Published : 08 Apr 2025 04:36 AM
Last Updated : 08 Apr 2025 04:36 AM

மாநகராட்சி இறைச்சி கூடங்கள் 10-ம் தேதி இயங்காது

சென்னை: சென்னை மாநகராட்சி, பொது சுகாதாரத் துறையின் (கால்நடை மருத்துவப் பிரிவு) கட்டுப்பாட்டில் பெரம்பூர், வில்லிவாக்கம், கள்ளிக்குப்பம் மற்றும் சைதாப்பேட்டை ஆகிய 4 இறைச்சிக் கூடங்கள் இயங்குகின்றன.

மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு, அரசு உத்தரவின்படி, இந்த 4 இறைச்சிக் கூடங்களும் ஏப்.10-ம் தேதி மூடப்படுகின்றன. ஆகவே, இறைச்சிக் கூட வியாபாரிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x