Published : 24 Feb 2025 03:15 PM
Last Updated : 24 Feb 2025 03:15 PM
விழுப்புரம்: திமுக விழுப்புரம் வடக்கு மாவட்ட பொறுப்பாளராக இருந்த டாக்டர் சேகர் அவைத்தலைவராகவும், அவைத்தலைவராக இருந்த செஞ்சி மஸ்தான் மாவட்டப் பொறுப்பாளராகவும் மியூச்சுவல் ட்ரான்ஸ்ஃபர் செய்து அக்கட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக பதவி வகித்த டாக்டர்.சேகருக்கு பதிலாக முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் அண்மையில் நியமிக்கப்பட்டார். டாக்டர்.சேகர் மாவட்ட பொறுப்பாளராக இருந்தபோது அவைத்தலைவராக செஞ்சி மஸ்தான் தேர்வு செய்யப்பட்டார்.
தற்போது மாவட்ட பொறுப்பாளராக செஞ்சி மஸ்தான் நியமிக்கப்பட்ட காரணத்தினால், விழுப்புரம் வடக்கு மாவட்ட அவைத்தலைவர் பொறுப்புக்கான தேர்தல் நடைபெற்றது.மீண்டும் மாவட்ட அவைத்தலைவராக டாக்டர்.சேகர் தேர்ந்தெடுக்கப்பட்டதாக திமுக தலைமை அறிவித்துள்ளது. அடுத்த மியூச்சுவல் டிரான்ஸ்பர் எப்போது தலைவரே என்பதே திமுகவினரின் முதன்மை கேள்வியாக உள்ளது?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT