Last Updated : 12 Apr, 2025 09:32 AM

4  

Published : 12 Apr 2025 09:32 AM
Last Updated : 12 Apr 2025 09:32 AM

பொறுப்பின்றி பேசி பொறுப்பை இழந்த பொன்முடி! - அமைச்சர் பதவி தப்புமா?

“பொது இடங்களில் கழகத்தினர் கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும். இதை கழக நன்மைக்காக மட்டும் சொல்லவில்லை. உங்களுடைய நன்மைக்காகவும் தான் சொல்கிறேன்” என்று முதல்வர் ஸ்டாலின் எத்தனை முறை மன்றாடிக் கேட்டாலும் திமுக-வினர் திருந்துவதாக இல்லை.

இதோ, மூத்த அமைச்சர் பொன்முடி தந்தை பெரியார் திராவிடர் கழக மேடையில் இந்து மத நம்பிக்கை மற்றும் பெண்கள் குறித்து அருவருக்கத் தக்க வகையில் பேசி மீண்டும் ஸ்டாலினின் தூக்கத்தைக் கெடுத்திருக்கிறார். பொன்​முடி​யின் பேச்சு சமூக வலை​தளங்​களில் வைரலானதுமே முதல் ஆளாக பொன்​முடிக்கு தனது எதிர்ப்பை பதிவு செய்து கண்​டித்​தார் திமுக எம்​பி-​யான கனி​மொழி.

இதையடுத்​து, பொன்​முடியை திமுக துணைப் பொதுச்​செய​லா​ளர் பதவியி​லிருந்து நீக்​கி​னார் ஸ்டா​லின். “இதெல்​லாம் போதாது, அவரை அமைச்​சர் பதவியி​லிருந்தே நீக்க வேண்​டும்” என இந்து அமைப்​பு​கள் போர்க்​கொடி தூக்​கி​யுள்​ளன. பாஜக ஐடி விங், இதை இந்தி மற்​றும் ஆங்​கிலத்​தில் மொழி​யாக்​கம் செய்து இந்​தியா முழுக்க பரப்​பும் வேலை​யில் இறங்கி இருப்​ப​தால் பொன்​முடிக்கு எதி​ராக வழக்​கு​களும் பாய​லாம் என்​கி​றார்​கள்.

முதல்​வரிட​மும் துணை முதல்​வரிடம் நினைத்த நேரத்​தில் அலைபேசி​யில் பேசுமளவுக்கு செல்​வாக்கு பெற்​றவர் அமைச்​சர் பொன்​முடி. அடிக்​கடி சர்ச்​சைகளில் சிக்​கி​னாலும் மனதில் பட்​டதை பின் விளைவு​களைப் பற்றி யோசிக்​காமல் பட்​டெனப் பேசி​விடக் கூடிய​வர். தன்​னோடு பயணிக்​கும் கட்​சிக்​காரர் மீது ஏதாவது புகார் வந்​தால் காரில் போகும்​போதே அதுபற்றி அவரிடம் விசா​ரித்​து, அவர் சொல்​லும் பதி​லில் திருப்தி இல்லை என்​றால் நடு வழி​யிலேயே காரிலிருந்து இறக்​கி​விட்​டுச் செல்​ல​வும் தயங்​காதவர்.

இந்த நிலை​யில், திமுக பொதுக்​குழு கூட்​டத்​தில், “கட்​சி​யினர் பொது இடங்​களில் கண்​ணி​யத்​துடன் நடந்து கொள்ள வேண்​டும்” என ஸ்டா​லின் பேசிக்​கொண்​டிருந்த போது அதே மேடை​யில் இருந்த பொன்​முடி சிரித்​துக் கொண்​டிருந்த காட்சி வைரலானது. அதே​போல் கடந்த ஆண்​டின் தொடக்​கத்​தில் பேர​வை​யில் இருந்து ஆளுநர் வெளிநடப்பு செய்​த​போது, அவரை கைகாட்டி பேசி சிரித்​ததும் வைரலானது. அதன் பிறகு தான் பொன்​முடி வழக்​குச் சிக்​கலுக்கு ஆளா​னார். அவரிட​மிருந்த உயர் கல்​வித் துறை​யும் கைவிட்​டுப் போனது.

பொது​வாக அரசு விழாக்​களில் கலகலப்​பாக பேசியே பழகிய பொன்​முடி, கிராம மக்​கள் மத்​தி​யில், ‘மகளிர் விடியல் பயணத்தை ‘ஓசி பஸ்’ எனப் பேசி சர்ச்​சை​யில் சிக்​கி​னார். பின்​னர் அவரே அதற்கு தன்​னிலை விளக்​கம் கொடுக்​கவேண்​டிய சூழல் ஏற்​பட்​டது. இதே​போல் முன்பு விழுப்​புரம் தொகு​தி​யில் போட்​டி​யிட்​ட​போது வாக்​குக் கேட்​கச் சென்ற இடத்​தில் பெண்​களிடம்.

“என்​னைப் பார்க்​கத்​தானே வந்​தீங்​க?” என்று கேட்டு வைத்​தார். கிரா​மசபை கூட்​டத்​தில் பெண் ஒரு​வரை “நீ எஸ்சி தானே?” எனக் கேட்டு சங்​கடத்​தில் சிக்​கி​னார். தனது திருக்​கோ​விலூர் தொகு​திக்​குள் குறை​களைச் சொன்ன பெண்​களிடம், “நீ எனக்கா ஓட்​டுப் போட்​டே” என்று அவர் கேட்​டதும் வம்​பானது.

பொன்​முடி வீட்​டுக்​குப் போகும் யாரும் அவர் எதிரே நாற்​காலி​யில் அமரக் கூட யோசிப்​பார்​கள் என்​பார்​கள். இதையெல்​லாம் பட்​டியல் போடும் விழுப்​புரம் திமுக காரர்​கள், “அவ​ருக்கு வாய்ல வாஸ்து சரி​யில்​லீங்க” என்று அவர் பாணி​யிலேயே இப்​போது கிண்​டலடிக்​கி​றார்​கள். தந்தை பெரி​யார் திரா​விடர் கழகம் ஏற்​பாடு செய்த திரு​வாரூர் தங்​க​ராசு​வின் நூற்​றாண்டு விழா திமுக இளைஞரணி​யின் தலைமை அலு​வல​க​மான அன்​பகத்​தில் கடந்த 6-ம் தேதி நடை​பெற்​றது.

இதில் பொன்​முடி பேசிய அரு​வ​ருக்​கத்​தக்க அந்த பேச்​சானது இப்​போது அவரது கட்​சிப் பதவிக்கே உலை வைத்​திருக்​கிறது. இதன் மூலம் முதல் முறை​யாக கட்​சித் தலை​மை​யின் நடவடிக்​கைக்கு உள்​ளாகி சறுக்​கலைச் சந்​தித்​திருக்​கி​றார் பொன்​முடி. தலைமை இந்த நடவடிக்​கையை எடுக்​கும் முன்​ன​தாக கட்​சி​யின் இன்​னொரு துணைப் பொதுச்​செய​லா​ள​ரான கனி​மொழி துணிச்​சலாக பொன்​முடி​யின் செயலைக் கண்​டித்​ததன் மூலம் தனது இமேஜை உயர்த்​திக் கொண்​டிருக்​கி​றார்.

ஒருசம​யம், தனது அமைச்​சர்​கள் மத்​தி​யில் பேசிய ஜெயலலி​தா, “பொன்​முடியைப் போல உங்​களில் யாராவது சட்​டமன்​றத்​தில் பேசுகிறீர்​களா?” என சிலாகித்​துக் கேட்​ட​தாகச் சொல்​வார்​கள். அப்​படிப்​பட்ட பொன்​முடி, இப்​போது பொறுப்​பின்றி பேசக்​கூ​டாததைப் பேசி பொறுப்பை இழந்​திருக்​கிறார்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x