Published : 01 Mar 2025 08:46 AM
Last Updated : 01 Mar 2025 08:46 AM

நான் சொல்வதை கலெக்டர், எஸ்.பி. கேட்க வேண்டும்: திமுக மாவட்ட செயலாளர் ஆடியோ வைரல்

தருமபுரி: நான் சொல்வதை கலெக்​டர், எஸ்.பி. ஆகியோர் கேட்க வேண்​டும் என்று திமுக மாவட்டச் செயலாளர் பேசி​யதாக வெளி​யாகியுள்ள ஆடியோ, சமூக வலைதளங்​களில் வைரலாகி வருகிறது.

தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக செயலா​ளராக சில நாட்களுக்கு முன்பு தர்மச்​செல்வன் நியமிக்​கப்​பட்​டார். அவர் தலைமை​யில் நேற்று முன்​தினம் தருமபுரி​யில் கட்சி செயற்​குழுக் கூட்டம் நடந்​தது. இதில் தர்மச்செல்வன் பேசி​யதாக வெளியான ஆடியோ, சமூக ஊடகங்​களில் வைரலாகி வருகிறது. அந்த ஆடியோ​வில், “நான் சொல்வதை கலெக்​டர், எஸ்.பி. கேட்க வேண்​டும். அனைத்து நிர்​வாகங்​களும் நான் சொல்​வதைத் தான் கேட்க வேண்​டும். இங்கே கேம் ஆட இடம் கிடை​யாது. எவனும் கேம் ஆட முடி​யாது. ஆடினால் அவன் கதை முடிந்​தது. ‘நீ சொல்றதை கேட்​கலைனா, அதிகாரிகள் உள்ளிட்ட யாராக இருந்​தா​லும் உன் லெட்டர் பேடில் எனக்கு லெட்டர் கொடு’ என்று தலைவர் கூறி​யுள்​ளார்.

முன்பு எப்படி நடந்​திருந்​தா​லும் சரி, இனி அரசு நிர்​வாகங்​களில் நடக்​கும் அனைத்​தும் எனக்​கும், ஒன்றியச் செயலா​ளர்​களுக்​கும் தெரிய வேண்​டும். மாவட்ட பொறுப்பு அமைச்​சரிட​மும் இதுகுறித்து நான் தெரி​வித்து விடு​கிறேன்” என்று உள்ளது.

தலைவர்கள் கண்டனம்: இதற்கிடையில், திமுக மாவட்டச் செயலாளருக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கையில், திமுக அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் குறுநில மன்னர்களைபோல செயல்படுவதாகத் தெரிவித்து உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x