Published : 03 Mar 2025 05:35 AM
Last Updated : 03 Mar 2025 05:35 AM

மத்திய பல்கலை. சேர்க்கைக்கான க்யூட் நுழைவுத் தேர்வு மே 8-ல் தொடக்கம்

சென்னை: மத்திய பல்கலைக்​கழகங்​களில் இளநிலை படிப்பு​களில் சேரு​வதற்கான க்யூட் தேர்வு கணினி வழியில் மே 8-ல் தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை நடைபெற உள்ளதாக என்டிஏ அறிவித்​துள்ளது.

நாடு முழு​வதும் உள்ள மத்திய பல்கலைக்​கழகங்கள் மற்றும் அதன்​கீழ் இயங்​கும் கல்லூரி​களில் இளநிலை, முது​நிலை பட்டப்​படிப்பு​களில் சேர பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்​வில் (க்யூட்) தேர்ச்சி பெறவேண்​டும். இந்த தேர்வை தேசிய தேர்​வுகள் முகமை (என்​டிஏ) ஆண்டு​தோறும் நடத்தி வருகிறது. அதன்​படி, அடுத்த கல்வி​யாண்​டில் (2025-26) இளநிலை படிப்பு​களுக்கான க்யூட் நுழைவுத் தேர்வு வரும் மே 8 முதல் ஜூன் 1-ம் தேதி வரை நடத்​தப்பட உள்ளது. இதற்கான இணையதள விண்​ணப்ப பதிவு தற்போது தொடங்​கப்​பட்​டுள்​ளது.

இதையடுத்து விருப்​ப​முள்​ளவர்கள் https://cuet.nta.nic.in/ என்ற இணையதளம் வழியாக மார்ச் 22-ம் தேதிக்​குள் விண்​ணப்​பிக்க வேண்​டும். விண்​ணப்ப கட்டணம் செலுத்த மார்ச் 23-ம் தேதி கடைசி நாளாகும். தொடர்ந்து விண்​ணப்​பங்​களில் மார்ச் 24, 25, 26-ம் தேதி​களில் திருத்​தங்கள் மேற்​கொள்​ளலாம். இதில் ஏதேனும் சிரமங்கள் இருப்​பின் 011-40759000 என்ற தொலைபேசி எண் அல்லது cuet-ug@nta.ac.in என்ற மின்னஞ்சல் வழியாக தொடர்பு கொள்​ளலாம். க்யூட் தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் நடத்​தப்பட உள்ளது.

நடப்​பாண்டு க்யூட் நுழைவுத் தேர்வு விதி​முறை​களில் பல்வேறு மாற்​றங்கள் செய்​யப்​பட்​டுள்ளன. அதன்​படி, மாணவர்கள் 12-ம் வகுப்​பில் எந்த பாடம் படித்​திருந்​தா​லும், விரும்பிய பாடத்​தில் தேர்வு எழுதலாம். அதேபோல், ஒருவர் அதிகபட்சம் 5 பாடங்கள் வரை விண்​ணப்​பிக்க வாய்ப்பு வழங்​கப்​படு​கிறது. மேலும், ஹால்​டிக்​கெட் வெளி​யீடு உட்பட கூடு​தல் ​விவரங்களை /www.nta.ac.in/ என்ற தளத்​தில் அறிய​லாம் என்று என்டிஏ தெரி​வித்​துள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x