Published : 03 Mar 2025 01:50 AM
Last Updated : 03 Mar 2025 01:50 AM

என்னை பாலியல் குற்றவாளி என எப்படி கூறலாம்? - கனிமொழியின் விமர்சனத்துக்கு பதிலளித்து சீமான் கேள்வி

சென்னை: வழக்கு விசாரணை நடந்து கொண்​டிருக்​கும்​போது என்னை பாலியல் குற்​றவாளி என எப்படி கூறலாம் என நாம் தமிழர் கட்சி​யின் தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் கேள்வி எழுப்​பி​யுள்​ளார்.

நடிகை விஜயலட்​சுமி விவகாரத்​தில் சீமான் தெரி​வித்த கருத்துகளை விமர்​சித்த திமுக எம்.பி. கனிமொழி “பெண்களை இதைவிட கேவலமாக பேச முடி​யாது. இதைக்​கேட்டுக் கொண்டு அவரது வீட்​டிலும், அக்கட்​சி​யிலும் பெண்கள் எப்படி சகித்​துக் கொண்டு இருக்​கிறார்​கள்?” என்று கேள்வி எழுப்​பி​யிருந்​தார்.

இதுதொடர்பாக சென்னை​யில் செய்தி​யாளர்​களிடம் சீமான் கூறிய​தாவது: பொறுப்புள்ள பதவி​களில் இருக்​கும் அவர்​களிடம் திருப்பி நான் கேள்வி எழுப்​பினால் பதில் இருக்​குமா, என்னைப்​பற்றி என் கட்சி​யில் இருக்​கும் பெண்​கள்​தான் சொல்ல வேண்​டும். அவர் சொல்​லக்​கூடாது. குறிப்பாக திமுக சொல்​லக்​ கூடாது. வழக்கு விசாரணை நடந்து கொண்​டிருக்​கும்​போது என்னை பாலியல் குற்​றவாளி என்ற குற்​றச்​சாட்டை எப்படி சுமத்​தலாம். அவர் ஒன்றும் நீதிபதி கிடை​யாது.

அண்ணா பல்கலைக்கழக மாணவி, பொள்​ளாச்சி பாலியல் கொடுமை​கள், மாணவி மதி விவகாரம், மனநலம் பாதிக்​கப்​பட்ட பெண்​ணுக்கு ஏற்பட்ட பாலியல் வன்கொடுமை, பள்ளிச் சிறுமிகளை ஆசிரியர்​கள், தாளாளர்கள் துன்​புறுத்​தலுக்கு உள்ளாக்குவது உள்ளிட்ட பிரச்​சினைகள் பற்றி கனிமொழி ஏன் வாய் திறக்க​வில்லை. நடிகை விஜயலட்​சுமி ஒரு பாலியல் தொழிலாளி. அதற்கு ஆதாரம் என்னிடம் உள்ளது.

இவ்விவ​காரத்​தில் நான் 15 ஆண்டுகள் கண்ணி​யமாக இருந்த​போது இவர்கள் ஏன் எதுவும் பேசவில்லை. ஏனென்​றால், அந்நடிகை மட்டுமே பெண். எங்கள் வீட்​டில் இருப்​பவர்கள் எல்லாம் பெண்கள் இல்லை. அப்படித்​தானே. என்னப்​பற்றி பேச இவர்​களுக்கு தகுதி இல்லை. முதலில் அவர்கள் தலைமை பண்புடன் பேசட்டும். பின் நான் கண்ணி​யத்​துடன் பேசுகிறேன். பொறுப்​பில்​லாமல் மகிழ்ச்​சியை அனுபவி என்று பெரி​யார் சொன்னதைத் தானே நான் செய்திருக்​கிறேன். அதில் என்ன பிரச்​சினை அவர்​களுக்கு?

இவ்வாறு 15 ஆண்டு​காலமாக தொடரும் பிரச்​சினையை முடிவுக்கு கொண்டுவர வேண்​டும் என்று​தான் வழக்கு தொடுத்​தேன். ஆனால் அதை ஆட்சி​யாளர்கள் விரும்ப​வில்லை. வழக்கை இழுக்க நினைக்​கின்​றனர். என்னை சமாளிக்க முடி​யாமல், என் மீது வேண்டு​மென்றே அவதூறு சுமத்து​கின்​றனர். இதற்​கெல்​லாம் ஒரு முற்றுப்புள்ளி விரை​வில் வைக்​கப்​படும். இவ்வாறு அவர் கூறினார்.

விஜயலட்​சுமி கண்ணீர்: இந்நிலை​யில் தன்னை பாலியல் தொழிலாளி என குறிப்​பட்​டதற்கு சீ​மானுக்கு நடிகை ​விஜயலட்​சுமி கண்​டனம் தெரி​வித்​துள்ளார். இதற்கு ப​திலளித்து அவர் வெளி​யிட்ட வீடியோ ப​தி​வில் கண்​ணீர் மல்க கருத்து தெரி​வித்​துள்​ளார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x