Published : 07 Aug 2024 04:26 AM
Last Updated : 07 Aug 2024 04:26 AM

சென்னையில் 2 காவல் ஆய்வாளர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

சென்னை: சென்னையில் கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு உட்பட அனைத்து வகையான குற்றச் செயல்களையும் முற்றிலும் தடுத்து நிறுத்த போலீஸாருக்கு காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார். மேலும் காலை, மாலை, இரவு என அனைத்து நேரங்களிலும் ரோந்து செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் முறைகேடு, லஞ்சம், ஒரு தரப்புக்கு சாதகமாக செயல்படுதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் காவல்துறையினர் சிக்கினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆணையர் எச்சரித்து இருந்தார்.

இந்நிலையில், மாம்பலம் காவல் நிலைய ஆய்வாளர் முனியசாமி, பாண்டிபஜார் காவல் நிலைய ஆய்வாளர் புகழேந்தி ஆகிய இருவர் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதையடுத்து இருவரையும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி ஆணையர் அருண் உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x