Last Updated : 18 Apr, 2025 09:32 AM

3  

Published : 18 Apr 2025 09:32 AM
Last Updated : 18 Apr 2025 09:32 AM

இபிஎஸ்ஸுக்கு அடுத்த குறி..! - திடீர் வேகமெடுக்கும் கோடநாடு கொலை - கொள்ளை வழக்கு விசாரணைகள்!

தேர்தல் நெருங்குவதால் திமுக-வை ரெய்டு அஸ்திரங்கள் மூலம் இறுக்கிப் பிடிக்கத் தொடங்கி இருக்கிறது மத்திய பாஜக அரசு. அதேபோல், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக-வை நிலைகுலையச் செய்யும் வேலைகளையும் மாநிலத்தை ஆளும் திமுக அரசு சத்தமில்லாமல் முடுக்கி விட்டிருக்கிறது. அதன் ஒரு பகுதியாக, இத்தனை நாட்களாய் கிணற்றில் போட்ட கல்லாய் இருந்த கோடநாடு கொலை, கொள்ளை வழக்குகளின் விசாரணை வேகமெடுக்கத் தொடங்கி இருக்கிறது.

ஜெயலலி​தாவுக்​குச் சொந்​த​மான கோட​நாடு எஸ்​டேட்​டில் எடப்​பாடி பழனி​சாமி முதல்​வ​ராக இருந்த சமயத்​தில் 2017 ஏப்​ரலில் கொள்​ளைச் சம்​பவம் நடந்​தது. பங்​களா​வுக்குள் புகுந்து பொருட்​களைக் கொள்​ளை​யடித்​துச் சென்றவர்​கள், தடுக்க வந்த எஸ்​டேட் காவலாளி ஓம்​பகதூரை​யும் கொலை செய்​தனர். ஜெயலலி​தாவுக்​குச் சொந்​த​மான பங்​களா​வில் அதி​முக ஆட்​சி​யிலேயே நடந்த இந்​தக் கொலை, கொள்​ளைச் சம்​பவங்​கள் அப்​போது பெரும் பரபரப்பை ஏற்​படுத்​தி​யது.

இது நடந்த சிறிது நாட்​களில் வழக்​கில் தொடர்​புடைய, ஜெயலலி​தா​வின் முன்​னாள் கார் ஓட்​டுநர் கனக​ராஜ் சேலத்​தில் சாலை விபத்​தில் சிக்கி மர்​ம​மான முறை​யில் உயி​ரிழந்​தார். அதே​போல் கோட​நாடு எஸ்​டேட் கம்​பியூட்டர் ஆபரேட்​டர் தினேஷும் வீட்​டில் தற்​கொலை செய்து கொண்​டார். இத்​தனை மர்​மங்​கள் நிறைந்த இந்த வழக்கை முதலில் விசா​ரித்த உதகை போலீ​ஸார், கேரளாவைச் சேர்ந்த சயான், வாளை​யாறு மனோஜ் உள்​ளிட்ட 10 பேரை கைது செய்​தனர். இருந்த போதும் வழக்கு விசா​ரணையை சிபிசிஐடி வசம் ஒப்​படைக்க வேண்​டும் என திமுக உள்​ளிட்ட எதிர்​கட்​சிகள் அப்​போது வலி​யுறுத்​தின.

ஆனால், வழக்கை உதகை போலீ​ஸாரே விசா​ரித்​தனர். இந்த நிலை​யில், “தி​முக ஆட்​சிக்கு வந்​ததும் கோட​நாடு வழக்கை விரை​வாக விசா​ரித்து முடித்து இதில் தொடர்​புடைய​வர்​களுக்கு தண்​டனை பெற்​றுத் தரப்​படும்” என தேர்​தல் பிரச்​சா​ரத்​தில் வாக்​குறு​தி​யளித்​தார் திமுக தலை​வர் ஸ்டா​லின்.

அதே​போல் திமுக ஆட்​சிக்கு வந்​தவுடன், மேற்கு மண்டல ஐஜி தலை​மை​யில் கோட​நாடு வழக்கு விசா​ரணை நடத்​தப்​பட்​டது. பின்​னர், வழக்கு கோவை சிபிசிஐடி-க்கு மாற்​றப்​பட்​டது. கோட​நாடு கொலை, கொள்ளை வழக்​கு, ஓட்​டுநர் கனக​ராஜ் விபத்​தில் பலி​யான வழக்​கு, கம்ப்யூட்​டர் ஆபரேட்​டர் தினேஷ்கு​மார் தற்​கொலை வழக்கு ஆகிய மூன்​றை​யும் இப்​போது சிபிசிஐடி போலீ​ஸார் விசா​ரித்து வரு​கின்​ற​னர். அண்​மைக்​கால​மாக வழக்​கின் விசா​ரணை வேகமெடுத்​துள்ள நிலை​யில், அண்​மை​யில் ஜெயலலி​தா​வின் முன்​னாள் வளர்ப்பு மகன் வி.என்​.சு​தாகரன் விசா​ரணைக்கு ஆஜரா​னார்.

இது தொடர்​பாக சிபிசிஐடி போலீ​ஸார் வட்​டாரத்​தில் விசா​ரித்த போது, “ஓட்​டுநர் கனக​ராஜூக்​கு, அதி​முக ஆட்​சி​யில் முதல்​வரின் பாது​காப்​புப் பிரி​விலிருந்த காவல்​துறை அதி​காரி ஒரு​வரிட​மிருந்து குறுந்​தகவல் வந்​த​தாக ஒரு தகவல் கிடைத்​தது. ஆனால், அந்த அதி​காரி​யின் செல்​போன் மாய​மாகி​விட்​டது. அதி​முக ஆட்​சி​யில் முதல்​வரின் பாது​காப்​புப் பிரிவு அதி​காரி​களுக்​கு, காவல்​துறை நிர்​வாகப் பிரி​வால் 18 செல்​போன்​கள் வழங்​கப்​பட்​டன. அதில், 12 மட்​டுமே திரும்ப ஒப்​படைக்​கப்​பட்​டுள்​ளன. குறுந்​தகவல் பகிரப்​பட்​ட​தாக கூறப்​படும் அந்த செல்​போன் உட்பட 6 போன்​கள் திரும்ப ஒப்​படைக்​கப்​பட​வில்​லை. அந்த செல்​போனின் ஐஎம்இ எண்ணை வைத்து செல்​போனை கண்​டறிவதற்​கான வேலை​களை துரிதப்​படுத்தி இருக்​கி​றோம்.

தமிழ்​நாடு, ஆந்​தி​ரா, கேரளா, கர்​நாடகா ஆகிய 4 மாநிலங்​களுக்​கும் பொது​வாக, செல்​போன் தரவு​களை சேகரித்து வைக்​கும் மையப் பகு​தி​யாக திருச்​சி​யில் உள்ள பிஎஸ்​என்​எல் அலு​வல​கம் உள்​ளது. அங்கு 16 டேப்​கள் ரீ-ரைட் எனப்​படும் மறு​ப​திவு ஆகாமல் உள்​ளது. இவ்​வழக்கு தொடர்​பாக, சம்​பவம் நடந்த 2017 ஏப்​ரல் 1-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை, நாங்​கள் சந்​தேகிக்​கும் 19 செல்​போன் டவர்​களுக்கு உட்​பட்ட, 60 நபர்​களின் உரை​யாடல்​களை மேற்​கண்ட டேப்​பில் இருந்து மீட்க வேண்​டி​யுள்​ளது. ஆனால், அந்த டேப் உள்ள கருவி பழுதடைந்​துள்​ளது. அதை சரிசெய்ய ரூ.2.94 கோடி செல​வாகும் என குஜ​ராத் நிபுணர் குழு​வினர் தெரி​வித்​துள்​ளனர். இந்​தத் தொகையை தந்து கரு​வியை சரிசெய்ய அரசிடம் நிர்​வாக அனு​மதி கோரி​யுள்​ளோம்.

அதி​முக ஆட்​சி​யில் முதல்​வரின் பாது​காவலர்​களாக இருந்த பெரு​மாள்​சாமி, வீரப்​பெரு​மாள், ராஜா, ஜெயலலி​தா​வின் முன்​னாள் வளர்ப்பு மகன் சுதாகரன், எஸ்​டேட் மேலா​ளர் நடராஜன் உள்​ளிட்​டோரிடம் இந்த வழக்கு தொடர்​பாக அண்​மை​யில் அடுத்​தடுத்து விசா​ரிக்​கப்​பட்​டது. சசிகலா​விட​மும் முன்பே விசாரிக்கப்பட்டுள்ளது. அடுத்​த​தாக சசிகலா​வின் அண்ணி இளவரசி, அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி ஆகி​யோ​ருக்​கும் சம்​மன் அனுப்பி விசா​ரிக்​கத் திட்​ட​மிட்​டுள்​ளோம்” என்​ற​னர்.

கோட​நாடு வழக்கு விசா​ரணை​கள் வேகமெடுப்​பது குறித்து அதி​முக செய்​தித்​தொடர்​பாளர் பேராசிரியர் கல்​யாணசுந்​தரத்​திடம் கேட்​டதற்​கு, “சட்​டம் - ஒழுங்கு பரா​மரிப்​பில் தோல்​வி, சீரான நிர்​வாகத்​தில் தோல்வி என அனைத்​தி​லும் தோற்​றுப்​போன முதல்​வர் ஸ்டா​லின் தலை​மையி​லான திமுக அரசு, இயலாமையை மறைக்க, மக்​களிடம் அரசுக்கு எதி​ராக ஏற்​பட்​டுள்ள அதிருப்​தியை மடை​மாற்​றம் செய்ய, கோட​நாடு வழக்கு விசா​ரணையை கையில் எடுத்​துள்​ளது.

சட்​டப் பிரச்​சினையை அரசி​யல் ஆக்க முயற்​சிக்​கின்​ற​னர். இது அரு​வ​ருப்​பான, அறமற்ற வேலை. அதி​முக ஆட்​சிக்கு எதி​ரான எந்த விமர்​சனத்​தை​யும் வைக்க முடி​யாத சூழலில், இது​போன்ற செய்​தி​களை பரப்பி விடு​வதன் மூலம் அரசி​யல் லாபம் பார்க்க திமுக-​வினர் முயற்​சிக்​கின்​ற​னர். அவர்​களின் இப்​படி​யான தேர்​தல் அரசி​யல் நாடகங்​களை மக்​கள் நம்​ப​மாட்​டார்​கள். எங்​களைப் பொறுத்​தவரை கோட​நாடு வழக்கு விசா​ரணையை சந்​திக்க தயா​ராகவே இருக்​கிறோம்” என்​றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x