Published : 12 Apr 2025 06:58 AM
Last Updated : 12 Apr 2025 06:58 AM

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும்: மத்திய அமைச்சர் அமித்ஷா நம்பிக்கை

சென்னை: தமிழகத்​தில் அதி​முக​வுடன் பாஜக கூட்​டணி உறு​தி​யாகி உள்​ளது. “வரும் 2026 சட்​டப் பேர​வைத் தேர்​தலை அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி தலை​மை​யில் சந்​திக்க உள்​ளோம்” என மத்​திய அமைச்​சர் அமித்ஷா தெரி​வித்​துள்​ளார்.

தமிழகத்​தில் வரும் 2026 சட்​டப்​பேரவை தேர்​தலில் அதி​முக​வுடன் கூட்​டணியை உறுதி செய்​வதற்​காக வந்த மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித்​ஷா, அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி மற்​றும் அக்​கட்சி நிர்​வாகி​களு​டன் பத்​திரி​கை​யாளர்​களை சந்​தித்​தார்.

அப்​போது அவர் கூறிய​தாவது: பாஜக தலை​வர்​களும், அதி​முக தலை​வர்​களும் இணைந்து கூட்​ட​ணியை உரு​வாக்கி இருக்​கிறோம். வரும் 2026 சட்​டப் பேர​வைத் தேர்​தலை தேசிய ஜனநாயக கூட்​டணி (என்​டிஏ) கட்​சிகளு​டன் இணைந்து சந்​திக்க இருக்​கிறோம். வரும் தேர்​தலின் போது தேசிய அளவில் பிரதமர் மோடி தலை​மை​யிலும், தமிழகத்​தில் அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி தலை​மை​யிலும் போட்​டி​யிட இருக்​கிறோம்.

வரப்போகும் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் பாஜக-அ​தி​முக​வின் தேசிய ஜனநாயக கூட்​டணி பெரும்​பான்​மை​யான வாக்​கு​களை பெற்று ஆட்​சி​யமைக்​கும் என்​ப​தில் எனக்கு முழு நம்​பிக்கை இருக்​கிறது. பாஜக​வும், அதி​முக​வும் இணைந்து தான் தமிழகத்​தில் கூட்​டணி ஆட்​சி​யமைக்​கப் போகிறோம்.

அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி தலை​மை​யில் தான் கூட்​டணி இருக்​கும். அமைச்​சரவை குறித்து வெற்றி பெற்ற பிறகு முடிவு செய்​யப்​படும். எங்​களு​டன் கூட்​ட​ணி​யில் இணைந்​ததற்கு அதி​முக எந்​த​வித கோரிக்​கை​யும், நிபந்​தனை​யும் விதிக்​க​வில்​லை. அதி​முக​வின் உட்​கட்சி விவ​காரத்​தில் பாஜக​வின் தலை​யீடு ஒரு​போதும் இருக்​காது. கூட்​ட​ணி​யில் இணைவதன் மூலம் இருதரப்​புக்​குமே பலனிருக்​கிறது. யார் யாருக்கு எத்​தனை தொகு​தி​கள் என்​பதும், வெற்றி பெற்ற பிறகு ஆட்​சி​யில் எத்​தகைய பங்கு என்​பதும் பின்​னர் தான் பேசப்​படும்.

சனாதனம், மும்​மொழிக் கொள்​கை, நாடாளு​மன்ற தொகுதி மறு​வரையறை போன்ற பல்​வேறு பிரச்​சினை​களை திமுக தொடர்ந்து எழுப்பி வரு​கிறது. ஆட்​சி​யில் இருக்​கும் ஊழல், மோசடி போன்ற முக்​கிய பிரச்​சினை​களை திசை திருப்​புவதற்​காக இவ்​வாறு பிரச்​சினை​களை எழுப்​பு​கின்​றனர். ஊழல், சட்டம் ஒழுங்கு ஆபத்​து, பட்​டியலினத்​தவர்​கள் மீதான தாக்​குதல், பெண்​கள் பாது​காப்பு உள்​ளிட்​ட​வையே தேர்​தலில் பேசுபொருளாக இருக்​கும். தேர்​தலில் திமுக மக்​களுக்கு பதில் சொல்ல கடமைப்​பட்​டிருக்​கிறது.

தமிழகத்​தில் டாஸ்​மாக்​கில் ரூ.39,775 கோடி அளவுக்கு மோசடி நடை​பெற்​றுள்ளது. ரூ.5,800 கோடி அளவுக்கு மணல் கொள்​ளை, ரூ.4,400 கோடி மின்​துறை​யில் ஊழல், எல்​காட் துறை​யில் பங்கு விற்​பனை மோசடி ரூ.3 ஆயிரம் கோடிக்கு மேல், போக்​கு​வரத்​துத் துறை​யில் ரூ.2 ஆயிரம் கோடி, சட்​ட​விரோத பணப்​பரிவர்த்​தனை​யில் ரூபாய் ஆயிரம் கோடி, ஊட்​டச்​சத்து பெட்​டகம் வழங்​கிய​தில் ரூ.450 கோடி, அரசு வேலைக்கு பணம் வாங்​கு​வது, செம்​மண் கடத்​தல், கிராமப்​புற வேலைவாய்ப்பு திட்​டத்​தில் நடை​பெற்ற ஊழலுக்கு தமிழக முதல்​வர் ஸ்டா​லினும், துணை முதல்​வர் உதயநி​தி​யும் பதில் சொல்​லியே ஆக வேண்​டும். மக்​கள் கவனத்தை திசை திருப்​புவதற்​காகவே நீட் விவ​காரத்தை திமுக பயன்​படுத்​துகிறது. நீட் உள்​ளிட்ட பல்​வேறு விஷ​யங்​கள் தொடர்​பாக அதி​முக​வுடன் பேச்​சு​வார்த்தை நடத்​தி, பொது​வான கருத்து ஏற்​பட்ட பிறகே தேர்​தலை சந்திப்போம். தமிழக மக்​களை சந்​திக்​கும் போது அவர்​கள் பிரச்​சினையை முன்​னெடுத்​துச் செல்​வோம். திமுக போல் மடை​மாற்​றம் செய்ய மாட்​டோம். இவ்​வாறு அமித்ஷா கூறி​னார்.

பின்​னர், செய்​தி​யாளர்​களின் கேள்வி​களுக்கு அமித்ஷா அளித்த பதில்:

கேள்​வி: அரசி​யல் ரீதி​யாக தமிழகத்தை பிரச்​சினைக்​குரிய மாநில​மாக பாஜக கருதுகிற​தா?

பதில்: தமிழகத்தை பிரச்​சினைக்​குரிய​தாக நாங்​கள் கரு​தி​ய​தில்​லை. தமிழ் மொழி, தமிழர்​கள் மற்​றும் தமிழகத்தை பாஜக கவுர​வமாக கருதுகிறது. நாடாளு​மன்​றத்​தின் புதிய கட்​டிடத்​தில் தமிழகத்​தின் பாரம்​பரிய​மான செங்​கோலை பிரதமர் மோடி நிறு​வி​னார். மோடி காசி தமிழ் சங்​கமத்​தை​யும், குஜ​ராத் சவு​ராஷ்டிரா தமிழ் சங்​கமத்​தை​யும் நிறு​வி​னார். கேலோ இந்​தியா போட்​டி​யில் தமிழக பாரம்​பரிய விளை​யாட்​டான சிலம்​பத்தை மோடி சேர்த்​தார்.

செம்​மொழி தமிழா​ராய்ச்சி நிறு​வனத்தை நிறு​விய​வரும் பிரதமர் மோடி தான். ஹூஸ்​டன் பல்​கலைக்​கழகத்​தில் தமிழ் இருக்கை அமைக்​கப்​பட்​டுள்​ளதோடு, திருக்​குறள் 63 மொழிகளில் மொழி பெயர்க்​கப்​பட்​டுள்​ளது. பார​தி​யாரின் படைப்​பு​களை அத்​தனை மொழிகளி​லும் வௌி​யிட்​டிருக்​கிறார். ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்​வு​களை தமிழில் எழுத வைத்​தார். மத்​திய ரிசர்வ் பாது​காப்பு படை தேர்​வு​களை இப்​போது தமிழில் எழுத முடிகிறது. தேசிய ஜனநாயக கூட்​டணி ஆளும் மாநிலங்​களில் மருத்​து​வம், பொறி​யியல் படிப்​பு​களுக்​கான பாடங்​கள் மாநில மொழிகளில் மொழி பெயர்க்​கப்​பட்டு விட்​டது. தமிழகத்​தில் மருத்​து​வம், பொறி​யியல் பாடத் திட்​டத்தை மொழிபெயர்த்து தரு​மாறு 3 ஆண்​டு​களாக கோரிக்கை விடுக்​கிறேன். அதனை முதல்​வர் ஸ்டா​லின் செய்ய மறுக்​கிறார். தமிழ் மொழிக்​காக திமுக என்ன செய்​தது? இதனை தமிழக மக்​களுக்கு திமுக தெரிவிக்க வேண்​டும்.

கேள்​வி: பாஜக​வின் மாநில தலை​வர் மாற்​றப்​பட்ட பிறகு​தான் அதி​முக தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யில் இணைந்​திருக்​கிற​தா?

பதில்: இது கொஞ்​சம் கூட உண்மை இல்​லை. இன்​றைக்​கும் அண்​ணா​மலை தான் மாநில தலை​வர். அதனால்​தான் அவர் எனது அரு​கில் அமர்ந்​திருக்​கிறார்.

கேள்​வி: வர உள்ள தமிழக சட்​டப்​பேரவை தேர்​தலில் அண்​ணா​மலை முக்​கிய பங்கு வகிப்​பா​ரா? கட்​சி​யின் தேசிய அளவில் முக்கிய பொறுப்​பு​கள் வழங்​கப்​படு​மா?

பதில்: சில​வற்றை எங்​களிடம் ஒப்​படைத்து விடுங்​கள். நீங்​கள் எதைப் பற்​றி​யும் கவலைப்பட வேண்​டாம். நாங்​கள் கட்​சியை நன்​றாக வழி நடத்​திக் கொள்​கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த சந்​திப்​பின் போது, மத்​திய அமைச்​சர் எல்​.​முரு​கன், நயி​னார் நாகேந்​திரன், அண்​ணா​மலை, அதி​முக நிர்​வாகி​கள்​ முனு​சாமி, வேலுமணி உள்​ளிட்​ட கட்​சி நிர்​வாகிகள்​ பலர்​ உடனிருந்​தனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x