Published : 27 Feb 2025 07:40 AM
Last Updated : 27 Feb 2025 07:40 AM

அனைத்து கட்சிக் கூட்டத்தில் பாமக பங்கேற்கும்: அன்புமணி தகவல்

சேலம் / மதுரை: நாடாளு​மன்றத் தொகு​திகள் மறுவரையறை தொடர்பாக தமிழக அரசு நடத்​தும் அனைத்​துக் கட்சி ஆலோசனைக் கூட்​டத் தில் பாமக பங்கேற்​கும் என்று அக்கட்​சி​யின் தலைவர் அன்புமணி கூறினார்.

சேலத்​தில் நேற்று நடைபெற்ற பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி​யின் இல்ல திருமண விழா​வில் அன்புமணி பேசும்​போது, “கல்​வியை கட்ட​ணமின்றி தர வேண்​டியது அரசின் கடமை. ஆனால், தனியார் பள்ளி​களின் எண்ணிக்கை அதிகரித்​துள்ளது. ஒரு மொழி என்பது​தான் பாமக​வின் மொழிக் கொள்கை. பிற மொழிகளைக் கற்ப​தில் தவறில்லை, ஆனால் திணிக்கக் கூடாது. மேலும், மும்​மொழிக் கொள்​கையை ஏற்றுக்​கொண்​டால்​தான் நிதி தருவோம் என்பதும் தவறு” என்றார்.

பின்னர் செய்தி​யாளர்​களிடம் அன்புமணி கூறிய​தாவது: தொகுதி மறுவரை​யின்​போது தமிழக மக்கள​வைத் தொகு​தி​களின் எண்ணிக்கை குறைக்​கப்​படும் என்ற அச்சம் நிலவு​கிறது. இதைப் போக்க மத்திய அரசு முயற்சி செய்ய வேண்​டும். தமிழகத்​தின் உரிமைகளை நாம் என்றும் இழந்​து​விடக் கூடாது. எனவே, நாடாளு​மன்றத் தொகு​திகள் மறுவரையறை தொடர்பாக தமிழக அரசு நடத்​தும் அனைத்​துக் கட்சி ஆலோசனைக் கூட்​டத்​தில் பாமக பங்கேற்​கும்.

தமிழக பட்ஜெட்​டில் கல்விக்கு ரூ.48 ஆயிரம் கோடி நிதி ஒதுக்​கப்​படு​கிறது. எனவே, மத்திய அரசு தரும் ரூ.2,500 கோடியை வேண்​டாம் என்று சொல்ல வேண்​டியது​தானே?” என்றார்.

சீமான் பங்கேற்கவில்லை… நாம் தமிழர் கட்சி​யின் தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் சேலத்​தில் செய்தி​யாளர்​களிடம் கூறியதாவது:

மொழிக் கொள்​கை​யில் மத்திய அரசு யார் பேச்​சை​யும் கேட்​காத​போது, அவர்களது பேச்சை நாம் எதற்கு கேட்க வேண்​டும். மக்கள்​தொகை அடிப்படை​யில் தொகு​தி​களைப் பிரித்தால், பிற மாநிலங்​களுக்கு அதிக தொகு​தி​களும், தமிழகத்​துக்கு குறைந்த எண்ணிக்கை​யிலும் தொகு​திகள் கிடைக்​கும். இதை அனைத்​துக் கட்சிகளும் ஒருமித்த குரலில் எதிர்க்க வேண்​டும். அதேநேரத்​தில், நாடாளு​மன்றத் தொகுதி மறுவரையறை தொடர்பாக தமிழக அரசு நடத்​தும் அனைத்​துக் கட்சி ஆலோசனைக் கூட்​டத்​தில் நாங்கள் பங்கேற்க மாட்​டோம். இவ்வாறு சீமான் கூறினார்.

புதிய தமிழக​மும் மறுப்பு: புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி மதுரை​யில் செய்தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது: நாடாளு​மன்றத் தொகுதி மறுவரையறை தொடங்காத நிலை​யில், தமிழகத்​தில் தொகு​தி​களின் எண்ணிக்கை குறை​யும் என்று எந்த அடிப்​படை​யில் முதல்வர் சந்தேகம் எழுப்பு​கிறார்? எனவே, அனைத்​துக் கட்சி ஆலோசனைக் கூட்​டத்​தில் புதிய தமிழகம் பங்கேற்​காது. மொழியை வைத்து அரசியல் செய்ய முடி​யாமல்​போன​தால், தொகுதி மறுவரையறை பிரச்​சினையை முதல்வர் கிளப்பி வருகிறார்.

தமிழக மக்கள் மீது இரு மொழிக் கொள்​கையை திணிப்பதை திமுக நிறுத்த வேண்​டும். இவ்​வாறு அவர்​ கூறினார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x