Last Updated : 01 Mar, 2025 12:57 PM

 

Published : 01 Mar 2025 12:57 PM
Last Updated : 01 Mar 2025 12:57 PM

வேண்டாம் செந்தில்... மீண்டும் மூர்த்தி! - காய் நகர்த்தி காரியம் முடித்தாரா ராஜேஸ்குமார் எம்.பி?

திமுக தலைவர் ஸ்டாலினின் திமுக கட்டமைப்பு சீரமைப்பு நடவடிக்கையில் நாமக்கல் மேற்கு மாவட்டச் செயலாளர் மதுரா செந்தில் நீக்கப்பட்டு அந்த இடத்தில் முன்னாள் எம்எல்ஏ-வும் முன்னாள் மாவட்டச் செயலாளருமான கே.எஸ்.மூர்த்தி மேற்கு மாவட்ட பொறுப்பாளராக அமர்த்தப்பட்டுள்ளார்.

தன்னை உதயநிதியின் ஆதரவாளராகக் காட்டிக் கொண்டு டாம்பீகம் செய்துவந்த மதுரா செந்தில் மா.செ. பதவியிலிருந்து தூக்கப்பட்டதை மாவட்ட திமுக-வினர் இன்னமும் வியந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

செந்​தில் மீது தலைமைக்கு அப்படி என்ன வருத்தம் என மாவட்ட திமுக​வினர் சிலரிடம் பேசினோம். “நாமக்கல் மேற்கு மாவட்​டத்​திற்​குள் பரமத்தி வேலூர், திருச்​செங்​கோடு, குமார​பாளையம் ஆகிய 3 சட்டப்​பேரவை தொகு​திகள் உள்ளன. 2021 தேர்​தலில் பரமத்தி வேலூர், குமார​பாளையம் தொகு​தி​களில் திமுக தோற்றுப் போனது. திருச்​செங்​கோட்​டில் மட்டும் கூட்டணி கட்சியான கொமதேக குறைந்த வித்​தி​யாசத்​தில் வென்​றது.

பரமத்தி வேலூர் தொகு​தி​யில் தொடர்ந்து 2-வது முறையாக போட்​டி​யிட்ட நாமக்கல் மேற்கு மாவட்டச் செயலாளர் கே.எஸ்​.மூர்த்தி​யாலேயே ஜெயிக்க முடிய​வில்லை” என்று சொன்ன அவர்​கள், “இந்த அதிருப்​தி​யால் கே.எஸ்​.மூர்த்தியை மாவட்டச் செயலாளர் பொறுப்​பில் இருந்து நீக்​கியது தலைமை. அவருக்​குப் பதில், முன்​னாள் மாவட்ட இளைஞரணி செயலா​ளரான மதுரா செந்​தில் மாவட்டச் செயலா​ளராக தேர்​வா​னார்.

இதனிடையே, மாவட்டச் செயலாளர் பதவியை பிடிக்க மதுரா செந்​தில் காய்களை நகர்த்திய சமயத்​தில் நாமக்கல் கிழக்கு மாவட்​டத்​தைச் சேர்ந்த நாமக்கல் தொகுதி எம்எல்​ஏ-வான பெ.ராமலிங்​க​மும் எல்லை தாண்டி செந்​தி​லுக்​குப் போட்​டியாக மா.செ. பதவிக்கு மனு போட்​டார். இதன் பின்னணி​யில் கிழக்கு மாவட்ட பொறுப்​பாளரான கே.ஆர்​.என்​.​ராஜேஸ்​கு​மார் எம்.பி இருந்​ததாக அப்போது பேச்சு அடிபட்​டது. இதனால் மதுரா செந்​தி​லுக்​கும் ராஜேஸ்​கு​மாருக்​கும் இடையே உரசல் ஏற்பட்​டது. மதுரா செந்​தில் மாவட்டச் செயலா​ளராக வந்த பிறகு இந்த உரசல் மேலும் உக்ர​மானது.

ஒரு கட்டத்​தில், ராஜேஸ்​கு​மார் மீது மதுரா செந்​தில் அடுக்​கடுக்கான புகார்களை கட்சித் தலைமை​யின் கவனத்​துக்​குக் கொண்டு சென்​றார். இதையெல்​லாம் சகித்​துக் கொண்ட உதயநி​தி​யின் குட்​புக்​கில் இருக்​கும் ராஜேஸ்​கு​மார், தனது செல்​வாக்கை பயன்​படுத்தி இரண்டு மாதங்​களுக்கு முன்பு, முன்​னாள் மாவட்டச் செயலா​ளரான கே.எஸ்​.மூர்த்தியை முதல்​வரிடம் நேரில் அழைத்​துச் சென்று பேசவைத்​துள்ளார். இந்தச் சந்திப்​புக்​குப் பிறகு​தான் மதுரா செந்​தில் நீக்​கப்​பட்​டுள்​ளார்” என்றனர்.

ஈரோடு கிழக்​கில் ஈ.வி.கே.எஸ்​.இளங்​கோவன் போட்​டி​யிட்ட சமயத்​தில் அங்கு பிரச்​சா​ரத்​துக்​குச் சென்ற முதல்​வர், மதுரா செந்​திலை அழைத்து கட்சி வளர்ச்​சிப் பணிகளில் கவனம் செலுத்​தும்படி கண்டிப்புடன் சொன்ன​தாகச் சொல்​கிறார்​கள். அதன் பிறகும் மதுராவை பற்றி தலைமைக்கு திருப்​தியான ரிசல்ட் போகாத​தாலேயே இந்த மாற்றம் என்கிறார்​கள். இதில், மூர்த்தி​யும், செந்​தி​லும் ஒருங்​கிணைந்த நாமக்கல் மாவட்ட முன்​னாள் செயலா​ள​ரும் முன்​னாள் மத்திய இணையமைச்​சருமான காந்​திச்​செல்​வனின் வளர்ப்புகள் என்கிறார்​கள்.

“முன்பு நாமக்கல் மேற்கு மாவட்டச் செயலா​ள​ராக​வும் பரமத்தி வேலூர் எம்எல்​ஏ-​வாக​வும் இருந்த சமயத்​தில் அதிமுக அமைச்சர் தங்​கமணி​யுடன் மறைமுக நட்பில் இருந்து, ​தான் நினைத்த ​காரி​யங்களை ​சா​தித்​துக் ​கொண்​ட​வர் ​தானே இந்த மூர்த்தி” என இப்​போதே ​கொளுத்​திப் போட ஆரம்​பித்து​விட்​டார்​கள்​ மூர்த்தியின்​ ‘அன்பான’ எதிரிகள்​!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x