Published : 15 Mar 2025 03:20 PM
Last Updated : 15 Mar 2025 03:20 PM
சென்னை: 2025-26-ம் நிதி ஆண்டுக்கான தமிழக வேளாண் பட்ஜெட்டை, சட்டப்பேரவையில் உழவர் நலன் மற்றும் வேளாண்மை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று (மார்ச் 15) காலை தாக்கல் செய்தார். தமிழக பட்ஜெட் உரையில் இடம்பெற்றுள்ள புதிய திட்டங்கள் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இங்கே...
> ரூ.42 கோடி செலவில் நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் வேளாண் ஆலோசனைகள் வழங்கிட வேளாண் பட்டதாரிகள் மற்றும் பட்டயதாரர்கள் மூலம் 1000 முதலமைச்சரின் உழவர் நல சேவை மையங்கள்
> நெல் உற்பத்தியினை அதிகரித்திட ரூ.160 கோடி ஒதுக்கீடு
> இயற்கை சீற்றங்களால் பயிர் பாதிப்பிலிருந்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க ரூ.841 கோடி ஒதுக்கீட்டில் பயிர் காப்பீட்டுத் திட்டம்.
> 2024-25 அரவை பருவத்தில் 1 லட்சத்து 30 ஆயிரம் கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.349 சிறப்பு ஊக்கத்தொகை வழங்க ரூ.297 கோடி ஒதுக்கீடு.
> 3 லட்சம் ஏக்கர் மானாவாரி நிலங்களில் கோடை உழவு செய்திட உழவு மானியமாக ரூ.24 கோடி
> நுண்ணீர் பாசனத்திட்டம் - 3 லட்சம் ஏக்கர் பரப்புக்கு ரூ.1,168 கோடி ஒதுக்கீடு
> தமிழகத்தில் முதல் முறையாக முந்திரி வாரியம் உருவாக்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு
> முதன் முறையாக 20 உழவர் சந்தைகளில் பசுமைக் காய்கறிகளை நுகர்வோர் தங்கள் இல்லங்களில் நேரடியாக பெற்றுக்கொள்ள உள்ளூர் இணைய வர்த்தகத் தளத்துடன் (Online Door Delivery) இணைக்கப்படும்.
> வேளாண் விளைபொருட்களுக்கான நல்லூர் வரகு (கடலூர்), வேதாரண்யம் முல்லை (நாகப்பட்டினம்), நத்தம் புளி (திண்டுக்கல்), ஆயக்குடி கொய்யா (திண்டுக்கல்), கப்பல்பட்டி கரும்பு முருங்கை (திண்டுக்கல்) ஆகியவற்றுக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும்.
> 17,000 விவசாயிகள் பயனடையும் வகையில் வேளாண் இயந்திரமாக்குதல் திட்டத்துக்காக ரூ.215 கோடியே 80 லட்சம் ஒதுக்கீடு
> 63 ஆயிரம் மலைவாழ் ஆதிதிராவிட பழங்குடியினருக்கு மலை வாழ் உழவர் முன்னேற்றத் திட்டம் செயல்படுத்திட ரூ.22 கோடியே 80 லட்சம் ஒதுக்கீடு
> முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து, மன்னுயிர் காப்போம் திட்டம் 15 திட்டக் கூறுகளுடன் செயல்படுத்திட ரூ.142 கோடி ஒதுக்கீடு
> 2,338 கிராம ஊராட்சிகளில் தன்னிறைவு பெற்று உழவர் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்திடும் உன்னத முயற்சியில் ரூ.269 கோடியே 50 லட்சம் ஒதுக்கீட்டில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும்.
> வேளாண் விளைபொருட்களுக்கு 100 மதிப்புக் கூட்டும் அலகுகள் அமைத்திட முதற்கட்டமாக ரூ.50 கோடி ஒதுக்கீடு. இதற்கு அதிகபட்சமாக அலகு ஒன்றுக்கு 1 கோடியே 50 லட்சம் ரூபாய் மானியமாக வழங்கப்படும்.
> ரூ.50 கோடியே 79 லட்சம் மதிப்பீட்டில் 11 இடங்களில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தப்படும்.
> மக்காச்சோளம் விவசாயிகள் அதிக வருமானம் பெற 1,87,000 ஏக்கர் பரப்பளவில் ரூ.40 கோடி ஒதுக்கீட்டில் மக்காக்சோளம் உற்பத்தி மேம்பாட்டுத் திட்டம் செயலாக்கம்
> நிலக்கடலை, எள், சூரியகாந்தி போன்ற எண்ணெய் வித்துக்கள் பயிரிடும் 90 ஆயிரம் விவசாயிகள் ரூ.108 கோடியே 6 லட்சத்தில் பயனடையும் வகையில் எண்ணெய் வித்துக்கள் இயக்கம்.
> தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் ரூ.52 கோடியே 44 லட்சத்தில் செயல்படுத்தப்படும்.
> உயிர்ம வேளாண்மையினை (Organic Farming) பரவலாக்கம் செய்திட ரூ.12 கோடி ஒதுக்கீடு.
> ஆதிதிராவிடர், பழங்குடியின சிறு, குறு உழவர்களுக்கு கூடுதல் மானியம் வழங்க ரூ.21 கோடி ஒதுக்கீடு
> குறைந்த நீர்த்தேவை உள்ள பயிர்களை ஊக்குவித்திட ரூ.12 கோடியே 50 லட்சம் ஒதுக்கீட்டில் மாற்றுப்பயிர் சாகுபடித் திட்டம்
> தளர்வில்லா விளைச்சல் பெற தரமான விதை உற்பத்திக்கு ரூ.250 கோடி ஒதுக்கீடு
> ரூ.12 கோடியே 21 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் பருத்தி உற்பத்தி பெருக்கத் திட்டம்
> “தமிழ்நாடு வேளாண் காடுகள் கொள்கை” - உயர் மதிப்பு மரங்களை வளர்ப்பதற்கும், அதனை பதிவு செய்து வெட்டுதல் மற்றும் விற்பனைக்கு எடுத்து செல்லுதல் போன்ற அனைத்து நடைமுறைகளையும் எளிதாக்கி பசுமை தமிழகத்தை உருவாக்குதல்.
> ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் ரூ.125 கோடியில்.
> ஒருங்கிணைந்த தென்னை வளர்ச்சித் திட்டம் ரூ.35 கோடியே 26 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.
> 130 வேளாண் இயந்திர வாடகை மையங்கள் அமைக்க ரூ.10 கோடியே 50 லட்சம் ஒதுக்கீடு
> காவிரி, வெண்ணாறு, வெள்ளாறு வடிநிலப் பகுதிகளிலும், கல்லணை பகுதிகளிலும் உள்ள “சி” மற்றும் “டி” கால்வாய்களில் தூர்வாரும் பணிகளில் மீதமுள்ள 2,925 கிலோ மீட்டர் நிலத்துக்கு ரூ.13 கோடியே 80 லட்சம் ஒதுக்கீட்டில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும்.
> முதலமைச்சரின் சூரியசக்தி பம்பு செட்டுகள் திட்டம் ரூ.24 கோடி செலவில் 1000 விவசாயிகளுக்கு வழங்கப்படும்.
> நெல், மக்காச்சோளம், வாழை, நிலக்கடலை, உளுந்து ஆகிய பயிர்களுக்கு விதைப்பு முதல் அறுவடை முடிய உள்ள சாகுபடியில் இயந்திர மயமாக்குதலை கடைபிடிக்க 1,500 ஏக்கர் பரப்பளவில் ரூ. 3 கோடி ஒதுக்கீட்டில் இயந்திர சாகுபடி செயல் விளக்கத் திடல்கள் (Demonstration Plots) அமைக்கப்படும்.
> ரூ. 20 கோடி மதிப்பீட்டில் 1000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்புக் கிடங்குகள் 9 ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் அமைக்கப்படும்.
> 56 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் ரூ.39 கோடியே 20 லட்சம் செலவில் மின்னணு தேசிய வேளாண் சந்தையுடன் புதியதாக ஒருங்கிணைத்து, விவசாயிகள் தேசிய அளவில் வர்த்தகம் செய்து, கூடுதல் வருமானம் பெற வழிவகை செய்யப்படும்.
> 50 உழவர் சந்தைகளில் ரூ.8 கோடி மதிப்பீட்டில் கூடுதல் வசதிகள் ஏற்படுத்துதல்
> வட்டாரந்தோறும் தேர்வு செய்யப்பட்ட பொது சேகரிப்பு மையங்களில் வேளாண் வர்த்தகம் நடத்திட ஏற்பாடு செய்யப்படும்.
> ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு பொருளீட்டுக் கடன் ரூ.10 லட்சம் வரை வழங்கப்படும்.
> தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மூலம் புதிய கண்டுபிடிப்புக்காக டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிதியாக ரூ 1 கோடி ஒதுக்கீடு என்பது உள்ளிட்ட புதிய திட்டங்கள் தமிழக வேளாண் பட்ஜெட் 2025-ல் இடம்பெற்றுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT