Published : 03 Mar 2025 05:29 AM
Last Updated : 03 Mar 2025 05:29 AM

2025 பிறந்து 2 மாதங்கள் கடந்த பின்பும் வருடாந்திர தேர்வு அட்டவணையை வெளியிடாத டிஆர்பி: ஆசிரியர்கள் அதிருப்தி

சென்னை: இந்த ஆண்டு பிறந்து 2 மாதங்களை கடந்​தும் இதுவரை வருடாந்திர தேர்வு அட்ட​வணையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளி​யிடாத​தால் இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்​தவர்​களும், பிஎட். பட்ட​தா​ரி​களும் அதிருப்தி அடைந்​துள்ளனர்.

அரசு பள்ளி இடைநிலை ஆசிரியர்​கள், பட்ட​தாரி மற்றும் முதுகலை பட்ட​தாரி ஆசிரியர்​கள், சிறப்​பாசிரியர்​கள், வட்டார கல்வி அதிகாரிகள் (பிஇஓ) அரசு பாலிடெக்​னிக் கல்லூரி விரிவுரை​யாளர்​கள், அரசு கலை அறிவியல் கல்லூரி, அரசு சட்டக்​கல்​லூரி மற்றும் அரசு பொறி​யியல் கல்லூரி உதவி பேராசிரியர்​கள், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரை​யாளர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) வாயிலாக தேர்வு செய்​யப்​படு​கிறார்​கள். மேலும், டெட் எனப்​படும் ஆசிரியர் தகுதித் தேர்​வை​யும் டிஆர்​பி-​தான் நடத்து​கிறது.

ஓராண்​டில் என்னென்ன போட்​டித்​தேர்​வுகள் நடத்​தப்​படும், அவற்றுக்கான அறிவிப்புகள் எப்போது வெளி​யிடப்​படும், தேர்​வுகள் எப்போது நடத்​தப்​படும் என்பன உள்ளிட்ட அனைத்து விவரங்​களும் அடங்கிய வருடாந்திர தேர்வு அட்ட​வணையை டிஆர்பி ஆண்டு​தோறும் வெளி​யிட்டு வருகிறது. அந்த வகையில் 2025-ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு அட்ட​வணை​யில் கடந்த ஆண்டு டிசம்பர் அல்லது இந்த ஆண்டு ஜனவரி முதல் வாரத்​தில் வெளி​யிட்​டிருக்க வேண்​டும். ஆனால், 2025-ம் ஆண்டு பிறந்து 2 மாதங்கள் ஆகியும் இன்னும் வெளி​யிடாமல் டிஆர்பி காலம்​தாழ்த்தி வருகிறது. இதனால், அரசு பள்ளி ஆசிரியர் தேர்​வுகள் மற்றும் டெட் தேர்​வுக்கு தீவிரமாக படித்​துக்​கொண்​டிருக்​கும் ஆசிரியர்கள் வேதனை அடைந்​துள்ளனர்.

இதுகுறித்து இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்த ஆசிரியர்கள் மற்றும் பிஎட் முடித்த பட்ட​தா​ரி​கள், முதுகலை பட்ட​தா​ரிகள் கூறிய​தாவது: டிஎன்​பிஎஸ்சி 2025-ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு அட்ட​வணையை கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்​திலேயே வெளி​யிட்டு​விட்​டது. ஆனால், டிஆர்பி இன்னும் வெளி​யிட​வில்லை. 2025 பிறந்து மார்ச் மாதம் வரவுள்ள நிலை​யில் வருடாந்திர தேர்வு அட்டவணை எப்போது வெளி​யாகும் என்பது தெரி​யாமல் தவிக்​கிறோம்.

இதுகுறித்து டிஆர்பி ஹெல்ப்லைன எண்ணில் தொடர்​பு​கொண்டு கேட்​டால், ‘விரை​வில் வெளி​யாகும் இணையதளத்தை பாருங்​கள்' என்று சொன்ன பதிலையே சொல்​கிறார்​கள். டெட் தேர்வு கடந்த 2023-ம்ஆண்டு நடத்​தப்​பட்​டது. கடந்த ஆண்டு நடத்​தவில்லை. இதனால் டெட் தேர்வை எதிர்​பார்த்து ஒரு லட்சத்​துக்​கும் மேற்​பட்ட ஆசிரியர்கள் காத்​திருக்​கின்​றனர். ஆனால் தேர்வு அட்ட​வணையை வெளி​யிடாமல் டிஆர்பி காலதாமதம் செய்​கிறது. இவ்வாறு அவர்கள் அதிருப்தி தெரி​வித்​தனர்.

கடந்த 2024-ம் ஆண்டு டிஆர்பி வெளி​யிட்ட தேர்வு அட்ட​வணை​யில் டெட், முதுகலை பட்​ட​தாரி ஆசிரியர் தேர்வு, ​மாவட்ட ஆசிரியர் ப​யிற்சி நிறுவன ​விரிவுரை​யாளர் தேர்வு ஆகிய 3 தேர்​வு​களுக்கான அறி​விப்பு​கள்கூட இதுவரை வெளி​யிடப்​பட​வில்லை என்பது குறிப்​பிடத்​தக்​கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x