Published : 03 Mar 2025 01:58 AM
Last Updated : 03 Mar 2025 01:58 AM

தமிழ்நாடு காங்கிரஸை வலிமைப்படுத்த 42 நிர்வாகிகளிடம் கருத்துகேட்ட மேலிட பொறுப்பாளர்

தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட கிரிஷ் சோடங்கர், சென்னை சத்தியமூர்த்தி பவனில், மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, அகில இந்திய செயலாளர் சூரஜ் ஹெக்டே, மூத்த தலைவர்கள் தங்கபாலு, கே.எஸ்.அழகிரி, கிருஷ்ணசாமி, திருநாவுக்கரசர் உள்ளிட்டோருடன் நேற்று ஆலோசனை நடத்தினர். படம்: எஸ்.சத்தியசீலன்

சென்னை: தமிழ்​நாடு காங்​கிரஸை வலிமைப்​படுத்துவது குறித்து கட்சி​யின் 42 நிர்வாகிகளிடம் காங்​கிரஸ் மேலிட பொறுப்​பாளர் கிரிஷ் சோடங்கர் நேற்று தனித்​தனியே கருத்துகளை கேட்​டறிந்​தார்.

தமிழ்​நாடு காங்​கிரஸில், மாநிலத் தலைமைக்கு எதிராக அண்மை​யில் 20-க்​கும் மேற்​பட்ட மாவட்ட காங்​கிரஸ் தலைவர்கள் எம்.எஸ்​.​திர​வியம் தலைமை​யில் டெல்லி சென்று, தமிழகத் தலைவர் செல்​வப்​பெருந்​தகையை மாற்​றக்​கோரி கட்சி​யின் தமிழக மேலிட பொறுப்​பாளர் கிரிஷ் சோடங்கரை சந்தித்து புகார் அளித்​தனர்.
இந்நிலையில், தமிழ்​நாடு காங்​கிரஸின் மேலிட பொறுப்​பாளராக அண்மையில் நியமிக்கப்பட்ட கிரிஷ் சோடங்கர் நேற்று முன்​தினம் சென்னை வந்தார். அவரை மாநிலத் தலைவர் செல்​வப்​பெருந்​தகை, அகில இந்திய காங்​கிரஸ் செயலாளர் சூரஜ் ஹெக்டே உள்ளிட்​டோர் வரவேற்​றனர்.

அதனைத் தொடர்ந்து கட்சி​யின் முன்​னாள் மாநிலத் தலைவர்கள் கிருஷ்ணசாமி, கே.எஸ்​.அழகிரி, கே.வி.தங்​கபாலு, சு.திருநாவுக்​கரசர் மற்றும் காங்​கிரஸ் எம்.பி.க்​கள், எம்எல்​ஏக்​கள், அகில இந்திய செயலா​ளர்கள் உள்ளிட்ட கட்சி​யின் உயர்​மட்ட குழு​வைச் சேர்ந்த 42 பேரை தனித்​தனியே சந்தித்து விவா​தித்​தார். பின்னர் அவர் டெல்லி புறப்​பட்டு சென்​றார்.

செல்​வப்​பெருந்தகை கூறும்​போது, “தமிழகத்​தில் காங்​கிரஸை வளர்ப்​பது, வலிமைப்​படுத்து​வது, 2026 தேர்​தலுக்கு தயாராவது ஆகிய பொருள்​களில் ஆலோசனை நடத்​தப்​பட்​டது. இதில் பங்கேற்ற தலைவர்​கள், கட்சி வளர்ச்சி சார்ந்த கருத்துகளை தெரி​வித்​துள்ளனர்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x