Published : 03 Mar 2025 01:38 AM
Last Updated : 03 Mar 2025 01:38 AM

மத்திய அரசை கண்டித்து இன்று​முதல் தொகுதிதோறும் பொதுக்கூட்டம்: துணை முதல்வர் உதயநிதி அறிவிப்பு

சென்னை: திமுக இளைஞரணி சார்​பில் மத்திய அரசை கண்டித்து இன்று​ முதல் தொகு​திதோறும் பொதுக்​கூட்டம் நடத்​தப்​படும் என துணை முதல்​வரும் அக்கட்​சி​யின் இளைஞரணி செயலா​ள​ருமான உதயநிதி அறிவித்​துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்​துள்ள அறிக்கை​: திமுக இளைஞரணி​யின் மாவட்ட, மாநகர, மாநில அமைப்​பாளர், துணை அமைப்​பாளர்கள் ஆலோசனை கூட்​டம் அன்மையில் நடந்தது. இதில் நிறைவேற்​றப்​பட்ட தீர்​மானத்​தின் அடிப்​படை​யில், புதிய கல்விக்​கொள்கை மூலம் இந்தியை திணிக்​கும், நிதி​நிலை அறிக்கை​யில் தமிழகம் என்ற பெயரை முற்றி​லுமாக புறக்​கணித்து நிதிப் பகிர்​வில் பாரபட்சம் காட்டும், தொகுதி மறுசீரமைப்​பில் தமிழகத்தை வஞ்சித்து அநீதி இழைக்​கும் மத்திய அரசை கண்டிக்​கும் வகையில் சட்டப்​பேரவை தொகு​திதோறும் கண்டனப் பொதுக்​கூட்​டங்கள் நடைபெறுகின்றன.

இக்கூட்​டத்​தில் முதன்​மைப் பேச்​சாளர் ஒருவர், இளம் பேச்​சாளர் ஒருவர் என தொகு​திக்கு இரண்டு பேர் பேசவுள்​ளனர். அவர்​கள், மாநில உரிமை​களுக்கு எதிராக செயல்​படும் மத்திய அரசைக் கண்டித்​தும், 72-வது பிறந்​தநாள் காணும் முதல்வர் மு.க.ஸ்​டா​லின் ஆட்சி​யின் சாதனைகள் குறித்​து பேசுவார்​கள். அணி நிர்​வாகி​கள், மக்களுக்கு விழிப்பு​ணர்வு ஊட்டும் வகையில் அன்பகத்​தில் தயாரிக்​கப்​பட்​டுள்ள துண்​டறிக்கையை தொகுதி மக்களுக்கு வீடு வீடாகச் சென்று விநியோகித்து, அவர்களை கூட்​டத்​தில் பங்கேற்க செய்ய வேண்​டும். தமிழ் மக்களின் உரிமைக்கு குரல் எழுப்​பிடும் வகையிலும், உரிமையை தரமறுக்​கும் மத்திய அரசைக் கண்டிக்​கும் வகையிலும் இந்த பொதுக்​கூட்​டங்களை எழுச்​சி​யுடன் நடத்​து​மாறு இளைஞர் அணி நிர்​வாகிகள் கேட்டுக்​கொள்​ளப்​படு​கிறார்​கள். இவ்வாறு அறிக்கை​யில் உதயநிதி கூறி​யுள்​ளார். இந்த அறி​விப்​பின்​படி, இன்​று​முதல் 10-ம் தேதி வரை 67 இடங்​களில் ​முதல்​கட்​டமாக பொதுக்​கூட்​டங்​கள் நடத்​தப்​பட உள்​ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x