Published : 02 Oct 2024 05:48 AM
Last Updated : 02 Oct 2024 05:48 AM

8 விரைவு ரயில்களில் 2 பெட்டிகள் கூடுதலாக இணைப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: சென்னை சென்ட்ரல் - திருப்பதி உட்பட 8 விரைவு ரயில்களில் தலா 2 பெட்டிகள் தற்காலிகமாக இணைந்து இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்ட்ரல் - திருப்பதி, திருப்பதி - சென்ட்ரல் சப்தகிரி விரைவு ரயில்களில் இன்று முதல் 15-ம் தேதிவரையில் தலா ஒரு முன்பதிவு இல்லாத பெட்டி, இருக்கை வசதி கொண்ட முன்பதிவு பெட்டி இணைத்து இயக்கப்படும்.

கோவை - திருப்பதி விரைவு ரயிலில் நாளைமுதல் 15-ம் தேதி வரையிலும், திருப்பதி - கோவை விரைவு ரயிலில் நாளைமுதல் 16-ம்தேதி வரையிலும் தலா ஒரு முன்பதிவு இல்லாத பெட்டி, இருக்கை வசதி கொண்ட முன்பதிவு பெட்டியும் இணைத்து இயக்கப்படும்.

திருப்பதி - எஸ்.எம்.வி.டி. பெங்களூரு விரைவு ரயிலில் அக்.4 முதல் 15-ம் தேதி வரையிலும், எஸ்.எம்.வி.டி. பெங்களூரு - திருப்பதி விரைவு ரயிலில் அக்.5 முதல் 16-ம் தேதி வரையிலும் தலா ஒரு முன்பதிவு இல்லாத பெட்டி, இருக்கை வசதியுள்ள முன்பதிவு பெட்டியும் இணைத்து இயக்கப்பட உள்ளது.

இதுபோன்று சென்னை சென்ட்ரல் - திருப்பதி இடையிலான விரைவு ரயிலில் இரு மார்க்கத்திலும் இன்று முதல் அக்.15-ம் தேதி வரை தலா ஒரு முன்பதிவு இல்லாத பெட்டி, இருக்கை வசதியுள்ள முன்பதிவு பெட்டி இணைக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x