Published : 10 Feb 2025 04:38 PM
Last Updated : 10 Feb 2025 04:38 PM

தவெக தலைவர் விஜய் உடன் பிரசாந்த் கிஷோர் சந்திப்பு

சென்னை: தவெக தலைவர் விஜய்யை, சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில், தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சந்தித்துப் பேசினார்.

ஐபாக் நிறுவனத்தின் மூலம், அரசியல் கட்சிகளுக்கு பல்வேறு தேர்தல் வியூகங்களை வகுத்து தருபவர் பிரசாந்த் கிஷோர். 2021-ம் ஆண்டுக்குப் பிறகு, எந்தவொரு அரசியல் கட்சிக்கும் அவர் தேர்தல் வியூகங்களை வகுத்து தரும் பணிகளில் ஈடுபடவில்லை. ஆனால், தவெக-வை தொடங்கிய பின்னர், விக்கிரவாண்டி மாநாட்டுக்கு முன்பாகவே, அக்கட்சியின் தலைவர் விஜய்யை சந்திக்க, பிரசாந்த் கிஷோர் நேரம் கேட்டிருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், அந்தச் சந்திப்பு நடைபெறவில்ல.

இந்நிலையில், விசிக-வில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா அண்மையில் தவெக-வில் இணைந்தார். அதைத்தொடர்ந்து, அக்கட்சியின் தேர்தல் பிரிவு பொதுச் செயலாளராக ஆதவ் அர்ஜுனா நியமிக்கப்பட்டிருந்தார். அதன் தொடர்ச்சியாகவே விஜய் - பிரசாந்த் கிஷோர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தச் சந்திப்பின்போது, ஜான் ஆரோக்கியசாமி, என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் உடன் இருந்ததாக கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x