Published : 19 Apr 2025 04:44 AM
Last Updated : 19 Apr 2025 04:44 AM

பழனிசாமி தலைமையில்தான் ஆட்சி அமையும்: நயினார் நாகேந்திரன் திட்டவட்டம்

செங்கல்பட்டு அருகே நடந்த நடந்த நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

செங்கல்பட்டு: பழனி​சாமி தலை​மை​யில்​தான் ஆட்சி அமை​யும் என தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் உறு​திபட தெரி​வித்​துள்​ளார்.

ஆங்​கில நாளிதழ் ஒன்​றுக்கு அவர் அளித்த நேர்​காணலில் மேலும் கூறி​யிருப்​ப​தாவது: தமிழக அரசி​யலில் அதி​முக​வும், பாஜக​வும் சேர்ந்து செயல்​பட்​டால் மட்​டுமே திமுக கூட்​ட​ணியை தோற்​கடிக்க முடி​யும் என்​ப​தற்​காக​தான் இந்த கூட்​டணி அமைக்​கப்​பட்​டுள்​ளது.

அதி​முக - பாஜக கூட்​ட​ணி​யால் யாருக்​கும் எந்த நெருக்​கடி​யும் இல்​லை. தமிழகத்​தில் பழனி​சாமி தலை​மை​யில்​தான் ஆட்சி அமை​யும் என அமித் ஷா தெளி​வாக கூறி​யிருந்​தார். கூட்​டணி அரசு அமைப்​போம் என அவர் எந்த இடத்​தி​லும் சொல்​ல​வில்​லை.

ஆனால், அமித் ஷா பேசிய சில கருத்​துகள் தவறாகப் புரிந்து கொள்​ளப்​பட்​டு, அதி​முக​வுக்​கும் பாஜக​வுக்​கும் இடையே முரண்​பாடு இருப்​ப​தாக தகவல்​கள் பரப்​பப்​பட்​டுள்​ளன. கூட்​டணி விவ​காரத்​தில் எங்​களுக்​குள் எந்த முரண்​பாடும் கிடை​யாது. தேர்​தலுக்கு இன்​னும் காலஅவ​காசம் இருப்​ப​தால், தொகு​திப் பங்​கீடு குறித்து பின்​னர் பேசி முடி​வெடுக்​கப்​படும். இவ்​வாறு அவர் கூறி​னார்.

இதனிடையே செங்​கல்​பட்டு அருகே பாஜக விழுப்​புரம் பெருங்​கோட்​டம் சார்​பில், நயி​னார் நாகேந்​திரன் மற்​றும் நிர்​வாகி​கள் சந்​திப்பு நிகழ்ச்சி நேற்று நடை​பெற்​றது. இதில், செங்​கல்​பட்​டு, காஞ்​சிபுரம், திரு​வள்​ளூர், விழுப்​புரம், கடலூர் உள்​ளிட்ட மாவட்​டங்​களைச் சேர்ந்த முக்​கிய நிர்​வாகி​கள் கலந்​து​கொண்​டனர். நிகழ்ச்​சி​யில் பங்​கேற்க வந்த நயி​னார் நாகேந்​திரனை பரனூர் அருகே வரவேற்பு அளித்து ஊர்​வல​மாக அழைத்து வந்​தனர்.

இந்​நிகழ்ச்​சி​யில் நயி​னார் நாகேந்​திரன் பேசி​ய​தாவது: பாஜக​வின் கொடி பறக்​கிறது என்​றால், அதில் ஒவ்​வொரு​வரின் உழைப்​பும் இருக்​கிறது. வரும் 2026-ம் ஆண்டு சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் பாஜக - அதி​முக கூட்​ட​ணி​யுடன் ஆட்சி அமை​யும். தமிழகத்​தில் தற்​போது நடை​பெறுகிற ஆட்​சி, ஆன்​மிகத்​துக்கு எதி​ரான ஆட்​சி. அதனை அகற்ற வேண்​டும்.

எனவே, திமுகவை வீழ்த்​து​வதே நமது ஒரே நோக்​க​மாக இருக்க வேண்​டும். தமிழகம் முழு​வதும் பூத் கமிட்​டியை பாஜக நிர்​வாகி​கள் சரி செய்​தால் மட்​டுமே சட்​டப்​பேரவை தேர்​தலில் நாம் வெற்றி பெற முடி​யும்.

தேசி​யத் தலை​வர் அமித் ஷா தலை​மை​யில் அதி​முக, பாஜக கூட்​டணி அமைய வேண்​டும் என நினைத்​தேன். அது தற்​போது நிறைவேறி​யுள்​ளது. கூட்​டணி குறித்து சமூக வலை​தளங்​களில் யாரும் பேசவேண்​டாம். அதுகுறித்து மேலிடத்​தில் உள்​ளவர்​கள்​ முடி​வெடுப்​பார்​கள்​. இவ்​வாறு அவர்​ பேசி​னார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x