Published : 05 Mar 2025 12:58 AM
Last Updated : 05 Mar 2025 12:58 AM

தேமுதிகவுக்கு மாநிலங்களவை ‘சீட்' ஒதுக்குவதாக ஒப்பந்தம் இல்லை: இபிஎஸ் திட்டவட்டம்

சேலம்: சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் திமுகவை வீழ்த்த தயா​ராக இருக்​கிறோம். எங்​களுக்கு ஒரே எதிரி திமுக​தான், மற்ற கட்​சிகள் எங்​களுக்கு எதிரி கிடை​யாது என்று பாஜக உடனான கூட்​டணி குறித்து கேள்விக்​கு, அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி பதில் அளித்​தார்.

சேலம் மாவட்​டம் ஆத்​தூரில் மாற்​றுக் கட்​சி​யினர் அதி​முக​வில் இணை​யும் நிகழ்ச்சி கட்​சி​யின் பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி தலை​மை​யில் நேற்று நடை​பெற்​றது. பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் பழனி​சாமி கூறிய​தாவது: இலங்கை கடற்​படை​யின​ரால் தமிழக மீனவர்​கள் கைது செய்​யப்​படும் பிரச்​சினைக்​கு, இந்​தி​யா-இலங்கை அரசுகள் கலந்​துபேசி, நிரந்​தரத் தீர்​வு​காண வேண்​டும்.

தரு​மபுரி ஆட்​சி​யர், எஸ்​.பி.யை திமுக மாவட்​டச் செய​லா​ளர் மிரட்​டும் ஆடியோ அதிர்ச்​சி​யளிக்​கிறது. உயர் அதி​காரி​களுக்கே இந்த நிலை என்​றால், சாதாரண அலு​வலர்​கள் மற்​றும் பொது​மக்​களின் நிலை என்ன? 2026 சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் திமுகவை வீழ்த்த தயா​ராக இருக்​கிறோம். எங்​களுக்கு ஒரே எதிரி திமுக​தான். மற்ற கட்​சிகள் எதிரி கிடை​யாது. தேர்​தலில் வாக்​கு​கள் சிதறாமல் பதி​வாக வேண்​டும். மக்​கள் விரோத திமுக ஆட்சி அகற்​றப்பட வேண்​டும். தேர்​தலுக்கு இன்​னும் ஓராண்டு இருக்​கிறது. அப்​போது​தான் யார், யாருடன் இருக்​கிறார்​கள் என்​பது தெரி​யும். கூட்​டணி தொடர்​பாக யூகத்​தின் அடிப்​படை​யில் பதில் அளிக்க முடி​யாது.

திமுகவினர் ஊழல்... நாடாளு​மன்​றத் தொகு​தி​கள் மறுசீரமைப்பு தொடர்​பான அனைத்​துக் கட்சி கூட்​டத்​தில் அதி​முக பங்​கேற்​று, தனது கருத்துகளைத் தெரிவிக்​கும். தமிழகத்​துக்கு மத்​திய அரசு நிதி ஒதுக்​காதது, நீட் தேர்வு உள்​ளிட்ட விவ​காரங்​கள் தொடர்​பாக திமுக எம்​.பி.க்​கள் நாடாளு​மன்​றத்​தில் குரல் கொடுப்​ப​தில்​லை. மத்​திய அரசை எதிர்ப்​ப​தாக திமுக பாசாங்கு செய்​கிறது. உண்​மையாக எதிர்த்​தால் திமுக​வினர் வீட்​டில் ‘ரெய்​டு’ நடை​பெறும். அந்த அளவுக்கு திமுக​வினர் ஊழல் செய்​துள்​ளனர். இவ்​வாறு பழனி​சாமி கூறி​னார்.

தேமு​தி​க​வுக்கு மாநிலங்​களவை ‘சீட்' ஒதுக்​கு​வ​தாக ஒப்​பந்​தம் இல்லை: தேமு​தி​க​வுக்கு மாநிலங்​களவை சீட் கொடுக்​கப்​படு​வது தொடர்​பாக பழனி​சாமி​யிடம் செய்​தி​யாளர்​கள் கேட்​ட​போது, “தே​மு​தி​க​வுக்கு மாநிலங்​களவை சீட் கொடுப்​ப​தாக நாங்​கள் சொன்​னோ​மா? அப்​படி ஒரு ஒப்​பந்​தம் இல்லை. யாரோ கேட்​பது குறித்து என்​னிடம் கேட்​காதீர்​கள்” என்​றார். இதுகுறித்து தேமு​திக பொதுச் செய​லா​ளர் பிரேமல​தா​விடம் சென்​னை​யில் நிருபர்​கள் கேட்​ட​போது, பதில் அளிக்க மறுத்​து​விட்​டார். தேமு​திக நிறு​வனர் விஜய​காந்த் பெயரிலான எக்ஸ் தளத்​தில், ‘சத்​தி​யம் வெல்​லும், நாளை நமதே’ என்ற கருத்து பதி​விடப்​பட்​டு, உடனடி​யாக நீக்​கப்​பட்​டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x