Last Updated : 19 Apr, 2025 05:22 PM

 

Published : 19 Apr 2025 05:22 PM
Last Updated : 19 Apr 2025 05:22 PM

கோவை: வக்பு சட்டத்தை எதிர்த்து வீடுகளின் முன்பு கருப்புக் கொடி ஏந்தி போராட்டம்

கோவை: கோவை தொண்டாமுத்தூரில் வக்பு சட்டத்தை எதிர்த்து வீடுகளின் முன்பு கருப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடந்தது.

மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்த வக்பு திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் எஸ்.டி.பி.ஐ கட்சியின் தொண்டாமுத்தூர் தொகுதியின் சார்பில், கோவை மாநகராட்சி 86-வது வார்டுக்குட்பட்ட உக்கடம் அன்புநகர் பகுதி முழுவதும், வீடுகளின் முன்பு கருப்புக் கொடி ஏற்றி போராட்டம் இன்று (ஏப்.19) நடத்தப்பட்டது.

அன்புநகரில் 10-க்கும் மேற்பட்ட வீதிகள் உள்ளன. 2,500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளின் முன்பும் இன்று கருப்புக் கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து அன்புநகர் நுழைவாயில் முன்பு, அன்புநகர் பகுதி மக்கள், எஸ்.டி.பி.ஐ கட்சியின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு நேற்று மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொண்டாமுத்தூர் வடக்கு தொகுதி தலைவர் முகமது காசிம் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச்செயலாளர் சாகுல்ஹமீத், மாவட்ட செயலாளர் உமர் பாரூக், மாவட்ட பொருளாளர் மன்சூர் அலி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இந்த போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, கையில் கருப்புக் கொடி ஏந்தி தங்களது கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x