Published : 09 Mar 2025 12:20 PM
Last Updated : 09 Mar 2025 12:20 PM
சென்னை சென்ட்ரல் - கூடூர் மார்க்கத்தில், பொன்னேரி - கவரைப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே பொறியியல் பணி நடக்கவுள்ளதால், 25 மின்சார ரயில்களின் சேவையில் நாளை (மார்ச் 10) மாற்றம் செய்யப்பட உள்ளது.
இது தொடர்பாக சென்னை ரயில்வே கோட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை சென்ட்ரல் - சூலூர்பேட்டைக்கு மார்ச் 10ம் தேதி (நாளை) காலை 8.35, 10.15, நண்பகல் 12.10, மதியம் 1.05 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன. சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டிக்கு இதேநாளில் காலை 9.00, 9.30, 10.30, முற்பகல் 11.35 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன.
அதேபோல், கடற்கரை - கும்மிடிப்பூண்டிக்கு காலை 9.40, நண்பகல் 12.40 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்களும், கும்மிடிப்பூண்டி - கடற்கரைக்கு காலை 10.55 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயிலும் ரத்து செய்யப்பட உள்ளன.
கும்மிடிப்பூண்டி - சென்ட்ரலுக்கு முற்பகல் 11.25, 12.00, மதியம் 1.00, பிற்பகல் 2.30, 3.15 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன. சூலூர்பேட்டை - சென்ட்ரலுக்கு பகல் 11.45, மதியம் 1.15, பிற்பகல் 3.10, இரவு 9.00 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படும். இதுதவிர, நெல்லூரிலிருந்து சூலூர்பேட்டைக்கு மாலை 6.45 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயிலும் ரத்து செய்யப்பட உள்ளது.
பகுதி ரத்து: செங்கல்பட்டு - கும்மிடிப்பூண்டிக்கு மார்ச் 10-ம் தேதி காலை 9.55 மணிக்கு புறப்படும் மின்சார ரயில், கடற்கரை - கும்மிடிப்பூண்டி இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது. கும்மிடிப்பூண்டி - தாம்பரத்துக்கு இதேநாளில் பிற்பகல் 3 மணிக்கு புறப்பட வேண்டிய மின்சார ரயில், கும்மிடிப்பூண்டி - கடற்கரை இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது.
ரத்து செய்யப்படும் மின்சார ரயில்களுக்குப் பதிலாக, அன்றைய தினம், சென்ட்ரலில் இருந்து பொன்னேரி, எண்ணூர், மீஞ்சூர் இடையே பாசஞ்சர் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். இது தவிர, கடற்கரை - பொன்னேரிக்கு ஒரு பாசஞ்சர் சிறப்பு ரயில் இயக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு ள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT