Published : 08 Apr 2025 02:20 AM
Last Updated : 08 Apr 2025 02:20 AM

பேட்ஜை கழற்றிவிட்டு பேசிய அதி​முக உறுப்​பினர்​கள்

சென்னை: சட்​டப்​பேர​வை​யில் பேர​வைத் தலை​வர் அப்​பாவு அனு​மதி அளிக்​காத​தால், தாங்​கள் அணிந்​திருந்த பேட்ஜை கழற்​றி​விட்டு அதி​முக உறுப்​பினர்​கள் செங்​கோட்​டையன், உடுமலை ராதாகிருஷ்ணன் பேசினர். சட்​டப்​பேர​வை​யில் நேற்று பதாகைகளை காட்​டிய அதி​முக உறுப்​பினர்​கள் 13 பேர் வெளி​யேற்​றப்​பட்​டனர். அவர்​களுக்கு ஆதரவு தெரி​வித்து மற்ற அதி​முக உறுப்​பினர்​களும் பேர​வை​யில் இருந்து வெளிநடப்பு செய்​தனர்.

சிறிது நேரம் கழித்​து, கவன ஈர்ப்பு தீர்​மானத்​தில் பேசுவதற்​காக அதி​முக உறுப்​பினர் கே.ஏ.செங்​கோட்​டையன் பேர​வைக்​குள் வந்​தார். அப்​போது, அவர் அணிந்​திருந்த வாசகங்​கள் அடங்​கிய கருப்பு பேட்ஜை கழற்றி வைத்​து ​விட்டு பேசு​மாறு பேரவை தலை​வர் மு.அப்​பாவு தெரி​வித்​தார்.

நாளை கழற்​று​வ​தாக செங்​கோட்​டையன் சொன்​னதை ஏற்க மறுத்த பேரவை தலை​வர் அப்​பாவு, பேட்ஜை கழற்​றி​னால்​தான் பேசுவதற்கு அனு​மதி என்று தெரி​வித்​தார்.

இதையடுத்​து, தான் அணிந்​திருந்த பேட்ஜை கழற்​றி​விட்டு செங்​கோட்​டையன் கவன ஈர்ப்பு தீர்​மானத்​தில் பேசி​னார். இதேபோல் அதி​முக உறுப்​பினர் உடுமலை கே.​ரா​தாகிருஷ்ணனும் பேசினார். பின்​னர், அதி​முக உறுப்​பினர்​கள் பேட்ஜை அணிந்தபடி பேர​வைக்​குள் வந்​தனர். இதற்கு அப்பாவு அனுமதி மறுத்ததால் அவர்கள் மீண்டும் வெளிநடப்பு செய்​தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x