள்​ளேன்” என்​றார்.

மதுரை மத்​திய தொகு​தி​யில் 2-வது முறை​யாக வெற்றி பெற்ற பழனிவேல் தியாக​ராஜனுக்கு பொறுப்​புமிக்க நிதி​யமைச்​சர் பொறுப்பை வழங்​கி​னார் ஸ்டா​லின். ஆனால், இவருக்கு அமைச்​சர் பதவி வழங்​கப்​பட்​ட​தில் மதுரை​யின் சீனியர்​களான மாநகர் மாவட்​டச் செய​லா​ளர் கோ.தளப​திக்​கும், அமைச்​சர் பி.மூர்த்​திக்​கும் அத்​தனை மகிழ்ச்சி இல்​லை. இதனால் இரு தரப்​பும் கைகோத்​துக் கொண்டு தியாக​ராஜனுக்கு எதி​ராக ஒத்​துழை​யாமை இயக்​கம் நடத்​தி​யது. எதை​யும் பட்​டென பேசி​விடும் தியாக​ராஜன் இதை பொது மேடைகளில் வெளிப்​படை​யாக பேசி தனது ஆதங்​கத்தை வெளிப்​படுத்​தி​னார்.

இந்த நிலை​யில், திமுக தலை​மைக்கு எதி​ராக அவர் பேசிய ஆடியோ ஒன்று வெளி​யாகி தியாக​ராஜனுக்கு தர்​ம சங்​கடத்தை உண்​டாக்​கியது. அப்​போதும் இதே பாஜக தரப்​பில் இருந்​து​தான் தியாக​ராஜனுக்கு ஆதர​வான குரல்​கள் வந்து விழுந்​தன. அப்​போது, தியாக​ராஜனை பாஜக வளைத்​தா​லும் வளைத்​து​விடும் என்ற அளவுக்கு பேச்சு அடிபட்​டது. இருந்​த​போதும் தியாக​ராஜன் மீது கைவைத்​தால் அவப் பெயர் ஏற்​படலாம் என யூகித்த திமுக தலை​மை, அவரது இலாகா பொறுப்பை மட்​டும் மாற்​றியது. பவர்ஃபுல்​லான நிதித் துறைக்கு அமைச்​ச​ராக இருந்த தியாக​ராஜன் தகவல் தொழில்​நுட்​பத் துறைக்கு மாற்​றப்​பட்​டார். அதி​லும் தனக்கு முழு​மை​யான அதி​காரங்​கள் இல்லை என்​பதே தியாக​ராஜனுக்கு இருக்​கும் ஆதங்​கம். அதையே இப்​போது பேர​வை​யில் வெளிப்​படை​யாகப் பேசி இருக்​கி​றார். தியாக​ராஜன், ஒளிவு மறை​வின்றி பேசுவ​தாக எதிர்க்​கட்​சிகள் சொன்​னாலும், “இவர் ஏன் அடிக்​கடி இப்​படி எதை​யா​வது பேசி முதல்​வரை தர்​ம சங்​கடத்​தில் தள்​ளுகி​றார்?” என திமுக தரப்​பில் ஆதங்​கப்​படு​கி​றார்​கள்.

இதுகுறித்து நம்​மிடம் பேசிய தியாக​ராஜனின் ஆதர​வாளர்​களோ, “தி​யாக​ராஜனின் தந்​தை​யார் ஐயா பிடிஆரும் இப்​படித்​தான் மனதில் பட்​டதை யார் இருக்​கி​றார் யார் இல்லை என்​றெல்​லாம் பார்க்​காமல் பளிச்​சென சொல்​லி​விடு​வார். மதுரை​யில் மு.க.அழ​கிரிக்​கும் அவருக்​கும் பிரச்​சினை​கள் வந்​த​போதெல்​லாம் தலை​வர் கலைஞரிடமே பலமுறை அவர் குரலை உயர்த்​திப் பேசி நியா​யம் கேட்​டிருக்​கி​றார். அதே​போல் அமைச்​சர் தியாக​ராஜனுக்​கும் எப்​போதுமே பாசிச சாயல் இருக்​காது. அதேசம​யம், கட்​சி​யில் முடி​வெடுக்​கும் அதி​கார மையம் தனக்​கான முக்​கி​யத்​து​வத்தை குறைப்​ப​தாக அண்​மைக்​கால​மாக அவருக்​குள் ஒரு வருத்​தம் இருக்​கிறது. அவரது விரக்​தி​யான பேச்​சுகள் அதன் வெளிப்​பா​டாகக் கூட இருக்​கலாம்.

அவரைப் போல இன்​னும் சில அமைச்​சர்​களுக்​கும் தலைமை மீது வருத்​தங்​கள் இருக்​கிறது. ஆனால், அவர்​கள் எல்​லாம் பதவியை காப்​பாற்​றிக் கொள்​வதற்​காக உள்​ளொன்​றும் புறமொன்​று​மாக நடிக்​கி​றார்​கள். ஆனால், தியாக​ராஜனுக்கு அப்​படி நடிக்​கத் தெரிய​வில்​லை. திமுக எப்​போதுமே தொண்​டர்​களை தாங்​கிப் பிடிக்​கின்ற இயக்​கம். தொண்​டர்​களே கலைஞரை தூக்​கிப் பிடித்​தனர். ஆனால் இப்​போது, மாற்​றுக் கட்​சிகளில் இருந்து வந்​தவர்​களுக்​குத்​தான் கால​மாக இருக்​கிறது.

உதயநி​தி​யைப் பொறுத்​தவரை இளைஞர்​களுக்கு முக்​கி​யத்​து​வம் கொடுக்க வேண்​டும், கட்​சிக்​காக உழைப்​பவர்​களை மதிக்க வேண்​டும் என நினைக்​கி​றார். கட்​சிக்​காரர்​கள் பிரச்​சினை​களைச் சொன்​னாலும் காது​கொடுத்​துக் கேட்​கி​றார். அதி​காரம் முழு​மை​யாக அவர் கைக்கு வரும்​போது​தான் ‘கலைஞர் திமுக’-வை பார்க்க முடி​யும் போலிருக்​கிறது” என்று சொன்​ன​வர்​கள், “கட்​சி​யிலும் ஆட்சி நிர்​வாகத்​தி​லும் தனக்​கிருக்​கும் ஆதங்​கத்தை வெளிப்​படை​யாகச் சொல்​கி​றார் என்​ப​தற்​காக தியாக​ராஜன் வேறு கட்​சிக்​குப் போய்​விடு​வார் என சிலர் கதை கட்​டு​கி​றார்​கள். நீதிக்​கட்சி தலை​வர் வழி​வந்த வாரி​சான அவர் ஒரு​காலும் அப்​படி​யான முடிவை எடுக்க மாட்​டார்” என்​றார்​கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x